All Temple Blog Site is related to Holy places. How to go or how to reach destination places related to festival, thiruvizha, kovil, mandir, temples, hills, mountain.
A temple where more than 200 saints are enshrined in one place | 200க்கும் அதிகமான மகான்கள் ஒரே இடத்தில் சமாதியான சிவாலயம்
தலைகீழாக விழும் கோபுரத்தின் நிழல்!
கர்நாடகா மாநிலம் மகதி அருள்மிகு ஶ்ரீசோமேஸ்வரர் திருக்கோயில்
Parvathamalai | பருவதமலை
மூன்று வேளையும் நிறம் மாறும் பழமை வாய்ந்த சிவலிங்கம்
திருவாதவூர் கோயில்
சிதம்பரம் தீர்த்த மஹிமை
சிதம்பரத்திலே பத்துத் தீர்த்தங்கள் உள்ளன.
அவை: -
1. சிவ கங்கை - இது கனகசபைக்கு வடக்கே உள்ளது.
2. குய்ய தீர்த்தம் - இது திருக்கோயிலுக்கு வடகிழக்கே உள்ள சமுத்திரத்திற் பாசமறுத்த துறை.
3. புலிமடு - இது திருக்கோயிலுக்குத் தெற்கே உள்ளது.
4. வியாக்கிரபாத தீர்த்தம் - இது திருக்கோயிலுக்கு மேற்கே, திருப்புலீச்சுரத்துக்கு எதிரே உள்ளது. இது இளமைநாயனார் குளம் எனவும் பெயர் பெறும்.
5. அனந்த தீர்த்தம் - இது திருக்கோயிலுக்கு மேற்கே திருவனந்தேச்சுரத்துக்கு முன் உள்ளது.
6. நாகசேரி - இது திருவனந்த்தேச்சுரத்துக்கு மேற்ௐஏ உள்ளது.
7. பிரம தீர்த்தம் - இது திருக்கோயிலுக்கு வடமேற்கே திருக்களாஞ்சேரியில் உள்ளது.
8. சிவப்பிரியை - இது திருக்கோயிலுக்கு வடக்கே பிரமசாமுண்டி கோயிலுக்கு முன்னே உள்ளது.
9. திருப்பாற் கடல் - இது சிவப்பிரியைக்குத் தென்கிழக்கே உள்ளது.
10. பரமானந்த கூபம் - இது கனகசபைக்குக் கிழக்கே உள்ளது.
சிவகங்கை சிவவடிவம். அது கோடி ஜன்மார்ஜிதமான பாவ சமூகங்களைத் தனது மகாத்மிய புண்ணிய சிரவணத்தினாற் போக்க வல்லமையுள்ளது. அச்சிவகங்கையின் தென்கரையில் சிவபெருமான் ஆநந்தத்தாண்டவம் செய்துவருகின்றார். அத்தீர்த்தம் உலகின் கண்ணுள்ள எல்லாப் புனித தீர்த்தங்களிலும் மிகப் புனிதமுடையது.
புண்ணியத்தை விருத்திசெய்து வீடளித்தற்குப் பெரிய காரணமானது. தங்கமயமான பங்கய மலர்ந்து எங்கும் மணம் வீசும் அத்தீர்த்தத்தில் பக்தியில்லாது, விளையாட்டாகவாயினும் அருந்தல் குளித்தல் ஸ்நான முதலியவைகள் செய்தவரைப் பார்த்த எமனுடைய ஹிருதயம் நடுங்கும். அவர்களுடைய வரவை நினைத்துச் சிவலோகம் விசாலத்தை அபேக்ஷிக்கும்.
புண்ணியம் நிறைந்த அத்தீர்த்தத்தில் ஒருமுறை ஸ்நானஞ் செய்தவன் பிறகு எத்தலத்தில் எவ்விதமா யிருப்பினும் சிவலோகத்தை யடைவான். அதில் ஸ்நானஞ்செய்து, சிற்றம்பலத்தில் நர்த்தனஞ் செய்யும் சிவபெருமானைத் தரிசித்துச் சிவ பஞ்சாக்ஷரத்தை ஆயிரத்தெட்டு உரு ஜெபித்தவன் சகல பாவங்களினின்றும் விடுபட்டு சிவரூபத்தை யடைவான். மேஷ சங்கரமணத்தில் ஸ்நானஞ் செய்தவர்கள் உடனே மகா பாவங்களினின்றும் விடுபடுவார்கள்.
