இடுகைகள்

ஜூலை, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பௌர்ணமி பூஜை

⇭ பௌர்ணமி தினங்களில் அம்பிகை வழிபாடு மிகவும் சிறப்பானது. ஒளிமயமான அன்னை தேவி பராசக்தியை, இந்த ஒளிமயமான பௌர்ணமி தினத்தில் பூஜைகள் செய்து வழிபாடு செய்யும் போது அன்னையின் பரிபூரண அருள் கிடைக்கிறது. ⇭ ஏழு கிரகங்களுக்குரிய நாட்கள் சேரும்போது அதற்கேற்ப மனிதனின் அறிவு, புத்தி, மனம் மற்றும் சரீரத்திலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. ⇭ ஒவ்வொரு நாட்களிலும் வரும் பௌர்ணமியில் அம்பிகையை எவ்வாறு வழிபட்டால் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம். ஞாயிற்றுக்கிழமை : 🌕 அம்பிகைக்கு சிகப்பு ஆடை அணிவித்து, செந்தாமரை மலர்கள் சூட்டி, அர்ச்சனை செய்ய வேண்டும். செவ்வாழைப்பழம், சர்க்கரைப் பொங்கல் நிவேதனமாக படைத்து வழிபடவேண்டும். அவ்வாறு வழிபடும் போது தீராத நோய்கள் எல்லாம் தீரும். இப்படி பூஜை செய்பவரை எந்த நோயும் அண்டாது. திங்கட்கிழமை : 🌕 அம்பிகைக்கு ஆரஞ்சு நிற ஆடையணிவித்து, மந்தாரை, மல்லிகை மலர்கள் சாற்றி, இதே மலர்களினால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இவ்வாறு வழிபடும் போது சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். செய்யும் தொழிலில் உயர்வு, வேலை வாய்ப்பு கிடைக்கும். செவ்வாய்க்கிழமை : 🌕 அம்பாளிற்கு வெண் பட்ட

வாழ்க்கையின் உண்மை

ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள். ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான். அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான். அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான். அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான். ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான். பிறரோடு ஓடி விடுவாளோ என்று பயந்தான். ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல்மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்து கொண்டாள். ஆனால் தனக்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள். ஒருநாள்... எனவே தன்னுடன் சாக யார் தயாராய் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினான். தான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை அழைத்தான். அவன் மரணப்படுக்கையில் விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின் தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான். அவளோ அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்கினாள். அவன் தனது மூன்றாவது மனைவியை அழைத்தான்.

இந்த மாதிரி கோலம் போட்டால் கடன் பிரச்சனை கட்டாயம் குறையாது தெரியுமா?

படம்
கோலம் போடாத வீட்டில் கண்டிப்பாக மஹாலக்ஷ்மி காலடி எடுத்து வைக்கவே மாட்டாள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் மஹாலக்ஷ்மி வீதியில் வலம் வருவார்களாம். யார் வீட்டு வாசலில் சுத்தம் செய்து அழகிய கோலம் போட்டு வைத்திருக்கிறார்களோ, அவர்களது இல்லத்திற்கு காலடி எடுத்து வைத்து உள்ளே வருவார்களாம். அதனால் தான் அதிகாலையில் கோலம் போடும் வழக்கத்தை நமது முன்னோர்கள் கடைபிடித்து கொண்டிருந்தனர். ஆனால் இந்த அவசர யுகத்தில் அவர் அவர் சவுகரியதிற்கு ஏற்ப எந்த நேரத்திலும் கடமையே என்று கோலம் போடுகின்றனர். கோலம் போடுவதில் கூட சாஸ்திரமா? என்றால், ‘ஆம்’ என்றே கூறலாம். சிலருக்கு எப்போதும் கடன் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும். கடன் தொல்லையில் இருந்து எப்படியாவது விடுபட்டு மீண்டு விட வேண்டும். அதன் பின் இனி கடனே வாங்காமல், உழைப்பதை, இருப்பதை வைத்து வாழ வேண்டும் என்று எவ்வளவோ பேர் தினம் தினம் புலம்பி கொண்டிருப்பீர்கள். வாழ்க்கையில் பாதி நிம்மதியை கெடுப்பது உடன் இருப்பவர்கள் என்றால், மீதி நிம்மதியை கெடுப்பது கடன் வாங்கியிருப்பது தான் காரணமாக இருக்கும். கர்ம வினையில் கடனும் ஒரு ப

