இடுகைகள்

ஆகஸ்ட், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Mahabharatha poar parriyu athil amaikkappatta viyuukangkal | மகாபாரதப் போர் பற்றியும் அதில் அமைக்கப்பட்ட வியுகங்களும்

படம்
மகாபாரதப் போர் பற்றியும் அதில் அமைக்கப்பட்ட வியுகங்களும் வியாசர் இயற்றிய‌ மகாபாரதத்தில் பாண்டவர்க‌ளுக்கும் கௌரவர்களுக்கும் நடந்த போரில், இந்த இரு அணிகளுக்கும் தலைமை ஏற்று தத்தமது படைகளைத் தற்காத்துக் கொள்வதற்கும், எதிரிப் படைகளை தாக்கி அழிப்பதற்கும் பல்வேறு வகையான‌ சிறப்பு தோற்றத்தில் அவரவர் ப‌டைகளைக் கொண்டு போரில் வெற்றி பெற பலவிதமான வியூகங்கள் அமைத்துப் போரிட்டனர். 40 லட்சம்பேர் பங்குபெற்ற 18 நாட்கள் நடந்த மிகப்பிரமாண்டமான மகாபாரதப்போர் பற்றியும் அதில் அமைக்கப்பட்ட வியுகங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.... வியூகம் என்பது படைகளின் அமைப்புக்களை குறிக்கும். அந்த வியூகங்களின் பெயர்களை கீழே பட்டியலிடப்ட்டுபள்ளன. . 1.கிராஞ்ச வியுகம்/ நாரை வியூகம்  (Heron formation) 2.மகர வியுகம்/ முதலை வியூகம்  (Crocodile formation) 3.கூர்ம வியுகம்/ ஆமை வியூகம்  (Tortoise or Turtle formation) 4. திரிசூலம்  வியுகம் (Trident Formation) 5. சக்கர வியுகம் (Wheel or Discus Formation) 6.கமலா வியுகம் or பத்மாவியுகம் or  பூத்த தாமரைமலர் வியூகம்  (Lotus Formation) 7.கருட வியுகம் (Eagle Formation) 8.ஊர்மி வியுகம்

Ṣaṣṭiyapta purtti satapisekankal | ஷஷ்டியப்த பூர்த்தி சதாபிஷேகங்கள்

படம்
ஷஷ்டியப்த_பூர்த்தி சதாபிஷேகங்கள் போன்ற சடங்குகளை நடத்திக் கொள்வது என்பது எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை. பெரும் பாக்கியமும் பூர்வ புண்ணியமும் செய்தவர்களுக்கே இந்த மண விழா காணும் பாக்கியம் அமைகிறது. இது போன்ற வைபவங்கள் பொதுவாக ஆயுள் விருத்தியைப் பிரதானமாக்க் கொண்டே அமைகின்றன. சகல தேவர்களையும் மகிழ்விக்கும் பொருட்டு அன்றைக்கே வேத பாராயணங்களும், ஹோமங்களும் நடைபெறுகின்றன. உறவு முறைகள் கூடி நின்று குதூகலப்படும் போது, ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியரின் மனம் மகிழும். நமக்கென்று இத்தனை சொந்தங்களா என்கிற சந்தோஷம் அவர்களின் மனதில் பரவசத்தை ஏற்படுத்தும். பூமி 360 பாகைகளாகவும் அந்த 360 பாகைகளும் 12 ராசி வீடுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த 360 பாகைகளையும் கடந்து சென்று ஒரு வட்டப் பாதையை பூர்த்தி செய்வதற்கு சூரியனுக்கு ஓர் ஆண்டும், செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டும், சந்திரனுக்கு ஒரு மாதமும், புதனுக்கு ஒரு வருடமும், வியாழனுக்கு 12 வருடங்களும், வெள்ளிக்கு ஒரு வருடமும், சனி பகவானுக்கு 30 வருடங்களும், ராகுவுக்கு ஒன்றரை வருடங்களும், கேதுவுக்கு ஒன்றரை வருடங்களும், ஆகின்றன. இந்த சுழற்சியின் அடிப்படையில் ஒருவர்

Uruvaththai vaiththu oruvarai edai potakutathu |உருவத்தை வைத்து ஒருவரை எடைபோடக்கூடாது

