இடுகைகள்

செப்டம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Vakku tavarata nermaiyum elimaiyume irandu mukkiya tevaikkal |வாக்குத் தவறாத நேர்மையும், எளிமையுமே .இரண்டு முக்கிய தேவைகள்

படம்
வாக்குத் தவறாத நேர்மையும், எளிமையுமே .இரண்டு முக்கிய தேவைகள்.." (வெள்ளம் போல் கொட்டித்தீர்த்த பெரியவாள்) சொன்னவர்; ஓர் சம்பவம்  ஜே.டபிள்யூ எல்டர் என்ற ஐரோப்பியர், பெரியவாள் தரிசனத்துக்கு வந்தார். அவர், ஹிந்து சமயம்,பாரதப் பண்பாடு பற்றி நிறைய அறிந்திருந்தார். பாரதத்தில் பல துறவிகளையும்,மகான்களையும் சந்தித்து வெகுநேரம் உரையாடியிருக்கிறார். எல்லோரும் அறிவுபூர்வமான பதில்களைச் சொன்னார்களே தவிர. இதயபூர்வமான பதில்களைக் கூறவில்லை - என்று, அவருக்குத் தோன்றியது. "என் சந்தேகத்துக்குத் தெளிவு கிடைக்காமலே நான் திரும்பிப்போக வேண்டியதுதானா?" என்று நொந்து கொண்டிருக்கும் வேளையில், பெரியவாள் தரிசனம் கிடைத்தது. 'பெரியவா சிரிக்கும்போது, குழந்தை கிறிஸ்து சிரிப்பது போலிருக்கிறது!... மானுடத்தை விஞ்சிய ஒரு தெய்வீக ஈர்ப்பு இருக்கிறது...' இந்தக் 'குழந்தை' என் கேள்விகளுக்குப் பதில் சொல்லுமோ?.. கேட்டுப் பார்க்கலாமே? "சுவாமிஜி! ஹிந்து சமயக் கோட்பாடுகளில், எந்த இரண்டு தத்துவங்களை, இன்றைய காலகட்டத்தில், அழுத்தமாக விளக்கிக் கூறி, மக்கட் சமுதாயம் பயன் பெறச் செய்ய வேண்டும் என்று தாங்

Fasting at least twice a month to give rest to the stomach | மாதம் இரு முறையாவது வயிற்றுக்கு ஓய்வு கொடுக்க விரதம்

படம்
பக்தி செலுத்துவதால் முக்தி கிடைத்துவிடும் என்றால், நாம் செலுத்தும் பக்தியே நேராக முக்தியைக் கொடுத்து விடுகிறது என்று அர்த்தமில்லை. நாம் செய்யும் செயல் எதுவுமே தானாக எந்தப் பலனையும் தருவதில்லை. பலன்களைத் தருபவர் ஈஸ்வரனாகவே இருக்கிறார். முதலில் உள்ளத்தை பால் போல் தூய்மை ஆக்க வேண்டும். பக்தி என்னும் தீயில் அதை பதமாக காய்ச்ச வேண்டும். சாந்தத்தைக் கொண்டு உறை ஊற்றி தயிராக்க வேண்டும்.  இதயம் என்னும் குடத்தில் தயிர் ஊற்றி அது உறைந்ததும், சித்த ஏகாக்கிரதம் என்னும் மத்தைக் கொண்டு கடைந்து, பூத்துவரும் வெண்ணெயைப் போன்ற ஞானத்தால் இதயத்தில் வீற்றிருக்கும் பரமபுருஷனைக் உணர வேண்டும். தயிரில் பால், வெண்ணெய், நெய் ஆகிய முப்பொருளும் அடங்கியிருந்தாலும், அவற்றை தக்க முறைகள் கொண்டே தனித்தனியாக்க முடியும் என்பது உண்மை. அதைப்போலவே நம் இதயத்தில் உறைந்திருக்கும் கடவுளை காண வேண்டுமானால், தக்க முயற்சிகள் எடுத்தால் தான் இயலும். அதற்கு மிகுந்த பொறுமையும், சகிப்புத்தன்மையும், விடாமுயற்சியும் தேவை. மாதம் இரு முறையாவது வயிற்றுக்கு ஓய்வு கொடுக்க விரதம் இருத்தல் அறம். இதனால், பெரும்பாலான உடல் வியாதிகளில் இருந்து தப்பித்