அக்னி நட்சத்திரம் பிறந்த கதை

படம்
முன்னொரு காலத்தில் 12 வருடங்கள் இடைவிடாமல் நெய்யூற்றி சுவேதகி யாகம் செய்தார்கள்.  தொடர்ந்து நெய் உண்டதால் அக்னி தேவனுக்கு மந்த நோய் ஏற்பட்டது.  அவன் உடம்பில் சேர்ந்த கொழுப்பைக் குறைக்க, ஒரு காட்டை அழித்து அந்த நெருப்பைத் தின்றால்தான் தீரும். எனவே அக்னி பகவான் காண்டவ வனத்தைத் தேர்ந்தெடுத்தான்.  அவ்வனத்தில் உள்ள அரக்கர்களும் கொடிய விலங்குகளும் தாவரங்களும் சாந்தமான விலங்குகளும் தங்களை அக்னி தேவனின் அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என வருணதேவனிடம் முறையிட்டன.  அக்னி உங்களை ஒன்றும் செய்யாமல் நான் காக்கிறேன்' என வருணன் கூறினான். இதையறிந்த அக்னி கிருஷ்ணரிடம் ஓடி, "நான் காண்டவ வனத்தை அழிக்க முடியாமல் வருணன் கனமழை பெய்விக்கிறான். என்னைக் காப்பாற்றுங்கள்' என முறையிட்டான்.  கிருஷ்ணன் அர்ச்சுனனைப் பார்த்தார். அர்ச்சுனன் அம்புகளை சரமாரியாக எய்து வானை மறைத்து சரக்கூடு கட்டினான். அப்போது அக்னி தேவன் தன் ஏழு நாக்குகளால் வனத்தை எரிக்க முற்பட்டான்.  அப்போது கிருஷ்ணர், "21 நாட்கள்தான் உனக்கு அவகாசம். அதற்குள் உன் பசியைத் தீர்த்துக் கொள்' என்றார்.  அதன்படி அக்னி காண்டவ

வன்னி மரம் மிகவும் வசீகரமான மரம்

படம்
வன்னி   மரம்  மிகவும் வசீகரமான மரம் இதனுடைய இலைகள் முத‌ல் அனைத்தும் சிறப்பு வாய்ந்தது.  வன்னி மரம் பாலைவனப் பகுதியில் கூட வளரக்கூடியது வன்னி மரம் என்று சொன்னாலே விருதாச்சலம் என்றுதான் அனைவருக்கும் ஞாபகம் வரும்.  விருதாச்சலம் விருதகிரி ஆலயத்தில் பழமையான வன்னி மரம் இருக்கிறது இந்த வன்னி மரத்தின் இலைகளைப் பறித்துதான் அந்தக் கோயிலைக் கண்டினார்கள் என்று சொல்வார்கள்.  எப்படி என்றால், அங்கு விபசித்தி முனிவர் என்று ஒருவர் இருந்தார் அந்த முனிவர் அங்கேயே வாழ்ந்து அங்கேயே ஒரு கோயிலைக் கட்டிவிட்டு ஜீவ சமாதியும் அடைந்திருக்கிறார். அவர் என்ன செய்வாரென்றால்  தினசரி வேலையாட்களுக்கு அந்த வன்னி மரத்தின் கீழ் உட்கார்ந்து வன்னி இலைகளை உருவி அந்த வேலையாட்களுக்கு கொடுப்பாராம்.  அவர்கள் எந்த அளவிற்கு உழைத்தார்களோ அந்த அளவிற்கு அது பொன்னாக மாறுமாம். ஒன்றுமே உழைக்காமல் சுற்றிக் கொண்டிருந்தால் அது இலையாகவே இருக்குமாம் கடினமாக வேர்வை சிந்தி அனைத்தும் செய்தவர்களுக்கு அத்தனையும் தங்கமாக மாறுமாம். இது வரலாற்றுச் சான்றுகளில் இருக்கிறது. கல்வெட்டுச் சான்றுகளில் இருக்கிறது. அப்படியொரு சக்தி இந்த வன்னி மரத்த