படம்
மதியரசன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். இவர் தனது நாட்டின் வணிகம் தொடர்பாக வேறு நாட்டிற்கு தனது சேவகனுடன் சென்றிருந்தார். சில நாட்களுக்கு பின் மதியரசரும் அவரது சேவகனும் குதிரை வண்டியில் தங்களது நாட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அவர்கள் வரும் பாதையிலோ வீடு எதுவும் இல்லை. நீண்ட தூர பயணத்தால் அரசருக்கு தாகம் எடுத்தது. அவர்கள் கொண்டு வந்த தண்ணீரும் தீர்ந்துவிட்டது. நீண்ட தூரத்திற்குப் பிறகு ஒரு காட்டின் வேலியில் வெள்ளரிப்பழம் இருந்ததை அவர்கள் பார்த்தனர். மன்னர் சேவகனிடம் அந்த வெள்ளரிப்பழத்தை பறித்து கொண்டு வா என்று கூறினார். மன்னரின் கட்டளைப்படி சேவகனும் வெள்ளரிப்பழத்தை பறிக்கச் சென்றான். அப்போது அது 'வெள்ளரிப்பழம் இல்லை" என்று ஒரு குரல் எங்கிருந்தோ கேட்டது. அக்குரல் யாருடையது என்று இருவரும் திரும்பி பார்த்தனர். அதுவோ பார்வையில்லாத ஒரு பிச்சைக்காரனின் குரல். அரசரும் சேவகனும் திகைத்துப் போனார்கள். ஆனால் அரசர் அவன் கூறியதை நம்பாமல் சேவகனை அப்பழத்தை பறித்து வருமாறு கூறினார். தாகத்தால் அதை உடனே கடித்து உண்டார். வாயில் வைக்க முடியாத அளவிற்கு கசப்பாக இருந்தது. உடனே பிச்சைக்காரனிடம் சென்று

மகாபாரத்துல யுத்தம் ஆரம்பிக்கும் முன்பு அபிமன்யூக்கு திருமணம் நடக்கும்.

படம்
மகாபாரத்துல யுத்தம் ஆரம்பிக்கும் முன்பு அபிமன்யூக்கு திருமணம் நடக்கும். அப்போது பாண்டவர்களின் பக்கம் எத்தனை அரசர்கள் உதவியாக இருக்க போகிறார்கள் என்பதை அந்த திருமண நிகழ்வை வைத்து தான் முடிவுக்கு வர முடியும் என்ற கணக்கில் பாண்டவர்கள் காத்திருந்தனர். சல்லியர் மிகு‌ந்த பலம் வாய்ந்த ஆளுமையாக மகாபாரத்தில் வலம் வருபவர். அவர் உறுதியாக பாண்டவர்கள் பக்கம் தான் நிற்பார் என்று பாண்டவர்கள் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தனர். அப்போது தவறுதலாக வழிமாறி சல்லியர் எதிர் கட்சியான கெளரவர்கள் படையில் சேர வேண்டிய நிர்ப்பந்தம் ஆகிவிடும். இதனை விசாரிக்க சுருதகீர்த்தி (அர்ஜூனனுக்கும் திரெளபதிக்கும் பிறந்தவன்) அனுப்படுவான். சல்லியர் தங்கி இருக்கும் இடம் அடையவும் சுருதகீர்த்திக்கு புரிந்துவிடும் தாத்தா அவர்களின் பக்கம் தான் என்று. அங்கே இருக்கும் அசுவத்தாமனிடம் அதில் இருக்கும் சூது பற்றின விவரம் அறிய தன் கேள்வியை வைப்பான். எப்படி அவரை உங்களோட இணைத்தீர்கள் என்று.? இங்கு தான் மாகாபாரத்தின் பல முடிச்சுகள் அவிழும் விதமாக அசுவத்தாமன் பதல் தருவார். (நான் சுருக்கமா எழுதிருக்கேன்) "நாம் யார் மீது அளவு கடந்த நம்

orukoati kitaiththaal enna seyviirkal enru kaettapoathu | ஒருகோடி கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது

