Vakku tavarata nermaiyum elimaiyume irandu mukkiya tevaikkal |வாக்குத் தவறாத நேர்மையும், எளிமையுமே .இரண்டு முக்கிய தேவைகள்
வாக்குத் தவறாத நேர்மையும், எளிமையுமே .இரண்டு முக்கிய தேவைகள்.." (வெள்ளம் போல் கொட்டித்தீர்த்த பெரியவாள்) சொன்னவர்; ஓர் சம்பவம் ஜே.டபிள்யூ எல்டர் என்ற ஐரோப்பியர், பெரியவாள் தரிசனத்துக்கு வந்தார். அவர், ஹிந்து சமயம்,பாரதப் பண்பாடு பற்றி நிறைய அறிந்திருந்தார். பாரதத்தில் பல துறவிகளையும்,மகான்களையும் சந்தித்து வெகுநேரம் உரையாடியிருக்கிறார். எல்லோரும் அறிவுபூர்வமான பதில்களைச் சொன்னார்களே தவிர. இதயபூர்வமான பதில்களைக் கூறவில்லை - என்று, அவருக்குத் தோன்றியது. "என் சந்தேகத்துக்குத் தெளிவு கிடைக்காமலே நான் திரும்பிப்போக வேண்டியதுதானா?" என்று நொந்து கொண்டிருக்கும் வேளையில், பெரியவாள் தரிசனம் கிடைத்தது. 'பெரியவா சிரிக்கும்போது, குழந்தை கிறிஸ்து சிரிப்பது போலிருக்கிறது!... மானுடத்தை விஞ்சிய ஒரு தெய்வீக ஈர்ப்பு இருக்கிறது...' இந்தக் 'குழந்தை' என் கேள்விகளுக்குப் பதில் சொல்லுமோ?.. கேட்டுப் பார்க்கலாமே? "சுவாமிஜி! ஹிந்து சமயக் கோட்பாடுகளில், எந்த இரண்டு தத்துவங்களை, இன்றைய காலகட்டத்தில், அழுத்தமாக விளக்கிக் கூறி, மக்கட் சமுதாயம் பயன் பெறச் செய்ய வேண்டும் என்று தாங்