மகாபாரத்துல யுத்தம் ஆரம்பிக்கும் முன்பு அபிமன்யூக்கு திருமணம் நடக்கும்.
மகாபாரத்துல யுத்தம் ஆரம்பிக்கும் முன்பு அபிமன்யூக்கு திருமணம் நடக்கும். அப்போது பாண்டவர்களின் பக்கம் எத்தனை அரசர்கள் உதவியாக இருக்க போகிறார்கள் என்பதை அந்த திருமண நிகழ்வை வைத்து தான் முடிவுக்கு வர முடியும் என்ற கணக்கில் பாண்டவர்கள் காத்திருந்தனர்.
சல்லியர் மிகுந்த பலம் வாய்ந்த ஆளுமையாக மகாபாரத்தில் வலம் வருபவர். அவர் உறுதியாக பாண்டவர்கள் பக்கம் தான் நிற்பார் என்று பாண்டவர்கள் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தனர். அப்போது தவறுதலாக வழிமாறி சல்லியர் எதிர் கட்சியான கெளரவர்கள் படையில் சேர வேண்டிய நிர்ப்பந்தம் ஆகிவிடும்.
இதனை விசாரிக்க சுருதகீர்த்தி (அர்ஜூனனுக்கும் திரெளபதிக்கும் பிறந்தவன்) அனுப்படுவான். சல்லியர் தங்கி இருக்கும் இடம் அடையவும் சுருதகீர்த்திக்கு புரிந்துவிடும் தாத்தா அவர்களின் பக்கம் தான் என்று. அங்கே இருக்கும் அசுவத்தாமனிடம் அதில் இருக்கும் சூது பற்றின விவரம் அறிய தன் கேள்வியை வைப்பான். எப்படி அவரை உங்களோட இணைத்தீர்கள் என்று.?
இங்கு தான் மாகாபாரத்தின் பல முடிச்சுகள் அவிழும் விதமாக அசுவத்தாமன் பதல் தருவார். (நான் சுருக்கமா எழுதிருக்கேன்)
"நாம் யார் மீது அளவு கடந்த நம்பிக்கை வைக்கிறோம் அவர்களை எப்போதும் நாம் சந்தேகத்திற்கிடமான இடத்தில் பொருத்தி பார்க்க மாட்டோம்.
உங்களின் நம்பிக்கைதான் எதிரிகளின் பலம் " என்று அசுவத்தாமன் சுருதகீர்த்திக்கு பதிலாக தருவார். ஒரு நிமிடம் ஆடிப்போகும் சுருதகீர்த்தி தன் தந்தையின் வாழ்நாள் எதிரியாக இருக்கும் அசுவத்தாமனை அந்த நேரத்து குருவாக பணிந்து சில நுணுக்கங்களை தெரிந்து கொள்வான்.
அசுவத்தாமன் வழியணுப்பும் போது சுருதகீர்த்தியை உச்சி முகர்ந்து இளம் வயது அர்ஜூனனை பார்ப்பது போல் என் முன் நிற்கிறாய் "நீ வாழி" என்று வாழ்த்துவான்.
இறுதிக் கட்ட பாரத போர் முடிந்த தருவாயில் அசுவத்தாமன் சற்றும் பழி வாங்க அஞ்சாத அதே சினத்துடன் எந்த சிரத்தின் மீது தன் கை வைத்து நல்லாசி வழங்கினானோ அதே கைகளால் உபபாண்டவர்களை தீயிட்டு கொல்வான்.
இப்ப இதுல இருந்து நாம எடுத்துக்க வேண்டியது
1:) மலை போல நம்பிய யாரையும் அலட்சியமாக விடக்கூடாது. எப்பவும் அவங்க மேல நம்ம பார்வை இருக்கணும். இல்லைன்னா எப்பவாவது கோமாளி ஆயிருவோம்.
2:) நம்மை ஆசீர்வதிக்கும் அத்தனை கரங்களும் நமக்கானது அல்ல அவ்வளவு தான்.
கருத்துகள்