படம்
ஒருகோடி கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது, *ஒரு நூலகம் கட்டுவேன்* என்று பதிலளித்தாராம் மகாத்மா... ஆசியாவில் பெரிய நூலகம் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூலகம். லண்டனில் எங்கு தங்க விரும்புகிறீர்கள் என்று கேட்ட பொழுது, "நூலகம் அருகில் வீடு பாருங்கள்" என்று சொன்னவர் *அண்ணல் அம்பேத்கர்*. நூலக காவலாளி தினமும் வந்து கெஞ்சிய பிறகு தான் நூலகத்தை விட்டு வெளியே வருவார். உலக புகழ்பெற்ற செய்தி தொலைக்காட்சி BBC நிருபர், "புத்தகம் படிக்கும் போது சலிப்பு ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்" என்று கேட்ட போது, அந்த புத்தகத்தை மூடி வைத்து விட்டு வேறு புத்தகத்தை எடுத்து படிப்பேன்" என்றவர் - *அண்ணல் அம்பேத்கர்*. தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தாராம் *ஜவஹர்லால் நேரு*... என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்றாராம் *பெட்ரண்ட் ரஸல்*... மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார் *ஆல்பர்ட் ஐன்ஸ

Say Sri Rama jeyam loudly | ஸ்ரீராமஜயம்னு சத்தமாகச் சொல்லு

படம்
மகாபெரியவர் திருத்தல யாத்திரைகள் செய்து கொண்டிருந்த காலகட்டம் அது. அந்த சமயத்தில் ஆந்திர மாநிலத்தில் ஓரிடத்தில் சில நாட்கள் முகாமிட்டிருந்தார் அவர். அந்த மாதிரியான சமயங்களில் உபன்யாசம் மாதிரியான சொற்பொழிவுகள் போன்றவை நடப்பது வழக்கம். அந்த மாதிரி ஒருநாள், மகாபெரியவர் முன்னிலையில் ராமாயண உபன்யாசம் நடத்தினார் ஒரு பண்டிதர். மிக அழகாக எளிமையாக ராம காவியத்தை அவர் சொன்னதை மகாபெரியவர் ரொம்பவே ரசித்துப் பாராட்டினார். பெரியவரின் பாராட்டால் நெகிழ்ந்துபோன உபன்யாசகர், நெகிழ்வோடு மகானை நமஸ்கரித்தார். அப்போது, "நீ இப்படி உபன்யாசம் செய்வது மட்டுமல்லாமல், இன்னொரு உபகாரமும் முன்பு செய்து கொண்டு இருந்தாயே, அதை இங்கேயும் செய்யலாமே" என்றார் மகான். அந்த உபன்யாசகர், தான் நிகழ்ச்சி நடத்தப் போகும்போது, சின்னச் சின்னதாக சில நோட்டுகளை கையோடு கொண்டு செல்வார். உபன்யாச நிகழ்ச்சி முடிந்ததும், அந்த நோட்டுகளை அங்கே இருக்கும் சிறுவர் சிறுமிகளிடம் தந்து ஸ்ரீராமஜயம் எழுதச் சொல்வார். அனால் கொஞ்சநாளாக அவருக்கு ஒரு விரக்தி இருந்தது. ஸ்ரீராமஜயம் எழுதச் சொல்லி நோட்டுகளை தருகிறோம். ஆனால், அவர்கள் எழுதுகிறார்களா இல்லை

ஒருவர் எச்சிலை மற்றொருவர் சாப்பிட்டால் அவர்களுடைய குணங்கள் வாசனைகளாக நமக்கு வரும்

