Showing posts with label Madurai Temple. Show all posts
Showing posts with label Madurai Temple. Show all posts

ககோளம் – பூகோளம்

மதுரை மீனாக்ஷி_அம்மன்_கோவிலில் உள்ள பழைய திருமண மண்டபத்தில் 1568 ஆம் வருட வானவியல் தொடர்பான ககோளம், பூகோளம் என்ற இரண்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அதில் பாற்கடல், தயிர்கடல், நெய்கடல், தேன் கடல், சுத்த நீர் கடல் ஆகியவற்றை பார்க்கலாம்....

ககோளம்
சூரிய மண்டலம் 9 ஆயிரம் யோசனை (1 யோசனை = 24 கிலோமீட்டர்) பரப்பளவு கொண்டதாக இருந்தது. அதை சுற்றி, 2700 யோசனைபரப்பு கொண்ட வளையம் இருந்தது. நாம்வாழும் பூமி 50 கோடி யோசனை விஸ்தீரணம் உடையதாக இருந்தது. இந்த பூமியின் மத்தியில் ஜம்புத்வீபம் என்ற தீவு இருந்தது. அந்த தீவில் மேருமலை அமைந்திருந்தது. மேருமலைக்கு கிழக்கே இந்திர பட்டணமும், தெற்கில் எமபட்டணமும், மேற்கில் வருண பட்டணமும் இருந்தன. இந்த பட்டணங்களில் உலகை பாதுகாக்க தேவர்கள் வசிப்பார்கள். இந்த மண்டலங்களில் என்னென்ன தீவுகள், வீதிகள் இருந்தன என்பது குறித்து விபரம் ககோள ஓவியத்தில் இருக்கிறது.

அக்கால தேவர்கள் உலகை இந்த ஓவியத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த ஓவியத்தில் 
  1. அஸ்வினி, பரணி, கிருத்திகை, மிருகசீரிஷம் ஆகிய நான்கு நட்சத்திரங்களைக் கொண்ட நாகவீதி.
  2. புனர்பூசம், பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்கள் அடங்கிய ஐராவத வீதி, ஆர்ஷ வீதி, கோவீதி.
  3. திருவோணம், அவிட்டம், சதயம் ஆகிடவை இணைந்த ஜரத்துருவ வீதி.
  4. ஹஸ்தம், சித்திரை, சுவாதி அடங்கிய மற்றொரு நாக வீதி.
  5. விசாகம், ஜேஷ்டம், அனுஷம் ஆகியவை அடங்கிய மிருக வீதி.
  6. மூலம், பூராடம், உத்திராடம் ஆகியவை அடங்கிய வைஸ்வாநர வீதி.
உள்ளிட்ட பல வீதிகள் அடங்கியுள்ளன....

பூகோளம்
இந்த பிரபஞ்சத்தில் ச்வேதத்வீபம் என்னும் கிரகம் உள்ளது. அந்த கிரகத்தில் பாற்கடல் இருக்கிறது. பூமியில் உப்புநீர் கடல் இருப்பது போல மற்ற கிரகங்களில் பலவகை சமுத்திரங்கள் இருப்பதாக வேத இலக்கியங்களின் மூலம் தெரிகிறது. பாற்கடல், தயிர்கடல், நெய்கடல், தேன் கடல், எண்ணெய் கடல், மதுக்கடல், ஆகியவை இதில் அடங்கும். இந்த கடல்களுக்குள் கசேறு, இந்திரதீவு, தாமிரபரண தீவு, கபஸ்திமம், நாகத்தீவு, சௌமிய தீவு, காந்தர்வ தீவு, பாரத்தீவு இருந்தன. இவை பற்றிய விஷயங்களை அந்த ஓவியத்தில் காணலாம்.
( யோசனை என்பது 9 மைல் (14.4 கி.மீ) என்றும், 
காதம் என்பது பத்து மைல் என்றும், 
1காதம் = 10 மைல் = 16.80 கி.மீ 
1யோசனை = 4 காதம் = 40 மைல் = 67.20 கி.மீ என்றும்,
4 குரோசம் = 1 யோசனை 
(4 காதம் அல்ல ஓர் யோசனை) என்றும் குறிப்பிட்டுள்ளனர்.)
நமது முன்னோர்களின் நுண்ணிய அறிவாற்றலை இதன் மூலம் அறியலாம்.

           

மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டப்பட்ட ஆண்டுகள்

மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டப்பட்ட ஆண்டுகள்:

1168 – 75 -> சுவாமி கோபுரம்
1216 – 38 -> ராஜ கோபுரம்
1627 – 28 -> அம்மன் சந்நிதி கோபுரம்
1315 – 47 -> மேற்கு ராஜா கோபுரம்
1372 -> சுவாமி சந்நிதி கோபுரம்
1374 -> சுவாமி சந்நிதி வெஸ்ட் கோபுரம்

1452 -> ஆறு கால் மண்டபம்
1526 -> 100 கால் மண்டபம்
1559 -> சௌத் ராஜா கோபுரம்
-> முக்குரிணி விநாயகர் கோபுரம்
1560 -> சுவாமி சந்நிதி நார்த் கோபுரம்
1562 -> தேரடி மண்டபம்
1563 -> பழைய ஊஞ்சல் மண்டபம்
-> வன்னியடி நட்ராஜர் மண்டபம்

1564 – 72 -> வடக்கு ராஜா கோபுரம்
1564-72 -> வெள்ளி அம்பல மண்டபம்
-> கொலு மண்டபம்
1569 -> சித்ர கோபுரம்
-> ஆயிராங்கால் மண்டபம்
-> 63 நாயன்மார்கள் மண்டபம்
1570 -> அம்மன் சந்நிதி மேற்கு கோபுரம்