Mahabharatham Kannan Alutha Idam | மகாபாரதத்தில் கண்ணன் அழுத இடம்

படம்
மகாபாரதத்தில் கண்ணன் அழுத இடம்.. உடல் அழியக் கூடியது. ஆத்மா அழியாது என்று அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்த கண்ணன் அழுத இடம் ஒன்று உண்டு. அது எந்த இடம் தெரியுமா? கர்ணன் அடிபட்டு இறக்கும் தருவாயில் இருக்கிறான். அவன் செய்த தர்மம் அவனைக் காத்து நின்றது. அந்த தர்மத்தையும் கண்ணன் தானமாகப் பெற்றுக் கொண்டான். கண்ணனுக்கே தாங்கவில்லை. "உனக்கு ஒரு வரம் தர விரும்புகிறேன். என்ன வரம் வேண்டுமோ கேள்" என்றான். அப்போதும் கர்ணன் "மறு பிறவி என்று ஒன்று வேண்டாம். அப்படி ஒரு வேளை பிறக்க நேர்ந்தால், யாருக்கும் இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும் உள்ளத்தைத் தா" என்று வேண்டினான். கண்ணன் அழுதே விட்டான். இப்படி ஒரு நல்லவனா என்று அவனால் தாங்க முடியவில்லை. கீழே விழுந்து கிடந்த கர்ணனை அப்படியே எடுத்து மார்போடு அனைத்துக் கொண்டான். கண்ணனின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்தக் கண்ணீரால் கர்ணனை நீராட்டினான். கர்ணன் கேட்டதோ இல்லை என்று சொல்லாத உள்ளம் மட்டும் தான். கண்ணன் மேலும் பலவற்றை சேர்த்துத் தருகிறான் "நீ எத்தனை பிறவி எடுத்தாலும், தானம் செய்து, அதைச் செய்ய நிறைய செல்வமும் பெற

Ellarum Nalla Irukanum Aasai | எல்லாரும் சவுக்கியமா இருக்கணுமேனு ஆசை

படம்
"எனக்கு என்ன ஆசை தெரியுமா! காஞ்சி மடத்துக்கு வருகிற பக்தர்கள் எல்லாரும் சவுக்கியமா இருக்கணுமேனு ஆசை " ஒரு சமயம், மகாபெரியவர் காஞ்சிபுரம் அருகிலுள்ள தேனம்பாக்கத்தில் முகாமிட்டு இருந்தார். பெரியவருக்கு நெருக்கமான தொண்டர்களான திருவட்டீஸ்வரன் பேட்டை வெங்கட்ராம அய்யர், பாணாம்பட்டு கண்ணன் ஆகியோர் அருகில் இருந்தனர். அன்று மகாபெரியவரின் ஜெயந்தி (பிறந்த நாள்). பெரியவர் அன்று காலையில்,அனுஷ்டானம், ஸ்நானம் முடித்துக் கொண்டு பக்தர்களுக்கு தரிசனம் அளிக்க வெளியே வந்தார். ஏராளமான கூட்டம் இருந்தது. எத்தனையோ ஊர்களில் இருந்து பெரியவருக்காக ஹோமம் செய்து கொண்டு வரப்பட்ட பிரசாதங்கள், ஹோம பஸ்மா, கோயில் தண்டு மாலைகள், வில்வம், துளசி மாலைகள், பரிவட்டங்கள், திருப்பதி லட்டு, திருநீறு, குங்குமம் என அனைத்தையும் ஏந்தி வந்தனர் பக்தர்கள். வந்தவர்கள் எல்லாரது நோக்கமும் பெரியவர் ஆரோக்கியமாக தீர்க்காயுளுடன் இருக்க வேண்டும் என்ற ரீதியிலேயே இருந்தது. அதற்காக, பெரியவர் பெயரில் அவரவர் இஷ்ட தெய்வக் கோயில்களில் அர்ச்சனை செய்து பிரசாதம் கொண்டு வந்திருந்தனர். அதை ஏற்றுக்கொள்ளுமாறு எல்லாரும் வேண்டிக் கொண்டிருந்தனர். பெ