கர்ணனின் நாகாஸ்திரம்

படம்
இந்தப் பதிவு மூன்று பகுதிகளைக் கொண்டது. 1.மகாபாரதத்தில் கர்ண நாகாஸ்திரம் பற்றி சொல்லப்படும் இடங்கள். 2.கர்ணனால் நாகாஸ்திரம் ஏவப்பட்டபோது நடந்த நிகழ்வு. 3.தவறான கருத்துக்களுக்கான பதில். முதலில்... 1.மகாபாரதத்தில் கர்ண நாகாஸ்திரம் பற்றி சொல்லப்படும் இடங்கள்:- திருதராஷ்டிரர் சஞ்சயனிடம் சொல்வது:- ஓ! சஞ்சயா, வலிமைமிக்கதும், தெய்வீகமானதும், தன் வகையில் முதன்மையானதும், பாம்பைப் போன்ற தலையுடன் கூடியதுமான அந்தக் கணை {நாகாஸ்திரம்} எவ்வாறு பயனற்றதாகச் செய்யப்பட்டது என்பதையும் சொல்வாயாக.(கர்ணன் இறப்பிற்கு பிறகு நடந்த சம்பவத்தை திருதராஷ்டிரர் கேட்பது) கர்ணன் சல்லியனிடையேயான உரையாடல் :- ஓ! சல்லியரே, குருதி குடிக்கும் கூரிய வாய்க் கொண்டதும், ஓர் அம்பறாத்தூணிக்குள் தனியாகவே கிடப்பதும், சிறகுகளுடன் ஆயத்தம் செய்யப்பட்டதும், எண்ணெயில் நன்கு தோய்க்கப்பட்டதும், நன்கு அலங்கரிக்கப்பட்டதுமான இந்தக் கணையை நான் கொண்டிருக்கிறேன்.(6) சந்தனத்தூளுக்கு மத்தியில் கிடப்பதும், பல ஆண்டுகளாக என்னால் வழிபடப்பட்டு வருவதுமான இது, பாம்பொன்றின் இயல்பையும், வடிவத்தையும் கொண்டிருப்பதால், நஞ்சுமிக்கதாகவ

கடனாக கொடுத்த பணம் திரும்பி வர வில்லையா

படம்
உங்க வீட்ல இருக்க இந்த 3 பொருட்களை ஒன்றாக சேர்த்து வைத்தாலே போதுமே ! கடன் வாங்காமல் இருக்க, வாங்கிய கடனை திருப்பி தர பல பரிகாரங்கள் இருக்கின்றது. ஆனால் சில பேர், சிலருக்கு கடன் கொடுத்துவிட்டு வசூல் செய்ய முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருப்பார்கள். கடனை வாங்குவதற்கு முன்பு, நம் வீட்டிற்கு பத்து முறையாவது வந்து சென்ற கடனாளி, கடன் தொகையை பெற்று விட்ட பின்பு, கடன் பெற்ற அந்த நபரை, தொலைபேசியிலும் தொடர்பு கொள்ள முடியாது. வலை போட்டு தேடினாலும் கையில் சிக்க மாட்டார்கள் கடனாளிகள். கடன் தொகையை கொடுத்தவர், கடன் பெற்றவரின் வீட்டிற்கு, எத்தனை முறை சென்றாலும் அவரை காண முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். அதாவது இந்த இடத்தில் சூழ்நிலை மாறி விடும். கடனாளியைத் தேடி, கடன் கொடுத்தவர் அலைய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இந்த சூழ்நிலையில் கடனாளியே, கடன் தொகையை நம்மிடம் தேடிவந்து, திருப்பித்தர ஒரு சுலபமான பரிகாரம் உள்ளது. அது என்ன பரிகாரம் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த பரிகாரத்தை, கடன் தொகையை வசூலிக்க வேண்டும் என்பதற்காக மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. சிலபேர்