1611 -> வீர வசந்தராயர் மண்டபம்
1613 -> இருட்டு மண்டபம்
1623 -> கிளிக்கூட்டு மண்டபம்
-> புது ஊஞ்சல் மண்டபம்
1623 – 59 -> ராயர் கோபுரம்
-> அஷ்டஷக்தி மண்டபம்

1626 -45 -> புது மண்டபம்
1635 -> நகரா மண்டபம்
1645 -> முக்குருணி விநாயகர்
1659 -> பேச்சியக்காள் மண்டபம்
1708 -> மீனாக்ஷி நாயக்கர் மண்டபம்
1975 -> சேர்வைக்காரர் மண்டபம்

மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டியவர்களும், அந்த கால கட்டத்தில் ஆட்சி புரிந்தவர்களும்:

குலசேகர பாண்டியன் -> 1168 – 75.
மாறவர்மன் சுந்தரபாண்டியன் -> 1216 – 38.
பாராக்ரம பாண்டியன் -> 1315 – 47.
விஸ்வநாத நாயக்கர் -> 1529 – 64.

கிருஷ்ணப்பா நாயக்கர் -> 1564 – 72.
வீரப்ப நாயக்கர் -> 1572 – 94.
கிருஷ்ணப்பா நாயக்கர் -> 1595 – 1601.
முத்துகிருஷ்ணப்பா நாயக்கர் -> 1601 – 09.

முத்து நாயக்கர் -> 1609 – 23.
திருமலை நாயக்கர் -> 1623 – 1659.
ரௌதிரபதி அம்மாள் மற்றும்
தோளிமம்மை -> 1623 – 59. (Wives of ThirumalaiNaicker )
முத்து வீரப்ப நாயக்கர் -> 1659

சொக்கநாத நாயக்கர் -> 1659 – 82.
முத்து வீரப்ப நாயக்கர் -> 1682 – 89.
விஜயரங்க சோகநாத நாயக்கர் -> 1706 – 32.
மீனாட்சி அரசி -> 1732 – 36



கல் யானை கரும்பு சாப்பிட்ட படலம் | Thiruvilaiyadal Puranam

பேரழகு மதுரை நகரும், பிரமாண்ட மீனாட்சியம்மன் கோயிலும்!

இத்தலம், மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் முச்சிறப்புகளைக் கொண்டிருக்கிறது. ஆதியில் சுந்தரேஸ்வரரின் இந்திர விமானத்திற்குப் பிறகே பிற கட்டுமானங்கள் நடந்திருக்கின்றன. இந்திரன் கண்ட சுயம்பு சிவலிங்கத்திற்கென எட்டு யானை சிற்பங்கள் தாங்கும் தோரணையில் முதல் விமானம் கட்டப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு திசைக்கு இரண்டாக நான்கு பக்கங்களிலும் இந்தக் கல்யானைகளை இன்றும் காணலாம்.

கருவறையின் முன்னர் உள்ள கல்யானைகள்
*ஐராவதமும், *சுபரதீபமும் ஆகும்.
மேற்கில் *வாமனா, *அஞ்சனா;
தெற்கில் *பண்டரீனா, *குமுதா;
வடக்கில் *புஷ்பதந்தா, *சார்வபவுமா

என அவை பெயர் பெற்றிருக்கின்றன.

64 திருவிளையாடல் புராணத்தில் கல்லானை கரும்பறுத்திய படலம்
(கல் யானை கரும்பு சாப்பிட்ட படலம்) நிகழ்வு நடந்த கல் யானைகள் இவைகளே...


வருடம் ஓர் முறை மட்டுமே கருவறை விட்டு வெளிவரும் எல்லாம் வல்ல சித்தர்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பொங்கல் அன்று கல் யானைக்கு கரும்பு கொடுத்த லீலையில் எல்லாம் வல்ல சித்தராக கம்பீரமாக காலை மடித்து நெஞ்சை நிமிர்த்தி புன்னகையோடு உனக்கனதை என்னிடம் எதையும் கேட்டு பெறலாம் என்பதை போன்று காட்சியளிக்கும் திருக்கோலத்தில் அருளும் சித்தரை காண வாருங்கள்.


மதுரை மீனாட்சி அம்மன் தனிசிறப்புகள் மற்றும் வளர்ந்த திருத்தலம்

1.மீனாட்சி அம்மன் விஹ்ரகம் மரகத கல்லால் ஆனது. ஏனென்றால் பொதுவாக அன்னையின் திருமேனி பச்சை நிறம்.

2.அன்னையின் வலது கால் சற்று முன் நோக்கி இருக்கும், ஏனென்றால் பக்தர்கள் அழைத்தால் உடனே ஓடி வருவதற்காக.

3.அன்னை கையில் ஏந்திய கிளி அன்னையின் காதில் பேசுவது போல் இருக்கும் ஏனென்றால் கிளி பேசுவதை திருப்பி பேசும் அதைப்போல் பக்தர்களின் வேண்டுதலை திரும்ப திரும்ப அன்னையிடம் சொல்லும் இதனால் நமது வேண்டுதல் விரைவாக நிறைவேறும்.