படம்
ஒருவர் எச்சிலை மற்றொருவர் சாப்பிட்டால் அவர்களுடைய குணங்கள் வாசனைகளாக நமக்கு வரும் . அது போல ஒருவர் செருப்பை மற்றொருவர் போட்டாலோ, இல்லை துணி மணியை உபயோகித்தாலோ, இல்லை ஒருவர் படுக்கையில் அடுத்தவர் படுத்தாலோ, இல்லை ஒருவர் மாலையை இன்னொருவர் சூட்டிக்கொண்டாலோ, ஒருவர் பாத்திரத்தை இன்னொருவர் உபயோகித்தாலோ, ஒருவர் உள்ளங்கையை இன்னொருவர் உள்ளங்கையால் தொட்டாலோ, அவர்கள் குணங்கள் வாசனைகளாக நமக்கு வரும் . திருமணத்தின் பிறகு இருவருடைய மனமும் ஒத்து போக வேண்டும், சண்டை போட கூடாது என்பதால் இருவேறு குடும்பங்களில் இருந்து வந்த இவர்களுடைய குணங்களும் வாசனைகளும் இருவருக்கும் ஒன்றாக வேண்டும். அதற்க்கு தான் திருமண சடங்குகளில் ஒருவர் மாலையை இன்னொருவருக்கு போடுதல் , ஒருவர் எச்சில் செய்த தட்டில் இன்னொருவர் சாப்பிடுதல் , இருவர் உள்ளங்கையையும் சேர்த்து பாணிக்கிரஹணம் என்று பிடித்தல் , ஒருவர் காலை இன்னொருவர் தொடுதல் , ஒருவர் கட்டிக்கொண்டிருக்கும் துணியை இன்னொருவர் துணியுடன் முடி போடுதல் , என்று இருவருடைய வாசனைகள் , குணங்களை பரிமாறி கொள்ளும் சடங்குகளாக வைத்து இருக்கின்றனர் . அதனால் மனமும் குணமும் வாசனைகளும் ஒத்துப்story

Avani Avittam | ஆவணி அவிட்டம்

படம்
ஆவணி அவிட்டம் கேள்வி : இந்த ஆவணி அவிட்டம் என்பது என்ன? பழைய பூணூலை கழற்றி விட்டு, புதிய பூணூலைப் போட்டுக் கொள்ள ஒரு தினம். அதுதானே ஆவணி அவிட்டம் என்பது? அதாவது பூணூலை மாற்றுகிற தினம்தானே அது? சோ : நீங்கள் சொல்கிற மாதிரிதான் இப்போது ஆகிவிட்டது. ஆனால், ஆவணி அவிட்டம் என்பது அதுவல்ல. ஆவணி அவிட்டம் என்று சொல்லப்படுகிற சடங்கின் உண்மையான பெயர் உபாகர்மா. உபாகர்மா என்றால் ஆரம்பம் என்று அர்த்தம். ச்ராவண மாதத்தில் பிரம்மதேவனுக்கு வேதம் கிட்டியது; அதாவது உபதேசம் ஆகியது. அந்த தினம், ஆவணி மாதம், அவிட்ட நக்ஷத்திரம். அதனால்தான் இதற்கு ‘ஆவணி அவிட்டம்’ என்ற பெயரும் வந்தது.  அப்போது பிரம்மனுக்கு வேதம் கிட்டியதால், அவனுக்கு அது ஆரம்பம் ஆகியது. அந்த ஆரம்பத்தை இங்கே மனிதர்கள் கொண்டாடுகிறார்கள். இது வருடா வருடம் செய்யப்படுகிறபோது, வேதத்திற்குச் செய்யப்படுகிற மரியாதையாக இது கருதப்படுகிறது. வேதத்திற்கு ஆண்டு விழா என்றும் இதைச் சொல்லலாம். ப்ரம்ம தேவனுக்கு உபதேசமாகிய தினம்; அதிலிருந்து வழி வழியாக மனிதர்களுக்குக் கிடைத்தது. அதனால் ஒவ்வொரு வருடமும் அந்த தினத்தைக் கொண்டாடுகிறோம். அது ஆண்டு விழா. கேள்வி : ஆரம்பம் என

