பெரிய திருவடியும், சிறிய திருவடியும்
வைணவ ஸம்ப்ரதாயத்தில், கருத்மான் என்னும் பக்ஷிகளுக்குள் ராஜனாகப் போற்றப்படும் கருடாழ்வாரை எம்பெருமானின் பெரிய திருவடி என்றும், ஹநுமானை சிறிய திருவடி என்றும் கூறுவதுண்டு. இவர்களுக்குள் யார் பெரியவர் யார் சிறியவர் என்று குறிப்பதற்கான காரணங்கள் எதனால் ஏற்பட்டவை என்று விளங்குவதில்லை. மிகவும் ஸ்ரேஷ்டமான திவ்ய கைங்கர்யர்கள் இருவருக்குள் பெரிய /சிறிய போன்ற பேதம் தேவை தானா? நாமறிந்த வரையில், ராமாயணத்தில் இருவருமே திவ்ய பாத்திரர்கள். வயதினிலே பெரியவர் யார், சிறியவர் யார் என கேள்விக்கு அப்பாற்பட்டவர்கள். நித்ய சிரஞ்ஜீவியான அனுமனுக்கு வயது என்பது கிடையாது. இருவரும் எம்பெருமானுடைய கைங்கர்யத்தில் ஒருவருக்கொருவர் சளைக்காதவர்கள். எம்பெருமானும் இவர்களுடைய கைங்கர்யத்தை பேதமின்றி அனுபவித்தவன். ஒரு சமயம், ஒருவர் பூமியில் வலம் வருவதையும், இன்னொருவர் உயர்ந்த வானத்தில் பறப்பதையும் காரணமாகக் கொண்டு, இந்தச் சிறிய /பெரிய திருவடி பேதம் உண்டானதோ? எப்போதும் உயர்ந்த வானத்தில் பறந்து கொண்டிருக்கும் கருடனை பெரிய திருவடி என்றும், எம்பிரான் ராமனுடன், வானத்தை விடத் உயரம் தாழ்ந்த பகுதிகளான நிலம், கடல், மலைகளில் தொடர்ந்த