4.அன்னையின் விக்ரஹம் சுயம்பு ஆகும் சில ஆலயத்தில் லிங்கம் சுயம்புவாக இருக்கும் ஆனால் மதுரையில் மீனாட்சி உக்ரபாண்டியனுக்கு முடிசூட்டிய பின் சொக்கநாதர் பெருமான் அருகில் விக்ரஹமாக நின்றுவிட்டாள் அதனால் சுயம்பு அன்னை. அன்னை மதுரையில் யாகசாலையில் அக்னியில் அவதரித்தாள். இவளின் இயர்பெயர் தடாதகை அங்கயற்கண்ணிஆகும்.

5. பாண்டிய மஹாராஜாவுக்கும் மஹாராணி காஞ்சனமாலைக்கும் ஒரே மகள். அதனால் பாண்டிய நாட்டின் பேரரசி ஆவாள்.

6. இங்கு கற்பகிரகத்தில் அன்னையின் விக்ரஹம் உயிர்உடன் இருக்கும் ஒரு பெண்ணை பார்ப்பது போல் இருக்கும்.

7. அன்னையே சிலையாக இருப்பதால் மிகவும் அழகாக இருக்கும் இவளை பார்த்து கொண்டே இருக்க வேண்டும்போல் இருக்கும்.

8. அன்னையின் சிலை மிகவும் நளினமாக இருக்கும் அன்னையின் சன்னதியில் தாழம்பூ குங்குமம் பிரசாதமாக தரப்படும். மதுரையில் அன்னைக்கே முதல் மரியாதை. இங்கு அம்பிகையை முதலில் வணக்க வேண்டும் பின்னர்தான் சுவாமியை தரிசிக்க வேண்டும்.

9.மீனாட்சி சுந்தரேஸ்வரர் மதுரையை அன்றும் இன்றும் என்றும் ஆட்சி செய்வார்கள் என்பது சிவவாக்கு.இங்கு எம்பெருமான் 64 திருவிளையாடல் புரிந்து உள்ளார். வேறு எந்த ஆலயத்திலும் இத்தனை திருவிளையாடல் புரிந்தது இல்லை.

10.அனைத்து சிவ ஆலயமும் முக்தியை தரும் ஆனால் சிவ ஆலயத்தில் சகல செல்வமும் தரும் கோவில்.

11. மீனாட்சி சுந்தரேஸ்வரர் வாழ்ந்ததால் மதுரைக்கு வந்தாலே முக்தி

12. இந்த கோவில் அம்மன் பெயரில் அழைக்கப்படுகிறது. உலகின் பெரிய அம்மன் கோவில். சக்தி பீடமும் ஆகும்.

13.வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய ஆலயம். சித்திரை திருவிழா அன்னைக்கும் ஆவணிமூல பெருவிழா சுவாமிக்கும் நடக்கும். மிகவும் அழகான கோபுரங்கள் கொண்ட கோவில்.

14. தமிழகத்தில் மிகப்பெரிய விழா நடக்கும் முதல் ஆலயம். சைவமும் வைணவ சமயமும் ஒன்றாக கொண்டாடும் விழா.

15. உலக அதிசியங்களுள் ஒன்று மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என்றே கூறலாம் . இவளை சரண் அடைந்தால் நம்மை காப்பாள் அன்னை மீனாட்சி. நவராத்திரி 4ம் நாள் இன்று நமது சிவகங்கை விஸ்வநாதர் ஆலயத்தில் விசாலாட்சி மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் அருள்பாலிககிறார்.

16. மீனாட்சி அம்மன் மொத்தம் 6 விதமான அலங்காரங்களில் காட்சி அளிக்கின்றாள். சக்தியில்லையேல் சிவமில்லை என சிவனே உணர்ந்திருந்த போதும், சக்தி தலங்களாய் விளங்கும் ஊர்களில் சிவனின் ஆட்சியே நடக்கும். ஆனால், மதுரையில் அன்னையின் கையே ஓங்கி இருக்கும். மதுரையின் அரசியாய் மீனாட்சியே ஆட்சி செய்கிறாள்.

17. முதலில், மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகம், பூஜைகள் செய்த பின்னரே சுந்தரேஸ்வரருக்கு செய்வது வழக்கம். பக்தர்களும்_அன்னையை வணங்கிய பின்னரே அப்பனை வணங்குவர்.


18. மதுரையில் பல அதிசயங்கள் நடக்கும். அதன்படி, மீனாட்சி அம்மன் தினமும் 8 விதமான சக்திகளாக உருவகப்படுத்தி ஆராதிக்கப்படுகிறாள். இது வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாகும். 

19. இனி அந்த 8 வித ஆராதனைகளைப் பற்றிப் பார்ப்போம்
6 - 8 நாழிகை வரையில் புவனேஷ்வரியாகவும்,
12 - 15 நாழிகை வரையில் கௌரியாகவும்,
மதியானத்தில் சியாமளாகவும்,
சாயரட்சையில் மாதங்கியாகவும்,
அர்த்த ஜாமத்தில் பஞ்சதசியாகவும்,
பள்ளியறைக்கு போகையில் ஷோடசியாகவும் அன்னையை உருவகப்படுத்தி ஆராதிக்கப்படுகிறாள்.

20. அன்னைக்கு 5 கால பூஜைகள் நடக்கும்போது, மேலே சொன்ன ரூபங்களுக்கு_ஏற்றவாறுதான் அலங்காரங்கள் செய்விக்கப்படும். காலையில் சின்னஞ்சிறு சிறுமி போன்றும், உச்சிக்காலத்தில் மடிசார் புடவை கட்டியும், மாலை நேரத்தில் தங்க கவசமும், வைரக்கிரீடமும் அணிந்தும், இரவு அர்த்த ஜாமத்தில் வெண்பட்டு புடவை அணிந்தும் அன்னை காட்சி தருவாள். அன்னையின் ஒவ்வொரு காட்சியையும் காண கண்கோடி வேண்டும். ஒரேநாளில் இந்த அத்தனை ரூபத்தினையும் தரிசிப்பவர்களும் மறுப்பிறப்பு கிடையாது.