பிரிந்திருக்கும் தம்பதி சேர்ந்து வாழ மாந்திரீக தாந்திரீக ரகசியம்

படம்
1) கெட்ட கனவு, சகுன பாதிப்பில் இருந்து விடுபட: எந்த கிழமையாக இருந்தாலும் அன்ற சூரிய உதயத்திற்கு முன்பு “ஓம் சிவசிவ ஓம்”மனதார ஜெபித்து வெண் பூசணியை உணவில் சேர்த்து சாப்பிட உடனே தோஷம் நீங்கும். 2.நவக்கிரக தோஷம் விலக: வீட்டில் நவதானியங்களை கொண்டு முளைப்பாரி போட்டு வளர்த்து அதனை ஏதாவது ஒரு வியாழக்கிழமை சுக்கிர ஓரையில் பூஜை செய்து ‘ஓம் அரி ஓம்” என்று 1008 உரு அருகம்புல் கொண்டு ஜெபித்து தண்ணீரில் முளைப்பாரியை கரைத்து விட உடனே நவக்கிரக தோஷம் விலகும். செவ்வாய் தோஷம் விலக : செவ்வாய்தோஷம் பாதிப்பு உடையவர்கள் மண்கலயத்தில் கும்பம் வைத்து தேங்காய்க்கு பதிலாக வாழை பூவை வைத்து மல்லிகை பூவை கொண்டு 1008 உரு ‘ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்” என்று செவ்வாய்கிழமை செவ்வாய் ஓரையில் ஜெபித்து (7 வாரம்) கடல் மற்றும் ஆற்று தண்ணீரில் வாழை பூவை விட்டு விட உடனே செவ்வாய்தோஷம் விலகும்.  3.செய்வினை, ஏவல் பாதிப்பு விலக: தினசரி விநாயகர் அகவல் படித்து, பிரண்டை துவையல் சாப்பிட்டு வரவும் தேனில் “ஓம் அரி ஒம்”; மந்திரத்தை ஜெபித்து, தேனை சாப்பிட்டு வர செய்வினை, ஏவல் பாதிப்புகள் விலகும். 4.குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட குடிப்பழக்

அரசே மனித ஆயுளை அறுக்கும் வாள்கள் ஆறு

படம்
ஒரு முறை திருதராஷ்டிரன், தன் சகோதரர் விதுரரிடம், ‘‘மனிதனுக்கு ஆயுள் நூறு வருடம் என்பர். எனினும் இதுவரை நூறு வருடங்களைக் கடந்த மனிதர்கள் எவரும் இல்லை என்றே தோன்றுகிறது. இதற்குக் காரணம் என்ன?’’ என்று கேட்டார். விதுரர் பதில் சொன்னார்: ‘‘அரசே மனித ஆயுளை அறுக்கும் வாள்கள் ஆறு. 1) கர்வம். மனிதர்களில் பலர், ‘இந்த உலகில் நானே கெட்டிக்காரன். மற்றவரெல்லாம் முட்டாள்!’ என்று நினைக்கிறார்கள். ஒருவனுக்கு கர்வம் ஏற்பட்டால் கடவுள் சும்மா இருக்க மாட்டார். ஆகவே, கர்வம் இல்லாமல் இருக்க, தனது குற்றம் குறைகளைப் பார்க்க வேண்டும். பிறரிடம் நற்குணங்களையே பார்க்க வேண்டும். 2) வாள்- அதிகம் பேசுவது. தனக்குப் பேச விஷயங்கள் இல்லாதபோதும், வீண் பேச்சு பேசுபவன், வீண் வம்பை விலைக்கு வாங்குகிறான். 3)வாள்- தியாக உணர்வு இன்மை. அதீத ஆசையே மனிதனின் தியாக உணர்வைத் தடுக்கிறது. இதை உணர்ந்தால், தியாக உணர்வு தானே வரும். 4) வாள்- கோபம். கோபத்தை வெல்பவனே உண்மையான யோகி. கோபம் வந்து விட்டால், தர்மம் எது? அதர்மம் எது என்பது தெரியாமல் போகிறது. விவேகம் இழந்து பாவங்களைச் செய்ய நேரிடுகிறது. 5) வாள்- சுயநலம். சுயநலமே எல்லா தீமைகளுக்கும்

Have darshan of Kamakshi! | காமாக்ஷியை தர்சனம் பண்ணிட்டுப் போ!

