இடுகைகள்

மே, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வலம்புரி சங்கு

படம்
1. விநாயகருக்கு சுண்டைக்காய் மலர் வைத்து வழிபட உடலில் உள்ள தீய சக்திகள் விலகி ஓடும் . 2. வெளியில் செல்லும் பொழுது எதிரில் பிணம் தென்பட்டாலோ அல்லது பிணம் எரிவதை தற்செயலாக பார்க்க நேரிட்டாலோ சில  நாணயங்களை > பூமியில் போட்டு விட்டு அவ்விடத்தை விட்டு செல்ல, அந்த ஆத்மவினால் ஏற்படும் எதிர் மறை விளைவுகள் ஏற்படாமல் இருக்கும். 3. தினசரி வீட்டை விட்டு கிளம்புமுன் நீர் நிரம்பிய பாத்திரமோ அல்லது நீர் நிரம்பிய பக்கெட்/தொட்டி /குளம் பார்த்து செல்ல, போகிற விஷயம் சுபமாய் முடியும். 4. கொடுத்த கடன் திரும்ப வரவில்லை எனில் உங்கள் இஷ்ட தெய்வத்திற்கு தினசரி 43 நாட்கள் நீல நிற பூவை வைத்து வேண்டி வர கடன் வசூலாக ஆரம்பிக்கும். 5. அண்டை அயலார் மூலம் தொடர்ந்து தொல்லைகள் ஏற்பட்டால் தினசரி வீட்டு முன் மெழுகுவர்திகளை ஏற்றி வேண்டி வர தொல்லைகள் நீங்கும் . 6.எதிரிகள் தொல்லை மற்றும் சோதனைகள் அதிகமானால் வெள்ளிக்கிழமைகளில் உப்பு சேர்க்காமல் சாப்பிட்டு வர, எதிரிகள் நிலை செயல் இழந்து போகும். 7. பசுவானது பால் கறக்கும் நிலையில் இருக்கும் போது தானம்  செய்வதுதான் மிக சிறந்த தானமாகும். 

ராமரின் முன்னோர்களை தெரிந்து கொள்ளலாமா

1. பிரம்மாவின் மகன் -மரீசீ 2. மரீசீயின் மகன்- கஷ்யபர் 3. கஷ்யபரின் மகன் -விவஸ்வான் 4. விவஸ்வானின் மகன்- மனு 5. மனுவின் மகன் -இஷ்வாகு 6. இஷ்வாகுவின் மகன் -விகுக்ஷி 7. விகுக்ஷியின் மகன்- புரண்ஜயா 8. புரண்ஜயாவின் மகன் அணரன்யா 9. அணரன்யாவின் மகன் -ப்ருது 10. ப்ருதுவின் மகன்- விஷ்வாகஷா 11. விஷ்வாகஷாவின் மகன் -ஆர்தரா 12. ஆர்தராவின் மகன் யுவான்ஷ்வா-1 13. யுவான்ஷ்வாவின் மகன் ஷ்ரவஷ்ட் 14. ஷ்ரவஷ்டின் மகன் -வ்ரதஷ்வா 15. வ்ரதஷ்வாவின் மகன் -குவலஷ்வா 16. குவலஷ்வாவின் மகன் - த்ருதஷ்வா 17. த்ருதஷ்வாவின் மகன் -ப்ரோமத் 18. ப்ரோமத்தின் மகன்- ஹர்யஷ்வா 19. ஹர்யஷ்வாவின் மகன் -நிகும்ப் 20. நிகும்பின் மகன் -சன்டஷ்வா 21. சன்டஷ்வாவின் மகன் க்ருஷஸ்வா 22. க்ருஷஸ்வாவின் மகன் ப்ரஸன்ஜீத் 23. ப்ரஸன்ஜீத்தின் மகன் யுவான்ஷ்வா-2 24. யுவான்ஷ்வாவின் மகன் மன்தாத்தா 25. மன்தாத்தாவின் மகன் அம்பரீஷா 26. அம்பரீஷாவின் மகன் ஹரிதா 27. ஹரிதாவின் மகன் த்ரதஸ்யு 28. த்ரதஸ்யுவின் மகன் -ஷம்பூத் 29. ஷம்பூத்தின் மகன்- அனரண்யா-2 30. அனரண்யாவின் மகன் - த்ரஷஸ்தஸ்வா 31. த்ரஷஸ