21. எல்லா கோவில்களையும் போல, மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலும்போல பள்ளியறை அம்மன் சன்னதியில் இருக்கிறது. இரவு சுந்தரேஸ்வரரது வெள்ளிப் பாதுகைகள் சுவாமி சன்னதியிலிருந்து பள்ளியறை வரும். பாதுகைகள் வந்தபின் அன்னைக்கு விசேஷ ஆரத்தி மூக்குத்தி தீபாராதனை நடக்கும். அதன்பின்னரே அம்பிகையின் சன்னதி மூடப்பட்டு பள்ளியறையில் பூஜை, பால், பழங்கள், பாடல்கள், வாத்ய இசை என்று சகல உபசாரங்களுடன் இரவு கோவில் நடை சார்த்தப்படும். மதுரையில் பள்ளியறை பூஜை பார்க்கப் பார்க்கத் திகட்டா காட்சி. பள்ளியறை பூஜை சிவ - சக்தி ஐக்யத்தை உணர்த்துவதால் இந்த தரிசனத்திற்கு சிறப்பு அதிகம்.


22. மேலும் கணவன் மனைவி ஒற்றுமைக்கு மதுரை மீனாட்சி கோவிலில் தினமும் நடைபெறும் பள்ளியறை பூஜையை தரித்தல் நல்ல பயனைக் கொடுக்கும்.


23. பிள்ளை வரம் வேண்டுவோர் காலையில் மீனாட்சி அம்மனின் சிறுபிள்ளை அலங்காரத்துடன் நடக்கும் ஆராதனையை தரிசித்து மனமுருகி வேண்டினால் அன்னை பலன் தருவாள் என்கின்றனர். வியாபார நஷ்டத்திற்கு தொழில் மற்றும் வேளையில் பிரச்சனை உள்ளவர்கள் அன்னையின் வைர கிரீட அலங்காரத்தினை கண்டு தரிசித்தால் முன்னேற்றம் பெறலாம் என சொல்கின்றனர்.




மதுரையில் வசிக்கும் உங்கள் எத்தனை பேருக்கு தெரியும்?
மதுரை அன்னை மீனாட்சி வளர்ந்த திருத்தலம் குறித்து?

அவனியாபுரத்தில் ஸ்ரீ பாலமீனாம்பிகை சமேத கல்யாண சுந்தரேஸ்வரர் என்பது தான் அந்த ஆலயம்.

இது 7ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. பாண்டியர் காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம்.

இந்த கோயிலுக்கு திருஞானசம்பந்தர் வருகை புரிந்துள்ளார்.
மீனாட்சி திருக்கல்யாணத்தன்று, அதே திருவிழா இங்கும் நடைபெறுகின்றது.

 


Sri Thenthiruvalavai Swamy koil Sivan Temple | தென் திருவாலவாய் திருக்கோயில்

தென் திருவாலவாய் திருக்கோயில் , தெற்கு மாசி வீதி , மதுரை :


மதுரையில் உள்ள சிவனின் ஸ்தலங்களில் இது அக்னித் தலம் இந்த தென் திருவாலவாய் கோயில். சிவனுக்கும் , மீனாட்சிக்கும் தனித்தனி கோயில் கட்டப்பட்டுள்ளது. சகல பிணிகள் நீக்கும் ஸ்தலம். தலவிருட்சமாக ஆலமரம் உள்ளது. சுவாமியின் பெயர் சொக்கநாதர் / திருவாலவாயர். மதுரை நகரின் பரபரப்பான சாலைகளில் ஒன்றான தெற்குமாசி வீதியில் சாலை முகப்பிலேயே வடக்கு நோக்கி அமைந்துள்ளது .


இவ்வழியே போகும்போது இக்கோயில் பார்த்திருப்போம் ஆனால் உள்ளே சென்று திருவாலவாயரை தரிசித்தது இல்லை . சமீபத்தில் இக்கோயில் குறித்து மதுரையிலேயே பஞ்ச பூத ஸ்தலங்கள் உள்ளதென்றும் அதில் ஒன்று தென் திருவாலவாய் கோயில் என்றதும் இன்று நேரே சொக்கநாதரிடம் சரணடைந்தேன் . திருவிளையாடற் புராணக்கதைகளில் ஒன்றான மதுரைக்கு எல்லை கட்டிய படலம் நிகழப்பெற்ற கோயில் இது. திருநீற்றுப்பதிகம் பாடப்பெற்ற தலம்.