Pithamagar kalathil viizththappattaar | பிதாமகர் களத்தில் வீழ்த்தப்பட்டார்

படம்
பிதாமகர் களத்தில் வீழ்த்தப்பட்டார் பீஷ்மர் என்ற செய்தி கர்ணனை அடைந்ததும், அதிர்ந்துபோனான். எவர் வீழ்த்தியது என ஆவேசப்பட்டான். அர்ஜீனனின் பெயர் கேட்டவுடன் கொதித்தான். பிதாமகரை அத்தனை எளிதாய் வீழ்த்திவிட்டானா அர்ஜீனன்?.. என கோபப்பட்டான் கர்ணன். இல்லை. சிகண்டியை முன்னிறுத்தி பீஷ்மரை வீழ்த்திவிட்டார்கள்.. என்றான் தகவல் கொண்டுவந்த வீரன். அதர்மத்தின் பக்கம் நாங்கள் நிற்கிறோம் என்று எங்களை குறைகூறிய பாண்டவர்களே, அதர்மத்தினைக் கையாளுவதுதான் தர்மமா ? அர்ஜீனா.. இதோ வருகிறேன். சந்திக்கிறேன் உன்னை களத்தில். உன்னைக் கொல்லவேண்டும் என நான் நினைத்ததற்கான காரணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக கூடிக்கொண்டே போகின்றன.. என தனக்குள் பொங்கினான். இறுதியாக ஒருமுறை, பீஷ்மரின் திருமுகத்தைக் கண்டுவரக் கிளம்பினான் குருஷேத்திரம் நோக்கி. கௌரவர் சேனையும், பாண்டவர் சேனையும் அணிவகுத்து நின்று, ஒவ்வொருவராய் பீஷ்மரைக் கண்டு கலங்கியபடியே நகர்ந்தார்கள் களத்தில். போதும் புறப்பட்டுவிடலாம் என நினைத்த பீஷ்மம், தனது தாயின் மடியினைத் தேடியது. தாய் தந்த அமுதோடு உயிர்கொண்டோம். அதோடே, உயிர் துறப்போம் என்று எண்ணிய பீஷ்மர், அர்ஜீனனை அருகில் அழ

கவனத்தை ஈர்ப்பது தெற்கு நோக்கி காட்சி அளிக்கும் முக்குறுணி விநாயகர்

படம்
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமிக்கு அடுத்து அனைவரின் கவனத்தை ஈர்ப்பது தெற்கு நோக்கி காட்சி அளிக்கும் முக்குறுணி விநாயகர். 8 அடி உயரமுள்ள அந்த விநாயகர் சிலையானது அப்படியே முழு உருவமாக மண்ணில் இருந்து கிடைத்ததாகும். திருமலைநாயக்கர் மன்னர், அரண்மனை கட்டுவதற்காக மண் எடுக்க தற்போதுள்ள தெப்பக்குளம் பகுதியில் தோண்டினார். அப்போது பூமிக்கு அடியில் 8 அடி உயரத்தில் 4 கரங்களுடன் அமர்ந்த நிலையில் விநாயகர் உருவ சிலை மண்ணில் புதைந்து கிடந்தது. அந்த சிலையை அப்படியே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மன் சன்னதியில் இருந்து சுவாமி சன்னதிக்கு செல்லும் வழியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். விநாயகர் சதுர்த்தி தினத்தன்று விநாயகருக்கு வெள்ளியால் ஆன கவசம் அணிவிக்கப்படும். பின்னர் உச்சிகால பூஜையின் போது விநாயகருக்கு மெகா கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும். இது குறித்து மீனாட்சி அம்மன் கோவில் பட்டர் கூறியதாவது:- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தி அன்று 18 படியில் ராட்சத கொழுக்கட்டை படைக்கப்படும். குறுணி என்றால் 6

What is the benefit of doing tarpanam chiradham to our deceased parents and ancestors? | மறைந்த நம் தாய் தந்தையர்க்கு, முன்னோர்க்கு, தர்ப்பணம் சிராத்தம் - பண்ணுவதால் என்ன பயன்?