படம்
காமாக்ஷியை தர்சனம் பண்ணிட்டுப் போ! பெரியவாளை தர்சனம் செய்வதற்காக ஒரு தம்பதி தங்கள் ஐந்து வயதுப் பெண் குழந்தையுடன் காரில் காஞ்சிபுரம் கிளம்பினார்கள். அவர்களோடு அந்த பக்தரின் அப்பாவும் கிளம்பினார். சுங்குவார் சத்திரம் அருகில் வரும்போது, கூட வந்த தாத்தாவுக்கு சிறுநீர் கழிக்க வேண்டியிருந்ததால், ரோடின் ஒரு ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு, அப்பாவும் மகனும் ரோடைக் க்ராஸ் பண்ணி எதிர் பக்கம் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். ஐந்து செகண்டுக்கு ஒருமுறை குறைந்தது இரண்டு வண்டிகளாவது போய்க்கொண்டிருந்தன. காருக்கு வெளியே தன் அம்மாவுடன் நின்று கொண்டிருந்த குழந்தை, எதிர்பக்கம் வரும் தாத்தாவை பார்த்து விட்டு, ஏதோ இப்போதுதான் புதுஸாகப் பார்ப்பது போல், “தாத்தா!..” என்று கத்திக் கொண்டு, திடீரென்று ஒரேயடியாகத் துள்ளிக்கொண்டு ரோடை க்ராஸ் செய்ய ஆரம்பித்தாள் ! வண்டிகளைப் பற்றிய பயமே அந்தக்குழந்தைக்கு இல்லை! அம்மாவும் அப்பாவும் தாத்தாவும் பதறிப் போன சமயம்,வேகமாக வந்த லாரி, அந்தக் குழந்தையை தூக்கி வீசி எறிந்தது! கண் இமைக்கும் நேரத்தில் நடந்து விட்ட இந்த விபத்து அத்தனை பேரையும் ஸ்தம்பிக்க வைத்துவிட்டது! அலறிக்க

Drona received his thumb as a gift from Ekalaiva | துரோணர் ஏகலைவனிடம் கட்டைவிரலை குரு தட்சணையாக பெற்றதில்

படம்
#துரோணர் ஏகலைவனிடம் கட்டைவிரலை குரு தட்சணையாக பெற்றதில்- கிருஷ்ணரின் பங்கு பற்றிய பதிவு. ஏகலைவன் துரோணரையும் துரோணர் ஏகலைவனையும் காப்பாற்றி கொண்டதில் , பகவான் கிருஷ்ணரின் செயல் பின்னணியில் உள்ளது. அதை பற்றி தெரிந்து கொள்வோமா!. உண்மையில் நடந்தது என்னவெனில், ஏகலைவனிடம் இருந்து குருதட்சணையாக கட்டைவிரலை துரோணர் பெற்றது. துரோணரின் நிலை பரிதாபத்திற்குரிய ஒன்றாகும். ஆம், துரோணர் அரச குடும்பத்து ஆசிரியர், எல்லா விதத்திலும் அரசனுக்கு கட்டுபட்டவர், அவனை மீறி அவர் ஏதும் செய்துவிட முடியாது. சுருக்கமாக சொன்னால் அரச குடும்பத்து அடிமைகளில் அவரும் ஒருவர். அந்நாளில் ராஜவம்சத்திற்கும் மற்றும் சத்திரிய வம்சத்திற்கும் மட்டுமே சில பயிற்சிகள் கற்றுகொடுக்கபடும். எல்லோரும் எல்லாம் பயின்றால், அரசுக்கு எதிரான சக்திகள் தலையெடுக்கும் எனும் தந்திரம் அது. அவ்வகையில் பாண்டவரும், கவுரவரும் பயில்கின்றார்கள், தேரோட்டி மகனான கர்ணனும் பரசுராமரிடம் சத்திரியர் என பொய்யுரைத்து வில்வித்தை பயில்கிறான். ஏகலைவனின் குலத்தொழில் வேட்டையாடுதல். ஏகலைவன் குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக வேட்டையாடுவதால், ஏகலைவன் இயற்கையிலேயே ,இலக்கை

விதுரர் கூறுகிறார் , யாருக்கெல்லாம் தூக்கம் வராது?