தலபெருமை:

அது என்ன தென்திருவாலவாய் : பண்டைய காலத்தில் திருவிளையாடல் புராணத்தில் மதுரைக்கு வழிகாட்டிய படலம் உண்டு. ஒரு காலத்தில் கடல் பொங்கி மதுரை மாநகரமே எல்லைகள் எல்லாம் தெரியாமல் குறுகிப்போய், மதுரை நகரின் எல்லை எதுவென்ற‌ே தெரியாமல் போனது. அப்படி கடல் பொங்கி குறுகிய மதுரையை முந்தைய அளவிற்கே மீண்டும் அமைக்க விரும்பிய சேகர பாண்டிய மன்னன் சிவ பெருமானிடம் வேண்டுகிறான். அப்போது சிவபெருமான் ஆலவாய் என்றழைக்கப்படும் ஒரு பெரிய பாம்பை வீசி போடுகிறார். போட்டு விட்டு அந்த பாம்பு மதுரைய‌ையே ஊரின் முழுக்க வட்டமடித்து காட்டுகிறது. அப்போது தென்திருவாலவாய் கோயில் இருக்கும் இடத்தில்தான் அந்த பாம்புடைய வாயும், வாலும் ஒன்று சேர்ந்தது. அதனால்தான் இந்த கோயிலும் தெற்கு திசையில் உள்ளது. அதனால் தென்திருவாலவாய் என்று பொருள்படுகிறது. ஆலவாய் என்ற பாம்பு, தெற்கு திசை எல்லாம் சேர்ந்து தென் திரு ஆலவாய் என்று பெயர் வந்தது.

அஸ்வத்தபிரதட்சணம் : இக்கோயிலில் உள்ள அரசமரத்தை 108 முறை வலம் வந்து திருவாலவாய சுவாமியை நினைத்து உள்ளம் உருகி வேண்டி நின்றால், மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் கூட குணமடைந்து உடல்நலம் பெறுகிற அதிசயம் இத்தலத்தில் நடக்கிறது. ‌மேலும் நீண்ட ஆயுள் வேண்டுபவர்கள் இத்தலத்துக்கு வந்து இந்த அஸ்வத்தபிரதட்சணம் அதாவது 108 முறை வலம் வந்து வணங்குகின்றனர். இத்தலத்தில் 60ம் கல்யாணம் செய்வதும் ஏராளமாக நடக்கிறது. அவர்களே சதாபிசேகமும் (80) செய்து நல்ல ஆயுளை அடைகின்றனர்.


மதுரையில் உள்ள பஞ்ச பூத தலங்களில் பழைய சொக்கநாதரை வழிபட்டால் செல்வம் செழிக்கும். இம்மையில் நன்மை தருவாரை வணங்கினால் பதவி கிடைக்கும், தென்திருவாலவாய சுவாமியை வணங்கினால் மரண துன்பம் நீங்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. தவிர இந்த நான்கு ‌‌கோயில்களுக்கும் நடுவில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரரை வழிபட்டால் இந்நான்கும் கிடைக்கும். இங்குள்ள மூர்த்தி மதுரையில் உள்ள தலங்களில் அளவில் பெரியவர்.


எமன் வழிபட்ட தலம் : மனிதனுக்கு மரணத்தை விடக் கொடிய பகைவனும் இல்லை. அந்த மரணத் துயரை மாற்றும் வைத்தியனை விடச் சிறந்த நண்பனும் இல்லை. இத்தகைய வைத்தியநாதப்பெருமான் எழுந்தருளிக் காலன் வருங்கால் காட்சி கொடுக்கக் காத்திருக்கும் திருத்த‌லமே தென் திருவாலவாய் ஆகும். தனக்கு நோய் நொடி வந்து உயிருக்கு பங்கம் வருமோ எனும் பயம் எல்லோர் உயிரையும் எடுக்கும் எமனுக்கே வந்து விடுகிறது. சிவபெருமானை வணங்க அவரும் காட்சி தருகிறார். அப்போது தென்திருவாலவாய் க‌ோயிலுக்கு சென்று வழிபட்டு அந்த திருநீற்றை பூசு., இனி உனக்கு மரணபயமே கிடையாது என்கிறார். எமனும் வந்து வழிபட்டு தன் மரணபயம் நீங்கப் பெற்றான். அத்தகையை சிறப்பு வாய்ந்த தலம் இது.

தல வரலாறு:

மதுரை மாநகரில் சைவ சமயமும் சமண சமயமும் தீவிரமாக இருந்த சமயம். அப்போது மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் கூன்பாண்டியன். அவர் சைவ சமயத்தை சேர்ந்தவன். ஆனால் தீடீரென்று சமண சமயத்திற்கு மாறிவிடுகிறான். அவன் மனைவி மங்கையர்க்கரசி சைவ சமயத்தை சார்ந்தவள். மிகவும் தீவிர பற்றுள்ளவள். கணவனின் திடீர் மாற்றம் அவளுக்கு மிகுந்த வருத்தத்தை தந்தது. அதனால் சிவபெருமானிடம் சென்று மனமுருக அழுது வேண்டுகிறாள். அப்போது சிவபெருமான் கூன்பாண்டியனுக்கு வெப்பு நோய் தருகிறார். உடம்பு பூராவும் உஷ்ணத்தால் பாதிக்கப்படும் மிகவும் கொடிய நோய் அது. கூன்பாண்டியனால் அந்த நோயை தாங்க முடியவில்லை. அப்போது சமணர்கள் எவ்வளவோ வைத்தியம் செய்து பார்க்கின்றனர். நோய் குணமாகவில்லை. அப்போது மங்கையர்க்கரசியின் கனவில் சிவபெருமான் தோன்றி தென்திருவாலவாய் கோயிலுக்கு சென்று ஞானசம்பந்தரால் திருநீற்றுப்பதிகம் பாடி அந்த சுவாமிக்கு அனைத்து அபிசேக அர்ச்சனைகளும் ‌செய்து அந்த திருநீற்ற‌ை எடுத்து உன் கணவனான பாண்டிய மன்னன் மீது பூசி விட்டால் அந்த வெப்பு நோய் தீர்ந்து விடும் என்று கூறுகிறார். உடனே அதுபடியே செய்ய அந்த வெப்பு நோய் தீர்ந்து விடுகிறது.
கூன்பாண்டியன் சிவபெருமானின் இறையருளை முழுமையாக உணர்ந்து தன் அங்கமெல்லாம் ஒரு கணம் ஆடிப்போய் அவரின் கருணைக்கு தலைவணங்கி சமணத்திலிருந்து மீண்டும் சைவ சமயத்திற்கு வந்து சிவதொண்டு புரியலானார் என வரலாறு கூறுகிறது.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: தெற்கு திசைக்குத் தலைவனாகிய எமன் வழிபட்ட கோயில் இது. இக்கோயில் மதுரையில் உள்ள பஞ்ச பூத தலங்களில் அக்னி தலம் ஆகும். திருவிளையாடற் புராணக் கதைகளில் ஒன்றான மதுரைக்கு எல்லை கட்டிய படலம் நிகழப்பெற்ற கோயில் இது.