கர்ம வினை

*(எளிமையான, ஆழமாக கர்ம வினையை அனைவருக்கும் அனுபவமாக உணர்த்தும் குட்டி கதை சித்தர்களின் குரலில்.....இன்றைய காலையில் அனைவரும் சிந்திக்க)* ஒரு அரசன் அந்தணர்களுக்கு ஒரு நாள் உணவளித்துக் கொண்டிருக்கையில் வானில் ஒரு கழுகு, தனக்கு இரையாக பாம்பு ஒன்றை தன் கால்களில் பற்றிக் கொண்டு அவ்வழியே பறந்து சென்றது. பாம்பின் வாயிலிருந்து சில துளி விஷம் அரசன் வைத்திருந்த உணவுப் பாத்திரத்தில் விழுந்து விட்டது. அரசன் அந்த உணவை ஒரு அந்தணருக்கு அளிக்க, அதை உண்ட மறு கணமே அவர் இறந்து போனார். அரசன் மிகவும் வருத்தம் அடைந்தான். கர்மாக்களுக்கான வினை களை நிர்ணயிக்கும் சித்திரகுப் தனுக்கு இந்த கர்ம வினையை யாருக்குக் கொடுப் பது என்று குழப்ப மாகிவிட்டது. கழுகிற்கா, பாம்பிற்கா அல்லது அரசனுக்கா? கழுகு அதன் இரையைத் தூக்கிக் கொண்டு சென்றது அது அதன் தவறு இல்லை. விஷம் இறந்துபோன பாம்பின் வாயிலிருந்து வழிந்தது அது பாம்பின் குற்றம் இல்லை. அரசனுக்கும் உணவில் பாம்பின் விஷம் கலந்தது தெரியாது. அது அவனும் அறியாமல் நடந்த விஷயம். இதுபற்றி எமதருமனிடமே கேட்கலாம் என்று எமனிடம் சென்று தன் குழப்பத்தைக் கூறினான். சித்திரகுப

பணக்கார நாடு.எம் பாரத நாடு

படம்
சோழர் காலத்தில் தமிழ் நாடு தான் #உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு. #சுமார்40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள். அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம் #தஞ்சை பெரிய கோவிலும், #கங்கை கொண்ட சோழபுரம்தான். அப்போது வட அமெரிக்கா, தென் அமெரிக்கா கிடையாது. இலண்டன் ஒரு சிறு மீன் பிடிக்கும் கிராமமாக 1066 ல் நிறுவப்பட்டது. தஞ்சை பெரிய கோபுரம் முழுவதும் தங்கத்தால் போர்த்தப்பட்டது. இது பற்றிக் கல்வெட்டும் உள்ளது. இந்தத் #தங்கப் போர்வை 1311 - ஆம் வருடம் #மாலிக்கபூரின் முஸ்லிம் படைகளால் கொள்ளையடிக்கப்பட்டு, #500 யானைகள் மேல் எடுத்துச் செல்லப்பட்டது. இவ்வளவு கோவில்கள் கட்டுவதற்கு எங்கிருந்து பணம் வந்தது? எல்லாம் கடல் வாணிகம் ஏற்றுமதிதான். ஜப்பான் நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. ஆனால் ஏற்றுமதி வியாபாரம் மூலம் அவர்களுக்குத் தங்கம் கிடைக்கிறது. அதே போல் சோழ நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. இரும்பு சாமான்கள், துணிகள், கைவினைப் பொருட்கள், தானிய ஏற்றுமதி மூலம் தங்கம் கிடைத்தது. உலகிலேயே ஒரே சீராக #80இலட்சம் ஏக்கர் விளை நிலம் #காவிரிப் படுகைப் பகுதியில்தான் அமைந்துள்ளது. எங்கும் #ம