ஆனிமாசப் பிரவேசத்திலும், அந்தமாசத்திய கிருஷ்ணபக்ஷ அஷ்டமியிலும் ஸ்நாநஞ் செய்தவர்கள் அளவிறந்த சிவ புண்ணியங்களை அடைவார்கள். துலா மாசத்தில் உத்திர நக்ஷத்த்ரத்தில் ஸ்நானஞ் செய்தவர்கள் ஜனன மரணத்தினின்றும் நீங்குவார்கள். தை மாசத்தில் புஷ்ய நக்ஷத்திரத்தில் ஸ்நானஞ் செய்தவர்கள் தேவர்கட்கெல்லாம் தலைவராவார்கள். பங்குனி மாசத்தில் உத்திர நக்ஷத்திரத்தில் ஸ்நானஞ் செய்தவர்கள் சிவபெருமானது சாரூப்பியத்தை யடைவார்கள். சுக்கிரவாரத்தில் ஸ்நானம் பண்ணினவர்களின் புண்ணியவிசேஷத்தைச் சொல்ல முடியாது.
மாசிமாசம் கிருஷ்ணபக்ஷம் அஷ்டமியில் ஸ்நானஞ் செய்தவர்கள் பிதுர் குலங்களில் நூறு குலங்களை மோக்ஷத்திற் சேர்ப்பார்கள். ஆவணி மாசத்தில் ஸ்நானஞ் செய்து தர்ப்பணஞ் செய்தவர்கள் இருபத்தொரு குலங்களைத் திருப்தி செய்விப்பார்கள். மார்கழி மாசத்தில் சுக்கில பக்ஷத்திலாவது கிருஷ்ண பக்ஷத்திலாவது பிதுருக்களை உத்தேசித்து அச் சிவகங்கைக் கரையில் சிராத்தஞ் செய்பவர்கள் ஏழு குலங்களைத் தாரணஞ் செய்விப்பார்கள். சந்திர சூரியர்களுடைய கிரஹண காலங்களிலும், திருவாதிரை நக்ஷத்திரத்திலும் ஸ்நானஞ் செய்து சிராத்தம் புரிபவர்கள், கதியற்றவர்களாய்ப் பசியாலும் தாகத்தாலும் வருந்துகிறவர்களான தமது குல பிதுருக்களைப் பிரமகற்பம் வரையில் நித்திய திருப்தர்களாகச் செய்வார்கள். அப் புண்ணிய தடாகக்கரையில் பிராமண போஜனஞ் செய்து வைப்பவர்கள் தமது வம்சங்களுடன் சிவசாயுஜ்ஜியத்தை யடைவார்கள்.
ஸ்ரீ மார்கண்டேயர் கோயில் | Markandeya Temple
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த (என்றும் பதினாறு)
திருமணல்மேடு ஸ்ரீ மார்கண்டேயர் கோயில் திருகடையூர் அருகே உள்ளது. இது முற்றிலும் ஒரு சைவ திருதலம் ஆகும். இந்த கோவில் திருமணல்மேடு என அழைக்கப்படும் ஒரு சிறிய கிராமத்தில் திருகடையூரிலிருந்து 0.5.km தென்மேற்கில் அமைந்துள்ளது.
இங்கே அவரது பெற்றோர் ஒரு ஆண் குழந்தை வரம் வேண்டி பக்தியுடன் தங்களை அர்ப்பணித்து பிரார்த்தனை மற்றும் சிறப்பு சிவ பூஜைகள் செய்தனர். அதன் பலனாக சிவன் என்றும் பதினாறு வயது மார்கண்டேயரை தந்தருளினார். இந்த தலத்தில் ஸ்ரீ மார்கண்டேயர் சிவ பூஜைகள் மற்றும் வழிபாடுகள் செய்து என்றும் பதினாறு என்று சொல்லும் சிரஞ்சிவியின் அடையாளமாக விளங்கினார்.
இந்த கோவிலில், ஸ்ரீ மார்கண்டேயர் சிவபெருமான் முன் மூலவராய் அமர்ந்து பக்தர்களுக்கு நீண்ட வளமான வாழ்க்கை அமைய ஆசீர்வதிக்கிறார். ஸ்ரீ மார்கண்டேயரை ஒரு உண்மையான பக்தன் என்று சிவபெருமான் குறிப்பிட்டார். இதனால் இந்த கோயில் தனி முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.