Maps Location : Sri Thenthiruvalavai Swamy koil Sivan Temple

Thiru Aappudayar Temple | திருஆப்புடையார் திருக்கோயில், செல்லூர், மதுரை

திருவாப்புடையார் கோயில் , செல்லூர் , மதுரை :

மூலவர்: ஆப்புடையார்
பிறப்பெயர்: கீலகேசுவரர்
அம்மன்: குறவங் குழலம்மை
பிறப்பெயர்: சுகந்த குந்தளாம்பிகை
தலமரம்: கொன்றை
தீர்த்தம்: ரிஷப தீர்த்தம் வைகை நதி
பெருமை: சுயம்பு


சிறப்பு:
1.மதுரையில் உள்ள பஞ்சபூத சிவஸ்தலங்களில், நீருக்குரிய திருத்தலம் (ஜலஸ்தலம்).
2. தேவார பாடல் பெற்ற திருத்தலம்.
பதிகம்: தேவாரம்
பாடியவர்: திருஞானசம்பந்தர்
ஊர்: செல்லூர் மதுரை
புராண பெயர்: ஆப்பனூர்


இத்தனை ஆண்டுகளில் இந்த கோயிலுக்குச் செல்லாமல் ஏன் இருந்தேன் . எப்படி தெரியாமல் போனது !! எல்லாம் இறைவன் செயல் ... அவன் அழைக்கும் வரை காத்திருந்தேன் போல... மிகவும் பழமையான் ஆலயம் .. இறைவன் சுயம்புலிங்கம். பாண்டிநாட்டு 14 ஸ்தலங்களில் இதுவும் ஒன்று . திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றது.


பக்தனை குபேரனாக்கிய திருவாப்புடையார் கோவில் : 
தன்னை வழிபட்டு வந்த பக்தன் செய்த தவறையும் மன்னித்து, அவனையே குபேரனாக்கிப் பெருமை சேர்த்த திருவாப்புடையார் கோவில், மதுரை மாநகரின் செல்லூர் பகுதியில் அமைந்திருக்கிறது. 

தல வரலாறு : 
சோழாந்தக மன்னன் என்பவன் மிகச்சிறந்த சிவபக்தனாக இருந்தான். அவன் எப்போதும் சிவனை வழிபாடு செய்த பின்புதான் சாப்பிடுவான். ஒரு முறை அவன், தனது அமைச்சர் மற்றும் படைவீரர்களுடன் அருகிலிருந்த காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். அப்போது, அழகிய மான் ஒன்று அவன் கண்ணில் பட்டது. உடனே அவன், அந்த மானை விரட்டிக் கொண்டு நடுக்காட்டிற்குள் சென்று விட்டான். அந்த மான் அவனது பிடியில் சிக்காமல் காட்டிற்குள் சென்று மறைந்து விட்டது. 

மானை விரட்டிச் சென்ற மன்னன் களைப்பால் அவதியுற்றான். அப்படியே அந்தக் காட்டிற்குள் சோர்ந்து போய் அமர்ந்து விட்டான். அவன் பின்னால் சென்ற பாதுகாப்பு வீரர்கள், மன்னனின் சோர்வு நீங்க ஏதாவது சாப்பிடும்படி சொன்னார்கள். ஆனால் மன்னன், ‘சிவனுக்கு வழிபாடு செய்த பின்பே சாப்பிடுவேன்’ என்று சொல்லி மறுத்து விட்டான். 

நடுக்காட்டில் இறைவனை வழிபட வேண்டும் என்றால், சிவலிங்கத்திற்கு எங்கே போவது? மன்னனுடன் வந்த அமைச்சர், மன்னனை சாப்பிட வைப்பதற்காக என்ன செய்யலாம் என்று யோசித்தார். அந்தக் காட்டில் கிடைத்த மரத்துண்டு ஒன்றை எடுத்து, அதைத் தரையில் ஆப்பு போன்று அடித்து வைத்தார். 

பின்னர் அவர் மன்னனிடம் அந்த மரத்துண்டைக் காட்டி, ‘அந்தச் சுயம்புலிங்கத்தை வழிபட்டுவிட்டுத் தாங்கள் சாப்பிடலாம்’ என்று சொல்ல, சோர்வுடன் இருந்த மன்னன், அந்த ஆப்பைச் சிவலிங்கம் என நினைத்து வணங்கி விட்டு சாப்பிட்டான். அவனுக்குச் சோர்வு நீங்கிய பிறகு, தான் வணங்கியது சிவலிங்கம் அல்ல, அது ஆப்பு என்று தெரிந்தது. 