மனையடி சாத்திரமும் கிணறும்

படம்
மனையில் வீடு அமைக்க அடிக்கல் நாட்டுவதில் துவங்கி வீட்டின் அமைவு, கிணறு தோண்டும் இடம், கதவு, வாசல் படி வைக்கும் இடம் வரை அனைத்து விவரங்களும் சித்தர்களின் பாடல்களில் காணக் கிடைக்கிறது. முதலில் கிணற்றை அமைத்த பின்னரே மனை அமைக்கும் வேலைகளை ஆரம்பிக்க வேண்டும் என்கின்றனர். கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை. பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று. ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும். அதே போல் கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும் உள்ளது.ஆனால் இவற்றிற்கெல்லாம் எளிய இலகுவான தீர்வுகளை சித்தர்கள் அருளிச் சென்றிருக்கின்றனர். மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்கின்றனர்.  சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி?  அதற்கும் சித்தர்கள் தீர்வு சொல்கிறார்கள்... நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள் இரவு தூவி விடவேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள்

தசரதனுக்கு_ஏன்_நான்கு_பிள்ளைகள்?

படம்
தசரதன் ஒரு பிள்ளையை வேண்டினார்.  ஆனால், அவருக்கு நான்கு பிள்ளைகள் பிறந்தன.  இது ஏனென்று உங்களுக்குத் தெரியுமா?  தர்மம் நான்கு வகைப்படும். 🌻   அதில் முதலாவது   # சாமான்ய_தர்மம் . பிள்ளைகள் பெற்றோரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? சீடன் குருவிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? கணவன் மனைவியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? இத்தகைய சாமான்ய தர்மங்களைத் தானே பின்பற்றி எடுத்துக் காட்டினான் இராமர்*. 🌻   இரண்டாவது   # சேஷ_தர்மம் . சாமானிய தர்மங்களை, ஒழுங்காகச் செய்து கொண்டு வந்தால், கடைசியில் ஒரு நிலை வரும். அந்த நிலையில் பகவானுடைய பாதங்களைத் தவிர, வேறு ஒன்றும் சதம் அல்ல என்ற நினைப்பு ஏற்படும். இத்தகைய தர்மத்துக்கு சேஷ தர்மம் என்று பெயர். இதைப் பின்பற்றிக் காட்டினான் இலட்சுமணன். 🌻 மூன்றாவது   # விசேஷ_தர்மம் . தூரத்தில் இருந்து கொண்டே, எப்போதும் பகவானின் சிந்தனையாகவே இருப்பது விசேஷ தர்மம். இது சேஷ தர்மத்தைக் காட்டிலும் கடினமானது. இதைக் கடைப்பிடித்துக் காட்டியவன் பரதன். 🌻   நான்காவது   # விசேஷதர_தர்மம் . பகவானை விட அவருடைய அடியார்

உலகில் முதன் முதலாக குரலைப் பதிவு செய்த கருவி எது?

படம்
உலகில் முதன் முதலாக குரலைப் பதிவு செய்த கருவி எது? விடை தெரியாததால் மவுனம் காத்தனர் பக்தர்கள். மகாபாரதப்போர் நடந்த போது அம்புப்படுக்கையில் படுத்திருந்தார் பிதாமகர் பீஷ்மர். அவரைச் சுற்றி பாண்டவர்கள், கிருஷ்ணர், வியாசர் இருந்தனர். இந்நிலையில் ஆயிரம் திருநாமங்களால் கிருஷ்ணரை ஸ்தோத்திரம் செய்தார் பீஷ்மர். அனைவரும் மெய் மறந்து கேட்டனர். யாருக்கும் அதைக் குறிப்பெடுக்கும் எண்ணம் வரவில்லை. சொல்லி முடித்ததும், ''அடடா... இந்த அற்புதமான சகஸ்ரநாமத்தை பதிவு செய்யவில்லையே'' என வருந்தினார் தர்மர். கிருஷ்ணரிடம் வழிகாட்டுமாறு வேண்டினார். என்னால் என்ன செய்ய முடியும்? உங்களைப் போல பீஷ்மர் சொன்னபோது நானும் கேட்டுக் கொண்டிருந்தேன்'' என்றார் எல்லாம் அறிந்த கிருஷ்ணர்! உலக நன்மைக்காக சகஸ்ரநாமத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும்'' என கோரிக்கையை மீண்டும் வைத்தனர். பக்தர் விருப்பத்திற்கு பகவான் செவி சாய்க்காமல் போவாரா என்ன? கேட்டதும் கொடுப்பவன் அல்லவா? உன் தம்பி சகாதேவன் ஸ்படிக மாலை அணிந்திருக்கிறான். ஒலி அலைகளைப் பதிவு செய்யும் ஆற்றல் அதற்குண்டு.