திருகடையூர் வந்து இறைவன் ஸ்ரீ அமிர்தகடேஸ்வர் மற்றும் ஸ்ரீ அபிராமியை வளமான வாழ்க்கை பெற பிரார்த்தனை செய்யும் பக்தர்கள் கூட ஒரு முழு வளமான வாழ்க்கை மற்றும் அவர்கள் குடும்பத்தின் நலனுக்காக இந்த ஸ்ரீ மார்கண்டேயர் கோவிலுக்கும் வந்து தரிசித்து வழிபட வேண்டும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் கோவில் ஆச்சாரியர்கள் தமிழ் மாதம் (மீனா மாசம்) பங்குனியில் அசுவதி நக்ஷத்திர நாளிள் ஒரு முக்கியமான பூஜா செய்வார்கள்.
அன்று தான் சிவபெருமான் தனது பக்தன் ஸ்ரீ மார்கண்டேயரை ஒரு கடம் கங்கை நீர் கொண்டு புனிதபடுத்தி ஆசிர்வதி த்ததாக கூறப்படுகிறது. இங்கு பகவானுக்கு பூஜைகள் செய்ய விரும்பும் பக்தர்கள் ஸ்வாமி அம்பாளுக்கு திருகல்யாணம் செய்வித்து சிறப்பு ஹோமம் செய்து வழி பட்டால் கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. திருமணமாகாத மக்களுக்காக ஸ்வாமிஅம்பாளுக்கு திருகல்யாணம் செய்வித்து சிறப்பு ஹோமம் செய்து வழி பட்டாலும் அவர்களுக்கு விரைவில் திருமணம்கைக்கூடும் எனவும் நம்பப்படுகிறது.
பஞ்சக்ஷர ஹோமம் என்று ஒரு சிறப்பு ஹோமமும், சங்காபிஷேகமும் இத்திருதலத்தில் செய்து வழிபட்டால் நோயற்ற வாழ்வு வாழ கிடைக்கும் என ஐதிகம்.
Sri Thenthiruvalavai Swamy koil Sivan Temple | தென் திருவாலவாய் திருக்கோயில்
தென் திருவாலவாய் திருக்கோயில் , தெற்கு மாசி வீதி , மதுரை :
Maps Location : Sri Thenthiruvalavai Swamy koil Sivan Temple
Thiru Aappudayar Temple | திருஆப்புடையார் திருக்கோயில், செல்லூர், மதுரை
13 Tirthas in one well | ஒரே கிணற்றில் 13 தீர்த்தங்கள்
மனிதர்கள் வாழ்வில் எல்லாவிதமான இன்பங்களையும். பேறுகளையும் அடைய விடாமல் தடுத்து நிறுத்துவது முன்னோர்கள் சாபம் எனப்படும் பித்ரு சாபம்தான். அப்படிப்பட்ட பித்ரு சாபங்களை நீக்கும் திருத்தலமாக திருப்பூந்துருத்தி திருத்தலம் அமைந்துள்ளது. இது சிறப்பு மிக்க சிவாலயங்களில் ஒன்று. இங்கு புஷ்பவனேஸ்வரர் என்ற திருநாமத்துடன் இறைவன் அருள்பாலிக்கிறார். இறைவியின் திருநாமம் சவுந்தரிய நாயகி ஆகும்.
அங்கும் தவம் இருந்தார். அவரது தவத்தை மெச்சிய ஈசன், ஆடி அமாவாசை அன்று காசிபருக்கு, விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதராக திருக்காட்சி கொடுத்தார். மேலும் 13 புனித தீர்த்தங்களையும், ஒரே இடத்தில் (திருப்பூந்துருத்தியில்) பாயும்படிச் செய்தார். அந்தத் தீர்த்தம் தற்போது, காசிப தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது. காசிபர் அந்த புனித நீரில் நீராடி, ஈசனையும், அம்பாளையும் அந்த நீரால் அபிஷேகம் செய்து வழிபட்டார். அதன் காரணமாக அவருக்கு ஈசனுடன் ஐக்கியமாகும் முக்தி நிலை கிடைத்ததாக தலபுராணம் கூறுகிறது.