படம்
மறைந்த நம் தாய் தந்தையர்க்கு, முன்னோர்க்கு, தர்ப்பணம் சிராத்தம் - பண்ணுவதால் என்ன பயன்? யாரோ ஒருவருக்கு வாழைக்காய், அரிசி கொடுத்தால் அது முன்னோர்களைச் சேருமா? ஒருவர் பட்டணத்தில் பிள்ளையை படிக்க வைத்திருந்தார். பரிட்சைக்குப் பணம் கட்ட வேண்டியிருக்கிறது. அதுவும் மறுநாள் கட்ட வேண்டியிருக்கிறது. உடனே அப்பாவுக்கு தந்தி மணியாடரில் பணம் அனுப்பு என்று எழுதினான். அப்பாவுக்குத் தந்தியும் மணியார்டரும் தனித்தனியாகத் தெரியும். பிள்ளையோ தந்தி மணியார்டர் அனுப்பும்படி எழுதியிருக்கிறான். அப்பா தபாலாபீசுக்கு போனார். ரூபாயைக் கொடுத்துவிட்டுத் தந்தி மணியார்டர் பண்ண வேண்டும் என்றார். அவர், தபாலாபீஸ் குமாஸ்தா ரூபாயில் ஒட்டை பண்ணித் தந்திக் கம்பியில் கட்டி அனுப்புவார் என்று எண்ணினார். ஆனால் பணம் வாங்கிக் கொண்ட குமாஸ்தா ரசீது கொடுத்துவிட்டு, சரி, உம்முடைய பணம் வந்து சேர்ந்துவிடும். அனுப்பியாகிவிட்டது என்றார். குமாஸ்தா பணத்தை பெட்டியில் போட்டதையும், ஒட்டை பண்ணிக் கம்பியில் கோர்க்காமலிருப்பதையும் பார்த்த அப்பாக்காரர், என் பணம் இங்கேதானே இருக்கிறது. அதில் ஒட்டை ஒன்றும் போட்டு அனுப்பவில்லையே. அது எப்படிப் போய்ச்

Kannika thanam patri vilakkam |கன்னிகா தானம் பற்றி விளக்கம்.

படம்
கன்னிகா தானம் பற்றி விளக்கம். இல்லற தர்மத்திலே ஆண் குழந்தைகள் பிறக்க வேண்டும். ஒரு புத்திரன் பிறந்தால் அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யும் கைங்கர்யங்களின் மூலம் தந்தைக்கு நல்ல கதியைத் தருகிறான். ஆண் குழந்தையை பெற்ற தந்தைக்கு "புத்"என்கிற நரகம் கிடைக்காமல் பிள்ளை செய்துவிடுகிறான். இது சாஸ்த்ரத்தில் உள்ளது. அப்போ பெண்ணை பெத்தவாளுக்கு? "தசாநாம் பூர்வேஷாம் தசாநாம் பரேஷாம் ஆத்ம நச்ச லோத் தாரண த்வாரா நித்யநிரதிசய ஆனந்த ஸாஸ்வத விஷ்ணுலோக வாப்யர்தம் கன்னிகா தானாக்ய மஹாதானம் கர்த்தும் யோக்யதா ஸித்திம் அநுக்கிரஹாண"...... கன்னிகா தானத்தின் போது செய்கின்ற ஸங்கல்ப மந்திரம். 'தசாநாம் பூர்வேஷாம்' என்றால் எனக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறைகள் . 'தசாநாம் பரேஷாம்' என்றால் எனக்குப் பின்னாலே வரக்கூடிய பத்து தலைமுறைகள். 'ஆத்ம நச்ச' என்றால் என்னுடன் சேர்த்து 21 தலைமுறைகளான என்னுடைய குலம் உத்தாரணம் பெறுவற்கும் நிலைத்த விஷ்ணு லோகத்தை நான் அடைவதற்கும் இந்த மாபெறும் தானமாகிய "கன்னிகாதானம்" உதவி செய்கிறது. ஒரு நல்ல பெண்ணைப் பெற்றெடுத்து அவளைத் தன் குலத்துக்கு இ

Madurai meenakshi sundareswara kovil festival list in all tamil month | தமிழ் மாதம் - மதுரை மீனாட்சி அம்மன்