அதை நினைத்து வருந்திய மன்னன், ‘இறைவா! நான் இதுவரை உன்னை வழிபட்டு வந்தது உண்மையானால், நான் வணங்கிய இந்த ஆப்பில் இறைவனாக இருந்து அருள் புரிய வேண்டும்’ என்று மனமுருக வேண்டினான். மன்னனின் பக்தியில் மகிழ்ந்த இறைவன், அந்த ஆப்பிலேயே இறைவனாகத் தோன்றினார். ஆப்பில் எழுந்தவர் என்பதால் அவருக்கு ‘ஆப்புடையார்’ எனும் பெயர் ஏற்பட்டது. அந்த ஊரும் ‘ஆப்பனூர்’ என்றானது. 

குபேரனான பக்தன் : 
பிரம்மனின் வழியில் வந்த புண்ணியசேனன் என்கிற சிவபக்தன், தான் பல கோடி செல்வத்திற்கு உரிய வராக வேண்டும் என்று நினைத்து, இந்தக் கோவிலுக்கு வந்து கடும் தவம் இருந்து வந்தான். அவனுடைய தவத்தில் மகிழ்ந்த ஆப்புடையார், சுகந்த குந்தளாம்பிகையுடன் அவன் முன்பாகத் தோன்றினார். 

புண்ணியசேனன் தன் முன்பாகத் தோன்றிய இறைவனிடம், தன்னைப் பெரும் செல்வமுடையவராக்க வேண்டுமென்று வேண்டினான். இறைவனும் அவனைப் பெரும் செல்வமுடையவனாக ஆக்கினார். பெரும் செல்வம் கிடைத்தவுடன், அவனிடம் ‘தான்’ எனும் ஆணவமும் சேர்ந்து கொண்டது. அந்த ஆணவத்தின் காரணமாக அவன், இறைவனின் அருகிலிருந்த அம்பிகையின் அழகில் மயங்கினான். 

அதனை அறிந்த அம்பிகை அவனுடைய உயிரைப் பறித்தார். தன்னுடைய பக்தன் தெரியாமல் செய்த தவறை மன்னித்து, அவனை மீண்டும் உயிர்ப்பிக்க உதவும்படி அம்பிகையிடம் சொன்னார். அம்பிகையும் அதற்குச் சம்மதிக்க, இறைவன் அவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தருளினார். இறைவனின் கருணையால் உயிர் பெற்ற அவன், தனது தவறுக்கு இருவரிடமும் மன்னிப்பு வேண்டினான். 

அவனை மன்னித்த ஆப்புடையார், அவனுக்குக் ‘குபேரன்’ என்று புதுப்பெயரிட்டுப் புதிய வாழ்வு தந்தார். மேலும் பெரும் செல்வத்துடன் வடக்கு திசையைக் காத்து வரும் பணியை அவனுக்கு வழங்கிப் பெருமை சேர்த்தார். தன்னுடைய பக்தன் தவறு செய்த போதும், அவனை மன்னித்து, அவனுக்குப் பெரும்பணி கொடுத்த பெருமை இறைவனுக்கும் கிடைத்தது. 

இந்தக் கோவிலில் மூலவரான ஆப்புடையார் சுயம்புலிங்கமாகக் கிழக்கு நோக்கிப் பார்த்த நிலையிலும், அம்மனான சுகந்த குந்தளாம்பிகையும் கிழக்கு நோக்கிப் பார்த்த நிலையிலும் இருக்கின்றனர். ஆலய வளாகத்தில் விநாயகர், முருகன், நடராஜர், காசி விசுவநாதர், மீனாட்சி ஆகியோரது சிலைகளும், நவக்கிரக சிலைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. 

வழிபாட்டுப் பலன்கள் : 
• இத்தலத்து இறைவனுக்கு ஒரு நெய்விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டால் அது ஆயிரம் பசுக்களைத் தானம் செய்ததால் கிடைக்கும் பலனுக்கு இணையானதாகும். 
• இத்தலத்து இறைவனை இளநீர் கொண்டு நீராட்டி வழிபட்டால், அது நூறு அசுவமேத வேள்வி செய்வதால் கிடைக்கும் பலனைத் தரக்கூடியது. 
• தாங்கள் செய்த தவறுகளால் அனைத்தையும் இழந்து வறுமைக்குள்ளானவர்கள், தங்களது தவறுகளை உணர்ந்து, இங்கு வந்து இறைவனை வழிபட்டால், அவர்கள் இழந்த அனைத்தையும் மீண்டும் பெறுவார்கள். 
• இக்கோவிலில் இருக்கும் முருகப்பெருமானை செவ்வாய் தோஷமுடையவர்கள் வழிபட்டால், அவர்களுடைய தோஷம் நீங்கிச் சிறந்த பலன் கிடைக்கப் பெறுவார்கள். 
• இக்கோவிலில் இருக்கும் இறைவியான சுகந்த குந்தளாம்பிகையை வழிபடுபவர்களுக்குத் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணமாகும் பலனைப் பெறுவார்கள். 

இறைவனின் சிறப்பு : 
இந்தக் கோவில் மூலவரான சுயம்புலிங்கம் சிறியதாக இருப்பினும், இவரது பெருமை உயர்ந்தது என்கின்றனர். மலைகளில் மேருவைப் போலவும், பசுக்களுள் காமதேனுவைப் போலவும், விண்மீன்களுக்கிடையே சந்திரனைப் போலவும், ஒளியுடைய பொருட்களுள் சூரியனைப் போலவும், கொடையாளிகளுள் மேகத்தைப் போலவும், புருஷர்களுள் விஷ்ணுவைப் போலவும், இது போன்று எவையெல்லாம் சிறப்புடையதோ, அதே போல் இங்குள்ள இறைவனான ஆப்புடையார் மற்ற சுயம்புலிங்கங்களை விடச் சிறப்பு மிக்கவர் என்றும், இவரை வணங்கினால், அனைத்துத் தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்று இக்கோவிலுக்கான தலபுராணம் கூறுகிறது. 