காசிப தீர்த்தம், இத்தலத்தில் சோமாஸ்கந்த மண்டபத்தை அடுத்துள்ள பகுதியில், தென்கிழக்கு மூலையில் கிணறு வடிவில் உள்ளது. இந்தத் தீர்த்தத்தின் அருகில் ஆதி விநாயகர், சம்பந்தர், அப்பர், பரவை மற்றும் சங்கிலி நாச்சியார் சமேத சுந்தரர் ஆகியோர் உள்ளனர். இந்த ஆலயத்தில் அமாவாசை தோறும் கிரிவலம் நடைபெறுகிறது. அதிலும் ஆடி அமாவாசை நாளில் இத்தலத்தை கிரிவலம் வந்தால், பித்ரு சாபங்கள் நீங்கும்; செல்வ வளம் பெருகும்; தடைகள் அகலும்; தீவினைகளும் விலகும் என்பது ஐதீகம்.
ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று, இவ்வாலயத்தில் திருவிழா நடத்தப்படுகிறது. அன்றைய தினம் காசிப தீர்த்தத்தில் நீராடினால் 13 புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய முழு பலனும் கிடைக்கும். அதே போல் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை காலங்களிலும் இந்த தீர்த்தத்தில் நீராடலாம்.
இக்கோவிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது. கோபுர வாசல் வழியே உள்ளே நுழைந்ததும் பஞ்சமூர்த்தி மண்டபம் உள்ளது. கொடிமரம் இல்லை. பலிபீடமும், நந்தி மண்டபம் மட்டும் உள்ளன. நந்தி மண்டபத்திலுள்ள பெரிய நந்தி சற்றே பள்ளத்தில் இறைவன் சன்னிதிக்கு நேராக இல்லாமல் விலகியுள்ளது. வெளிப் பிரகாரத்தில் வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சன்னிதி உள்ளது. இரண்டாவது உள்வாசலைத் தாண்டியதும் வசந்த மண்டபம். கொடிமரம், பலிபீடம் காணப்படுகின்றன. இங்கும் நந்தி சன்னிதியை விட்டு விலகியவாறு உள்ளது.
சுவாமி சன்னிதிக்குத் தென்புறம் சோமாஸ்கந்த மண்டபமும், அடுத்து நடராச சபையும் உள்ளது. உள் பிரகாரத்தில் விநாயகர், சப்தமாதர்கள், நால்வர் சன்னிதிகள் உள்ளன. கருவறையின் தென்புறம் தென்கயிலையும், வடபுறத்தில் வடகயிலையுமாகிய கோவில்கள் விளங்குகின்றன. மகா மண்டபம், அர்த்த மண்டபம் கடந்து கருவறையில் மூலவர் புஷ்பவன நாதர் எழுந்தருளியுள்ளார்.
கோஷ்ட மூர்த்தங்களில் வீணாதர தட்சிணாமூர்த்தி திருமேனியும், மேற்கு கோஷ்டத்தில் அர்த்தநாரீஸ்வரரும் இருக்கின்றனர். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்
ஒரே நேர் கோட்டில் அமைந்துள்ள சிவன் கோயில்கள்
உத்தரகோசமங்கை | Uthirakosamangai Temple
- திருவாரூரில் பிறந்தால் முக்தி,
- காசியில் இறந்தால் முக்தி.
- அண்ணாமலையை நினைத்தால் முக்தி என்பார்கள்.
- இங்கே உத்தர கோச மங்கை மண்ணை மிதித்தாலே முக்தி.
Featured Post
Agasthiyar Malai Trek | Pothigai Malai Trek | Agathiyarkoodam Off Season Package | Trek Booking
Hi All, Today I'm going to share about AgasthyaMalai Trek Booking. Read all the instructions carefully before going to book. Agasthyarko...
-
அகஸ்தியர் மலையில் தான் தாமிரபரணி, நெய்யாறு, கரமணை போன்ற நதிகள் உற்பத்தியாகின்றன. சுமார் 2,500 அரியவகை மூலிகைச் செடிகள், மரங்கள் நிறைந்த யு...
-
Hi All, Today I'm going to share about AgasthyaMalai Trek Booking. Read all the instructions carefully before going to book. Agasthyarko...
-
Sri Nandishwara Teertha Temple in Bangalore This temple is located near malleshwaram area. Go by Bus: Go to Majestic –> from there so man...