படம்
தமிழ் மாதம் - மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை சித்ரா பௌர்ணமி, மதுரையில் சிறப்பாகக் கருதப்படுகிறது. அதே நாளில், மதுரை வைகை ஆற்றில், 'கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு', காலை சுமார் ஏழு மணிக்கு முன், மிகப் பெரிய திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. மதுரையைச் சுற்றியுள்ள ஊர்களிலிருந்து, பல இலட்சம் மக்கள் இதைக் காண இங்கு கூடுகின்றனர். வைகாசி வைகாசி மாதம் கோடை வசந்தத் திருவிழா. திருவாதிரை நட்சத்திரத்திலே இருந்து பத்து நாட்கள் எண்ணெய்க்காப்பு நடக்கிறது. ஆனி தினமும் மாலை ஆறு மணியில் இருந்து இரவு ஒன்பது மணி வரைக்கும் நூறு கால் மண்டபத்திலே ஒரே ஊஞ்சலில் சுந்தரேசுவரரோடு மீனாட்சி அமர்ந்து ஊஞ்சலாட ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. ஆடி ஆடி மாதத்தில் பத்து நாளைக்கு முளைக்கொட்டு உற்சவம் நடைபெறுகிறது. கொடியேற்றம் மீனாட்சிக்கு மட்டுமே நடைபெறும். ஆவணி ஆவணி மாதம் மூலத் திருநாள், ஆவணி மூலஉற்சவம் என்றே பெயர் பெற்றது. நான்கு ஆவணி வீதிகளிலும் அம்பாளும், சுந்தரேசுவரரும் வீதி உலா வருவார்கள். கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம், வளையல் விற்ற திருவிளையாடல், பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல், நரியைப் பரியாக்கியது,

Name of kochadai | கோச்சடை பெயர் காரணம்

படம்
கோச்சடை பெயர் காரணம் : கோவிச்சி சடையன் என்ற பெயரே பின்னர் கோச்சடை என்றானது. பாண்டிய மன்னனிடம் பெருமான் பிரம்படி வாங்கிய கதை கோச்சடையில் தான் நடந்தது. கோச்சடையில் உள்ள மீனாட்சி கோவிலில் இறைவன் பிரம்படி வாங்குவது போன்ற சிலை அமைக்கப் பெற்றுள்ளது. பிட்டுக்கு மண் சுமந்த லீலை திருவிழா மதுரையில் நடை பெறுகிறது. நாயக்கர்களின் ஆட்சியில் தான் இந்த திருவிழாவை மதுரைக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது. பாண்டிய மன்னர் கோவத்தோடு பெருமானை சாட்டையில் அடித்ததாள் இத்தளம் கோவிச்சி சடையன் என்ற பெயர் பெற்று பின்னர் கோச்சடை என்று மருவியது. அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில் :                                       ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ மதுரை மாநகரில் உள்ள மிகப் பழமையான கோயிலில் இதுவும் ஒன்று இது பாண்டியர் கால புராதன கோயில் ஆகும். இக்கோயிலின் மண்டபங்களை ஆராய்ச்சி செய்த தொல்பொருள் ஆராய்ச்சி துறையினர் மிகவும் பழமையான காலத்தில் ஏற்பட்ட கோயில்தான் இது என்பதை உறுதி செய்கின்றனர். வேறு எந்த சிவதலத்திலும் இல்லாத பெருமைவாய்ந்த இரு வில்வ மரங்கள் இத்தலத்தில் உள்ளது. ஆண் வில்வ மரமும் பெண் வில்வமரமும் அர

Bhishmar viizssi ataiyum naal vanthathu | பீஷ்மர் வீழ்ச்சி அடையும் நாள் வந்தது.

