கணவனை விட்டுவிட்டு மனைவி மட்டும் யாத்திரை போகலாமா?
மகாபெரியவா சொன்ன தீர்ப்பு! கணவனை விட்டுவிட்டு மனைவி மட்டும் யாத்திரை போகலாமா? என்றால், கூடாது என்கிறது சாஸ்திரம். ஆனால், அப்படிப் போக வேண்டிய சூழல் ஏற்பட்டால் என்ன செய்வது? பல வருடங்களுக்கு முன் மகாபெரியவா, தன்னை தரிசிக்க வந்த தம்பதிகளுக்குத் தீர்ப்பு சொன்ன சம்பவம் இதோ: ஸ்ரீமடத்தில் பக்தர்களுக்கு அனுகிரஹம் செய்து கொண்டிருந்த மகாபெரியவரை, நமஸ்கரித்து எழுந்தனர் ஓர் இளம் தம்பதியர். கணவருக்கு சுமார் 25 வயதிருக்கும். அவர் மனைவிக்கு 20 வயது இருக்கலாம். இருவரும் பக்தி நிறைந்தவர்கள் என்பது அவர்கள் தோற்றத்திலேயே தெரிந்தது. கை உயர்த்தி ஆசிர்வதித்த மகாபெரியவா, அவர்களைப் பார்த்து, "இருவரும் ஒற்றுமையாக சௌக்கியமாக இருக்கிறீர்களா?" என்று கேட்டார். உடனே, "உங்க அருளால, ரொம்ப சௌக்கியமாக இருக்கோம் பெரியவா!" சொன்னார், கணவர். பெரியவா விடவில்லை. "நீ சொல்லிவிட்டாய். உன் ஒய்ஃப் வாயே திறக்கலையே!" என்று சிரித்தார். உடனே அந்த இளம் மனைவி சுதாரித்துக்கொண்டு, "எம் பெரு அலமேலு பெரியவா...நாங்க ஒற்றுமையா சந்தோஷமாகத்தான் இருக்கோம்..!" சொன்னார். "இல்லை. சந்தோஷமா இருக்கறதா உன்