சர்வ பாக்கியங்கள் அளிக்கும் ஸ்ரீ சத்யநாராயண பூஜை

படம்
ஸ்ரீ மன் நாராயணனே சத்ய நாராயணன். வாழ்வும் வளமும் மங்காத செல்வமும் பெற சத்ய நாராயண பூஜை செய்யலாம். எளிதான இந்த பூஜையை இல்லத்திலேயே செய்துவிடலாம். அருகில் உள்ள கோயில்களில் இப்பூஜை செய்யப்பட்டால் கலந்து கொண்டு நலம் பெறலாம். பொதுவாக இந்தப் பூஜை செய்யப்படுவதே பதினாறும் பெற்று பெருவாழ்வு அடையத்தான். பூஜை தொடங்குவதற்கு முன்பே கலந்துகொள்பவர்கள் வந்துவிட வேண்டும். பின்னர் இறுதிவரை அங்கேயே இருந்து பிரசாதத்தைப் பெற்று அங்கேயே சிறிது உண்டுவிட்டுப் பின்னர் இல்லத்துக்கும் எடுத்து வரலாம். இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால், குடும்பத்தில் கஷ்டங்கள் குறையும், செல்வ வளம் பெருகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும். பெற்றோருக்கு நற்பெயர் வாங்கித்தரும் குழந்தைகள் பிறக்கும் என்கிறது கந்த புராண சுலோகம். ஆந்திராவில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அன்னாவரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ சத்யநாராயண சுவாமி ஆலயம்.ஸ்ரீ சத்யநாராயணன் பற்றிய கதை கந்த புராணத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பூஜையை செய்ய வேண்டிய முறைகள் பற்றியும் கந்த புராணத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பூஜை ஏதேனும் ஒரு முக்கிய நிகழ்வுகளு

சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சிறுவாபுரி முருகன்!

படம்
சொந்த வீடு பற்றிய கனவு என்பது எல்லோருக்குமே இருக்கும். ஆனால், எல்லோராலும் அந்தக் கனவை அத்தனை எளிதாக அடைந்து விட முடிவதில்லை. கையில் பணமிருந்தும் சொந்த வீடு அமையாதவர்கள் பலர் உண்டு. ஆனால், அப்படியெல்லாம் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. உங்கள் உள்ளத்தின் உந்துசக்தியாக இருந்து உங்களுக்குரிய சொந்த வீட்டை அமைத்துத் தருகின்றேன் என்கிறார், சிறுவாபுரி முருகன். சொந்த வீடு அமைய சிறுவாபுரி ஆம், சிறுவாபுரிக்குச் சென்று உள்ளன்போடு வணங்கினால், நாம் நினைத்த காரியம் நினைத்தபடி நடந்தேறும் என்கின்றனர் இக்கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள். குறிப்பாக சொந்தமாக வீடு அமையவேண்டும் என இங்கு வேண்டிக்கொள்ள வருபவர்களே அதிகம். சென்னை, கல்கத்தா நெடுஞ்சாலையில் 33 கிலோமீட்டர் பயணம் செய்தபின் இடது புறமாக பச்சைப்பசேல் வயல்களைக் கடந்து 3 கிலோமீட்டர் போனால் சிறுவாபுரி முருகனை தரிசிக்கலாம். சென்னையிலிருந்து செங்குன்றம் காரனோடை வழியாகவும், மீஞ்சூர் பொன்னேரி வழியாகவும் இந்த ஊரை அடையலாம். இவ்வூர், சிறுவாபுரி, சின்னம்பேடு, சிறுவை, தென் சிறுவாபுரி, குசலபுரி என்றும் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. ரா