படம்
பீஷ்மர் வீழ்ச்சி அடையும் நாள் வந்தது. கௌரவர்கள் அசுர வியூகத்தை அமைக்க, பாண்டவர்கள் தேவ வியூகத்தை அமைத்தனர். சிகண்டியை முன் நிறுத்திப் பாண்டவர்களின் படை முன்னேறியது. இதுவரை இல்லாத பாதுகாப்பு இன்று பீஷ்மருக்கு இருந்தது. இன்று பீஷ்மரை கொன்றாக வேண்டும் என்று பாண்டவர் பாசறையில் முடிவு எடுக்கப்பட்டிருந்தது. பார்த்தன் உணர்ச்சிவசம் பட்டிருந்தான். கலங்கி நின்றான். தன் செல்ல தாத்தாவாகிய பீஷ்மரின் மடியில் அமர்ந்து விளையாடிய நேரங்களை கண்ணீருடன் நினைவு கூர்ந்தான். தன் தாத்தா சிறுவயதில் கூறிய கதைகளில் மீண்டுமொரு முறை கடைசியாக மூழ்கினான். தன் அன்பிற்கும், பாசத்திற்கும், மரியாதைக்கும் உரிய பீஷ்மரை கொல்ல போகிறோமே என்று வேதனை அடைந்தான். காண்டீபத்தைதொட அவன் மனமும் கைகளும் மறுத்தன.  நாம் தோற்றாலும் பரவாயில்லை கங்கை புத்திரரை கொல்ல மாட்டேன் என்று கிருஷ்ணரையும் அண்ணன்களையும் தழுவி அழுதான். அங்கு சில நிமிடங்கள் நிசப்தம் நிலவியது.... காற்று வீச மறந்தது... கூடியிருந்த அனைத்து மகாராதர்களின் கண்களிலும் இந்த காட்சி ஈரமாக படர்ந்தது... பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சமாதானம் செய்ய வார்த்தை இன்றி சிலையானார்... சிறிது நேரம்

Enpathu vayathil enna visaesham? | எண்பது வயதில் என்ன விசேஷம்?

படம்
  எண்பது வயதில் என்ன விசேஷம்? - சதாபிஷேகம்: சதாபிஷேகம் என்ற சொல் நூறு வயதில் அபிஷேகம் எனப்பொருள்படும். ஆனால் 100 வயது வரை வாழ்வது மிக அரிது என்பதால் பல ரிஷிகள் நம் மீது கருணைகூர்ந்து 1000 சந்த்ர தர்சனம் செய்தவர் (சஹஸ்ரசந்த்ர தர்சீ) ஆயிரம் பிறை கண்டவர் சதாபிஷேகம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.   இங்கே சந்திர தர்சனம் என்பதை பௌர்ணமி பூர்ண சந்திரனைப் பார்ப்பது என்று கருத வேண்டும். (ஆனால் அமாவாஸ்யை கழிந்து சுக்ல த்விதியை திதியில் மூன்றாம் பிறைச் சந்திர தர்சனம் செய்வது விசேஷம். ஏனெனில் இந்த மூன்றாம் பிறையே பரமசிவனின் சிரசை அலங்கரித்து அவருக்கு சந்திரசேகரன், சந்திரமௌலி எனப்பெயர் பெற்றுத்தந்தது.) இப்போது ஒருவர் ஆயிரம் பிறை கண்டு சதாபிஷேகம் செய்து கொள்வது எப்போது எந்த வயதில் என்று பார்ப்போம். சாஸ்த்ரக் கணக்கு: விகனஸ மகரிஷி அருளிய வைகானஸக்ருஹ்ய ஸ¨த்ரத்திற்கு ஸ்ரீநிவாஸமகி என்பவரின் தாத்பர்ய சிந்தாமணி என்ற வ்யாக்யானத்தில் (இரண்டாம் பாகம் மூன்றாம் ப்ரச்னம் 21ஆவது கண்டத்தில்) பின் வருமாறு உள்ளது. “அஷ்டமாஸ அதிக அசீதி வர்ஷாணாம் மாஸ ஸங்க்யா க்ரமேண அஷ்டாதி கஷஷ்ட்யுபேத நவசதம் (968) இந்தவோ ஜாயந்தே |