காந்தாரியின் கனவு

படம்
காந்தாரியின் கனவு “நீ கபட நாடக வேஷதாரி என மீண்டும் ஒருமுறை நிரூபித்தாய் கண்ணா! நீ பரசுராமனாகப் பிறந்து குடித்த க்ஷத்திரிய இரத்தம் போதவில்லையா? நீயே உலகின் முழு முதல்வன் எனினும் இப்போரைத் தடுக்கவில்லையே? மாறாக அதைத் திறம்பட நடத்தி என் மக்களை மட்டும் அழித்தாயே? உனக்கு இது தகுமா? ஒரு பிள்ளையைப் பெற்றவளே அதை இழந்தால் வரும் சோகம் சொல்லில் அடங்காது. உன் அன்னைக்கும் அது நன்றாகவே தெரியுமல்லவா?  நீ பிறக்கும் முன்னமேயே ஆறுபேரைக் கொன்றுவிட்டுப் பிறந்தவனாயிற்றே! உனக்கு எங்கே ஒரு அன்னையின் வலி தெரியப் போகிறது. இப்போது நான் உனக்குச் சாபமிடுகிறேன்! எப்படி என் சந்ததிகள் என் கண் முன்னே அழியும் கொடுமையை நான் கண்டு நொந்தேனோ அதே போல் நீயும் உன் வருஷ்ணி குலமும் சர்வ நாசம் அடையப்போகிறீர்கள்! உன் கண் முன்னேயே யாதவர் இரத்தம் அருவி போல் வழிந்தோடப் போகிறது! இன்றிலிருந்து 36ம் வருடம் அது நடக்கும்! இது என் பதிவ்ரதா சக்தியின் மேல் ஆணை!” என்று மகாசபையில், அவையோர் அனைவரும் கல்லாய்ச் சமைந்து, நா வறண்டு, பேச்சு மூச்சின்றி அதிர்ச்சியில் உறைந்து போகும் வண்ணம் கிருஷ்ணனைச் சபித்த பின்பு காந்தாரி தன் அந்தப்புரத்துக்க

ஶ்ரீ அத்திவரதரை தரிசிக்க

படம்
திவ்ய தேசம் - கோழிகுத்தி  ஸ்ரீ வானமுட்டி பெருமாள் 1200 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம், இந்து அறநிலையத் துறையின் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. கருவறையில் 14 அடி உயரத்தில் வானமுட்டி பெருமாளின் தோற்றத்தைக் கண்டு நாம் சிலிர்க்காமல் இருக்க முடியாது. பெருமாளின் வலது மார்பில் தாயார் தயாலட்சுமி உள்ளார். இடதுபுறம் பூமாதேவியின் சிலை வடிவம் உள்ளது. மிகப் பெரிய அத்திமரமே பெருமாளாக மாறி இருப்பதால், மரத்தின் வேரே திருவடிகளை தாங்கி நிற்கும் அதிசயத்தை உலகில் வேறு எங்கும் நாம் காண இயலாது. மூலவர் அத்தி மரத்தால் ஆனவர் என்பதால், அவருக்கு எந்தவித அபிஷேகமும் கிடையாது. வெறும் சாம்பிராணி காப்பு மட்டுமே சாத்தப்படுகிறது. இந்தப் பெருமாளை வேண்டினால், பிதுர் தோஷம், பிரம்மஹத்தி தோஷம், சனி தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் விலகும் என்கிறார்கள். எம்பெருமான் - ஸ்ரீநிவாச பெருமாள் ஸ்ரீ மஹாலக்ஷ்மி - பெருமாளின் திருமார்பில் குடிகொண்டிருக்கின்றாள்.. ஸ்ரீ பூமாதேவி ஸ்வாமியின் அருகிலேயே  பொலிகின்றாள்.. தாயாருக்கு தனி சந்நிதி இல்லை.. உற்சவர் - யோக நரசிம்மர் ஸ்ரீ சத்ர விமானம் சதுர் புஜங்கள் பொலியும் 14 அடி

Tomb of Thirumalai Nayakkar | திருமலைநாயக்கரின் சமாதி எங்குள்ளது?