பிறவாத வரம் வேண்டும்

படம்
''சுவாமி! பூமியில் நாம் பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி பிறக்காமல் இருக்க என்ன வழி?'' எனக் கேட்டார் பக்தர் ஒருவர். '' பிறப்புக்குக் காரணம் என்ன? நாம் ஏதோ தப்பு பண்ணியிருக்கிறோம். அதற்கு தண்டனையாகத் தான் பிறப்பு எடுத்திருக்கிறோம். செய்த தப்புக்கு இத்தனை கசையடி வாங்க வேண்டும் என்ற கணக்கு இருக்கிறது. இந்த உடம்பின் மூலம் நோய், துன்பம் என்னும் கசையடிகளைப் பெறுகிறோம். இந்த உடம்பு போன பின் எஞ்சிய கசையடிகளைப் பெறவும், இந்த உடம்புடன் செய்த பாவத்திற்கான கசையடிகளைப் பெறவும் மீண்டும் பிறக்கிறோம். புதுஉடம்பு கசையடிகளை வாங்கத் தொடங்குகிறது. இப்படி கோபம்,காமத்தால் மனிதன் பாவத்தில் ஈடுபடுகிறான். கோபத்துக்குக் காரணம் பற்று. அதாவது ஆசை. மனதில் நிறைய ஆசைகளை வளர்த்துக் கொண்டால் அது பாவத்தில் தள்ளி விடுகிறது. 'பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு' என்கிறார் திருவள்ளுவர். பற்று இன்றி வாழ விரும்பினால் நாம் கடவுளின் திருவடிகளை கெட்டியாக பற்றிக் கொள்ள வேண்டும். ஆசைக்கு என்ன காரணம்? உலகில் நம்மைத் தவிர, இன்னொன்று மேலானது என எண்ணும் போ

கேட்கும் வரத்தை கொடுக்கும் 5 அரச இலைகள்

படம்
இன்றைய சூழ்நிலையில், எல்லோருடைய வீட்டிலேயும் பொருளாதார பிரச்சனை இருந்துதான் வருகிறது. ஊரடங்கு உத்தரவும் இதற்கு ஒரு காரணம். வீட்டில் இருக்கும் பொருளாதார பிரச்சனைக்கு எந்த வகையிலாவது ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்று அந்த ஆண்டவனை வேண்டிக் கொண்டு, குறிப்பாக விநாயகப் பெருமானை வேண்டிக் கொண்டு இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் ஒரு நல்ல பலனை நம்மால் பெற முடியும். தொழில் பிரச்சனையாக இருந்தாலும் சரி, பண பிரச்சினையாக இருந்தாலும் சரி, ஆரோக்கிய பிரச்சனையாக இருந்தாலும் சரி, விநாயகரை மனதார வேண்டிக்கொண்டு இந்த அரச இலைகளுடன் என்ன பொருளைச் சேர்த்து, பரிகாரத்தை செய்வதன் மூலம் நம்மால் விரைவாக நல்ல பலனை பெற முடியும் என்பதைப் பற்றியும், பரிகாரத்தை வீட்டிலிருந்தே எப்படி செய்யலாம் என்பதைப் பற்றியும் இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம். இதற்கு முக்கியமாக தேவைப்படும் பொருள். ஐந்து அரச இலைகள், இதை மட்டும் எப்படியாவது மரத்திலிருந்து பறித்து வந்து வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த அரச இலைகளுக்கு விநாயகரின் உருவம் இருக்கிறது. உற்று நோக்கிப் பாருங்கள் உங்களுக்கே தெரியும். அரச மரத்தடி பிள்ளையாருக்

மோதிர விரலால் திருநீறை எடுப்பது ஏன்

நாம் வெளியில் செல்லும் போது, அங்கு இருக்கும் அதிர்வுகளை பலவழிகளில் நம் உடல் ஏற்றுக் கொள்கிறது. இது நம் உடலின் ஏழு சக்கரங்கள் வழியாக நிகழ்கிறது. அதனால் தான், நல்ல அதிர்வுகளை நம் உடல் ஏற்றுக் கொள்ளும் விதமாக திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் நம் கலாசாரத்தில் இருந்து வருகிறது. பசுவின் சாணம் மற்றும் சில பிரத்யேகப் பொருட்கள் கலந்த கலவையின் சாம்பல் தான் விபூதி அல்லது திருநீறு. இதற்கு அதிர்வுகளை உள்வாங்கும் திறன் உண்டு. விபூதி இட்டுக் கொள்ளும் போது, வாழ்வின் உயர்ந்த அம்சங்களை ஈர்த்துக் கொள்ளலாம். நம்மைச் சுற்றிலும் தெய்வீகத் தன்மை உண்டாகும். இதனால், தீயவற்றைத் தவிர்க்க முடியும். புருவ மத்தியில் (ஆக்ஞா சக்கரம்) திருநீறு பூசினால் வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம். தொண்டைக்குழியில்(விசுத்தி சக்கரம்) பூசினால் உடலிலும், மனதிலும் சக்தி அதிகரிக்கும். நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதியில் பூசினால் தெய்வீக அன்பைப் பெறலாம். விபூதியை மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்