படம்
விதுரர் கூறுகிறார் , யாருக்கெல்லாம் தூக்கம் வராது? தூக்கம் வராமல் தவிப்போரும் உளர். உணவு இல்லாதவன் தூங்கமாட்டான்; கெட்ட நடத்தை உள்ளவனுக்கு தூக்கம் வராது; திருடன் தூங்கமாட்டான்; ஏராளமான உணவு உண்டவனுக்கு தூக்கம் வராது; நோயுற்றவன் தூங்கமாட்டான்;தீயவனுக்கு தூக்கம் வராது. பிறர் மனைவியை அடைய முயற்சிப்பவனுக்கும் காமுகனுக்கும் தூக்கம் வராது; நல்லவர்களை விரோதித்துக் கொண்டவனுக்குத் தூக்கம் வராது; பண்பில்லாதவளை மனைவியாகக் கொண்டவனுக்குத் தூக்கம் வராது; கெட்ட எண்ணங்கள் கொண்டவனுக்குத் தூக்கம் வராது; நல்ல பிள்ளைகளைப் பெறாதவனுக்குத் தூக்கம் வராது.. மன்னிக்கும் தன்மையே வலிமை... வாழ்க்கைக்கு வழிகாட்டும் விதுர நீதி.  விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! ஒருவன், ஒரு பெருங் காட்டுக்குள் நுழைந்தான். எவராலும் சுலபமாக நுழைய முடியாத காடு அது. அங்கு போன அந்த மனிதன், நன்றாகச் சுற்றுமுற்றும் பார்த்தான். சிங்கம், புலி, கரடி முதலான துஷ்ட மிருகங்கள் கூட்டம் கூட்டமாக இருந்தன. ஒரே கூச்சல். அந்த மிருகங்களின் நடமாட்டத்தையும் கூச்சலையும் கண்டு, மனிதன் மிகவும் பயந்து போய் அங்குமிங்குமாக ஓடித் தப்பிக்க முயற்சி செய்தான்

For marriage get prasadam gift from Tirumala Tirupathi

படம்
Tirumala Tirupathi If marriage is certain in your house, send the first good letter to Swamy one month before.. Immediately you will get a special gift from Tirumala. In it, bracelets, akshatas (mix these in talambras on marriage day) for the bride and groom to tie their hands, a book that expresses the specialty of marriage, saffron, maha prasadam, gift will be sent with the blessings of Padmavathi Srinivasa. The happiness you get when you get the gift from Tirumala to your wedding house can't be expressed in words.. Courier the first magazine of the wedding invitation at your home to this address. Our address on the auspicious letter will receive the gift of Swami. If the gift matter is kept aside... it is auspicious to send the first newspaper of the wedding invitation to the Swami. To, Sri Lord Venkateswara swamy, The Executive Officer TTD Administrative Building K.T.Road Tirupati 517501 Tirumala Tirupati

பூர்வ ஜென்ம பூனை தோஷத்தை போக்கி அருளிய மகா குரு

படம்
பூர்வ ஜென்ம பூனை தோஷத்தை போக்கி அருளிய மகா குரு....... ஒருசமயம், காஞ்சிப் பெரியவர் பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கூட்டத்தில் வந்த இளம் தம்பதியரின் கையில் ஒரு ஆண்குழந்தை இருந்தது. கொழு கொழுவென இருந்த குழந்தையை பெரியவரின் காலடியில் கிடத்தி விட்டு, அழத் தொடங்கினர். “தங்க விக்ரகம் போல இருக்கும் அந்த குழந்தையின் உடம்பில் எந்த வித அசைவும் இல்லை. மலர் போன்ற அதன் கண்களில் பார்வையும் இல்லை” என்பதை அறிந்ததும் அனுதாபத்தில் ஆழ்ந்தனர். உற்றுப் பார்த்த பெரியவர், “அப்படியே தான் இருக்கு இன்னும் கொறயலையே” என்று மட்டும் சொல்லி விட்டு, சில நிமிடம் மவுனம் காத்தார். பெரியவர் என்ன சொல்கிறார் என்பது அப்போது யாருக்கும் புரியவில்லை. பின் மடத்து ஊழியரை அழைத்து, பாலும், நந்தியாவட்டைப் பூவும் கொண்டு வரும் படி பணித்தார். பூவினைப் பாலில் தோய்த்து குழந்தையின் தலை, கண்கள், வயிறு, பாதம் ஆகியவற்றில் தடவி விட்டு, கண்களை மூடி பிரார்த்தித்தார். பெற்றோரிடம், “கொழந்தைய.. .. மாயவரம் (மயிலாடுதுறை) மாயூரநாதர் கோயிலுக்கு தூக்கிண்டு போயி தட்சிணாமூர்த்தி பாதத்தில படுக்கப் போட