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்திய திருமலைநாயக்கரின் சமாதி எங்குள்ளது? மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பலநூற்றாண்டுகளாக பல முன்னோர்களால் கட்டப்பட்டது. அதை நிறைவு செய்து கும்பாபிஷேகம் நடத்தியது திருமலைநாயக்கர். இந்த விசயம் உலகறிந்த ஒன்று. தஞ்சைபெரிய கோவிலை கட்டிய ராஜராஜசோழரின் சமாதி இருக்கும் இடம் அனைவருக்குமே தெரியும். Map Location : Great King "RAJA RAJA CHOLAN" Samaadhi/ மாமன்னன் இராஜராஜ சோழன் கல்லறை ஆனால் தஞ்சைபெரிய கோவிலுக்கு நிகரான மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்திய திருமலைநாயக்கரின் சமாதி இருக்குமிடம் இன்று வரை மர்மமாகவே இருக்கிறது. மதுரையை சேரந்த ஒருவர் திருமலைநாயக்கரின் சமாதி எங்குள்ளது என்பது தொடர்பாக தனது தேடல் வேட்டையை ஆரம்பித்து அவருக்கு கிடைத்த அனுபவங்களை அவரே சொல்வது போல பதிவிட்டுள்ளார். அவரது தேடுதல் அனுபவங்கள் கீழே! திருமலைநாயக்கரின் சமாதி எங்குள்ளது என்பதை கண்டறியும் நோக்கத்துடன் எடுக்கபட்ட எனது முயற்சிகளின் போது பல கட்டுக்கதைகள் மட்டுமே கிடைக்க பெற்றேன். இறுதியில் எனது கோரிக்கையை பிரபஞ்சத்திடம் முன்வைத்தேன். சிலவாரங்

மதுரை மீனாட்சி அம்மன் தனிசிறப்புகள் மற்றும் வளர்ந்த திருத்தலம்

படம்
1.மீனாட்சி அம்மன் விஹ்ரகம் மரகத கல்லால் ஆனது. ஏனென்றால் பொதுவாக அன்னையின் திருமேனி பச்சை நிறம். 2.அன்னையின் வலது கால் சற்று முன் நோக்கி இருக்கும், ஏனென்றால் பக்தர்கள் அழைத்தால் உடனே ஓடி வருவதற்காக. 3.அன்னை கையில் ஏந்திய கிளி அன்னையின் காதில் பேசுவது போல் இருக்கும் ஏனென்றால் கிளி பேசுவதை திருப்பி பேசும் அதைப்போல் பக்தர்களின் வேண்டுதலை திரும்ப திரும்ப அன்னையிடம் சொல்லும் இதனால் நமது வேண்டுதல் விரைவாக நிறைவேறும். 4.அன்னையின் விக்ரஹம் சுயம்பு ஆகும் சில ஆலயத்தில் லிங்கம் சுயம்புவாக இருக்கும் ஆனால் மதுரையில் மீனாட்சி உக்ரபாண்டியனுக்கு முடிசூட்டிய பின் சொக்கநாதர் பெருமான் அருகில் விக்ரஹமாக நின்றுவிட்டாள் அதனால் சுயம்பு அன்னை. அன்னை மதுரையில் யாகசாலையில் அக்னியில் அவதரித்தாள்.  இவளின் இயர்பெயர் தடாதகை அங்கயற்கண்ணிஆகும். 5. பாண்டிய மஹாராஜாவுக்கும் மஹாராணி காஞ்சனமாலைக்கும் ஒரே மகள். அதனால் பாண்டிய நாட்டின் பேரரசி ஆவாள். 6. இங்கு கற்பகிரகத்தில் அன்னையின் விக்ரஹம் உயிர்உடன் இருக்கும் ஒரு பெண்ணை பார்ப்பது போல் இருக்கும். 7. அன்னையே சிலையாக இருப்பதால் மிகவும் அழகாக இருக்கு