Periyava nijama theivam thaan | பெரியவா நிஜமா தெய்வம் தான்

படம்
ஒரு வைஷ்ணவப் பெண், மயிலாப்பூரிலிருந்து ஸ்ரீ மடத்துக்குக் கடிதம் எழுதியிருந்தார். கடிதம் மிகவும் உருக்கமாக இருந்தது. ‘என்னை என் மாமியார் மிகவும் கொடுமைப் படுத்துகிறார். எவ்வளவு சுத்தமாக வேலை செய்தாலும், குற்றம் கண்டுபிடிக்கிறார். எப்போதும் என் பிறந்தகத்தைப் பற்றி வசைமாரி, இளக்காரம், அசூயை. ஒரு நிமிஷம் கூட என்னை நிம்மதியாக இருக்க விடுவதில்லை.  நான் எதிர்த்து பேசுவது இல்லை. ரொம்பவும் பொறுத்துக்கொண்டிருந்தாலும், சில நேரங்களில் மனம் தளர்ந்து போய் விடுகிறது. ஏதாவது விபரீதம் ஆகிவிடப் போகிறதே என்று கவலையாக இருக்கிறது. உங்களை எல்லாரும் நடமாடும் தெய்வம், பேசும் தெய்வம் என்று கூறுகிறார்கள். அது உண்மையானால், என் கஷ்டங்களைத் தீர்த்து வைக்க வேண்டும் என்று சேவித்துக் கேட்டுக் கொள்கிறேன்’. மானேஜர் கடிதத்தைப் படித்து முடித்ததும் பெரியவாள் சிந்தனையில் ஆழ்ந்தார்கள். "அவனைக் கூப்பிடு” என்றார்கள். ஒரு சிஷ்யர் வந்து நின்றார். “இந்த லெட்டர்லே இருக்குற விலாசத்தை வாங்கிக்கோ. மயிலாப்பூர் மடத்துக்குப் போ. மடத்து மனுஷ்யாள் வீட்டு ஸ்திரீயை, லெட்டர் எழுதியிருக்கிற பெண்கிட்ட போகச் சொல்லு. சீதை, தமயந்தி, திரௌபதி

Arupathu vayathil enna visaesham enpathai therinhthu kolvoamaa |அறுபது வயதில் என்ன விசேஷம் என்பதை தெரிந்து கொள்வோமா?

படம்
ஜன்ம வருஷம் என்பது பிரபவாதி 60 வருஷங்களில், தான் பிறந்த வருஷம் மீண்டும் வருவது. சான்றாக ஒருவர் ஸர்வதாரி வருஷத்தில் பிறந்தால், 60வருஷம் கழித்து அடுத்த ஸர்வதாரி வருஷம் ஜன்ம வருஷம். ஒரு வருஷகாலம் சென்றால் ஒரு வயது நிறையும். 60 வருஷம் (வயது) நிறைவடைவதை ஷஷ்டிதமாப்த பூர்த்தி (ஷஷ்டிதம 60ஆவது) எனப்படும். இரண்டும் ஒன்றுதான். 60 ஆண்டு முடிவுற்று 61 ஆவது ஆண்டு ஜன்ம மாதத்தில் ஜன்ம நக்ஷத்ர நாளன்று செய்வதே ஷஷ்டிதமாப்த பூர்த்தி சாந்தி. “ஜன்மதினாத் ஆரப்ய ஷஷ்டதம ஸம்வத்ஸரே ஜன்ம மாஸே ஜன்ம நக்ஷத்ரே” “ஜன்மாப்தே ஜன்ம மாஸே ச ஜன்மர்«க்ஷ வா த்ரிஜன்மஸ§” என்றார் போதாயனர். இந்த வசனப்படி, ஜன்ம நக்ஷத்ரத்தன்று ஏதாவது அசௌகர்யத்தால் சாந்தியை நடத்த முடியாவிடில் அதிலிருந்து 10ஆவது அல்லது 19ஆவது நக்ஷத்ரத்தில் செய்யலாம். ஜன்மானு ஜன்மம் அதாவது கேட்டை முதல் நக்ஷத்ரமானால் ரேவதி 10ஆவது நக்ஷத்ரம்.  ஆயில்யம் 19ஆவது நக்ஷத்ரம். இதை அனுசரித்தே திருநெல்வேலி ஜில்லாவிலும் கேரள தேசத்திலும் ஸெளரமான ரீதியாக ஒரு மாதத்தில் இரண்டு ஜன்ம நக்ஷத்ரங்கள் வந்தால் முதல் ஜன்ம நக்ஷத்ரத்தில் பிறந்தநாள் வைபவம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதற்கு சாஸ்த்ர ப்ரம