* சோழாந்தகனின் மரபு வழியில் வந்த சுகுணபாண்டியன் என்பவனது ஆட்சியில் கடுமையான பஞ்சம் நிலவியது. அப்போது இக்கோவில் அர்ச்சகர், நெல்லுக்குப் பதிலாக, வைகை ஆற்று மணலைக் கொண்டு சமைத்தார். அப்போது அந்த மணல் அன்னமாக மாறியது என்றும், அதனால் இத்தல இறைவனுக்கு ‘அன்னவிநோதன்’ என்கிற பெயர் ஏற்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. 
* தன்னை வணங்கி வந்த பக்தன் தவறு செய்த போதும், அவனைத் திருத்தி அவனுக்குக் குபேர வாழ்வு அளித்ததால் இத்தலத்து இறைவனைக் கருணை மிகுந்தவன் என்றும் சொல்கின்றனர். 
அமைவிடம் : 

மதுரை மாநகரில் செல்லூர் பகுதியில் அமைந்திருக்கும் இத்தலத்திற்குச் செல்லூர் செல்லும் அனைத்து நகரப்பேருந்துகளிலும் செல்ல முடியும். கோரிப்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிச் சிறிது தூரம் நடந்தும் இத்தலத்திற்குச் செல்லலாம். 






Madurai Kamachi Temple

Amman Name : Kamachi Amman
Sivan name : Agaparashwaran

Other shrine

Sri nalain
Arunagirinathar
Murugan
Durgai
Dakshinamurthy
lingashtakam
natarajar - sivagami
selva vinayakar
hanuman
bharma
puratha kali amman
somath kanth - manonmani
karuppasamy
kala bharava
gayathi amman
3 shakthi

Maravar Savadi - Arulmigu Maha Ganapathy Aalayam - Madurai

Big Ganapathy seelayai

Every month Sankatahara chathurthi famous.


Address :


South Masi St, Madurai Main, Madurai, Tamil Nadu 625001

Sri Prasanna Venkatesar Kovil- Sourashtra Temple - Madurai

Sri Prasanna Venkatesar Kovil  as Theru Krishnan Kovil.


Sannadhi  in Theru Krishnan Kovil
  1. Entrance Vignesh Sannadhi
  2. Srinivasa -- Main God
  3. Alamelu mangapuram - Thayar
  4. Andal Nachiyar
  5. Small Ganapathy near permual sannadhi
  6. Sri venkata raman bhagavather
  7. Natana Gopala nayagi
  8. Big Hanuman
  9. Small Hanuman
  10. Kamadhenu
  11. Garudan near Permumal Sannadhi
  12. Navaneetha krishna
  13. Alwar
  14. Lakshmi Hayagreeva
  15. Sakkarathalvar - Yoganarasimhan
  16. Renganathan Swamy
  17. Dhanvantari Perumal
  18. Pandu Ranga Ragumahi
  19. Poovaraga perumal
  20. Radha krishna
  21. Navakiragam
  22. Narasimha permula
  23. Vedantha desikar
Festival Videos:

Panguni festival, Sesa vaganam in vandiyur.


 

Vaikuntha Ekadashi 2017 Video:




Address:
2, therku krishnan kovil street, S Krishnan Koil St, Madurai Main, Madurai, Tamil Nadu 625001

Map Location:


Note: if any query pls share ur comment

108 Divya Desam Kovil In Madurai | Pandiya Nadu Divya Desam | Koodal Alagar Kovil in Madurai

Koodal Azhagar Kovil

is a famous Hindu temple dedicated to Lord Vishnu located in the center of the city of Madurai, Tamil Nadu, India. It is one of the 108 Divyadesam the holy abodes of Vishnu.



Sannadhi in Temple

  1. Main God : Koodal Alagar Perumal
  2. Thayar Name: Mathura Valli Thayar
  3. Andal
  4. Garudalwar straight to perumal saanadhi
  5. Hanuman straight to Ramar Sannadhi
  6. Rama, Sita, laxman, hanuman
  7. Krishna
  8. Lakshmi Narasimha
  9. Lakshmi Narayana
  10. Narasimha
  11. Navakiragam
  12. Alwars
  13. Manavala Mamunigal
  14. Visveswaran
  15. Sakkarathalvar
  16. Yoga Narasimha
  17. Sudharsan chakram
  18. Pictures draw Brahman, Laxmi, Narasimha
  19. Address:
  20. Arulmigu Koodal Azhagar Permual Temple,
  21. Perumal Koil Sannathi Street,
  22. Opp Periyar Bus Stand,
  23. Periyar
  24. Madurai - 625001.

Map Location

Koodal Alagar Temple to Mattuthavani

Koodal Alagar Temple to Periyar Bus Stand

Arappalayam Bus stand to Koodal Alagar Temple

Official Website from Temple
Koodal Alagar Official Website




Note: Please update in a comment, for more information.

Featured Post

Agasthiyar Malai Trek | Pothigai Malai Trek | Agathiyarkoodam Off Season Package | Trek Booking

Hi All, Today I'm going to share about AgasthyaMalai Trek Booking. Read all the instructions carefully before going to book. Agasthyarko...