பவழமல்லி தானாகவே உதிரும் அதிசயம்

படம்
ஒருமுறை இந்திரன் தேவலோகத்திலிருந்து கொண்டு வந்த பாரிஜாத மலரைக் கிருஷ்ணரிடம் கொடுத்தார்.ஸ்ரீகிருஷ்ணனோ  பாமாவிடம் கொடுத்துவிட்டார். இதைக் கண்ட நாரதர் உடனே ருக்மணியிடம் போய் விஷயத்தை சொல்லி விட்டார். உடனே ருக்மிணி  கோபமுற்றாள்.தன் தோழியின்  மூலம் ஸ்ரீகிருஷ்ணனை அழைத்து வரச் செய்து அவரிடம் தன் கோபத்தை வெளிப்படுத்தினாள். கிருஷ்ணன் அவளை சமாதானப் படுத்தினார் என்றாலும் அவள் சமாதானம் அடையவில்லை. தனக்கு பாரிஜாத மரமே வேண்டும் என்றாள். அவள் வேண்டுகோளை நிறைவேற்ற எண்ணிய கிருஷ்ணர் இந்திரனுடன் போரிட்டு பாரிஜாத மரத்தைக் கைப்பற்றிக் கொண்டு வந்து ருக்மணியின் வீட்டில் ஊன்றினார். இதனால் ருக்மணி கோபம் நீங்கி சமாதானம் அடைந்தாள்.  ஆனால் அந்த மரத்தில் பூத்த பூக்கள் அனைத்தும் பாமாவின் வீட்டில் விழுந்தது. ருக்மணிக்கு ஒரு பூ கூட கிடைக்காமல் போனது. ஏனென்றால் ருக்மிணி கேட்டது பாரிஜாத மரத்தைத்தான், பூவையல்ல. இன்றும் கூட பாரிஜாதம் என்ற பவழமல்லிப்பூ தானாக உதிர்வது இதனால்தான் என்கிறார்கள் பெரியோர்கள். இதற்கு வாயு புராணத்தில் மற்றொரு கதையும் உண்டு. அந்தக் காலத்தில் பவளமல்லிகா என்றொரு தேவதை இருந்

இரண்டுமே அவதாரம் துவாபரயுகத்தில் சாத்தியமா?

படம்
இராமாயண யுத்தம் முடிந்து ராமரும் சீதையும் லஷ்மணர் சமேதியாக அயோத்திக்குத் திரும்பினார்கள். அதன் பின் பல நிகழ்ச்சிகள் நடந்தன. ராமரும் லஷ்மணரும் அவரவர் அவதாராம் முடிந்து அடுத்த அவதாரம் எடுக்கச் சென்று விட்டனர். அப்போது கடைசி கட்டத்தில் ராமரைப் பார்த்து தம்பி லஷ்மணர் கேட்டார்” அண்ணா எனக்கு ஒரு ஆசை. நான் இதுவரை நீங்கள் கூறியபடியேதான் நடந்து வந்துள்ளேன். ஆனால் என்னால் சுயமாக சிந்திக்க முடியாமல் போய் விட்டது. ஆகவே நான் அடுத்த ஜென்மத்திலாவது, அது என்ன பிறப்பாக இருந்தாலும், நானாக முடிவெடுக்கும் நிலையில் இருக்க வேண்டும் என்பது மட்டும் அல்ல, அந்த அவதாரத்திலும் உங்களுக்குத் துணையாக இருக்கவே விரும்புகிறேன்” எனக் கேட்டார். ராமர் சிரித்து விட்டு ‘அப்படி ஆகட்டும்’ என்று கூறி விட்டு சென்றப் பின் சில நாட்களிலேயே இருவரும் தாம் எடுத்த அவதாரங்களை முடித்துக் கொண்டார்கள். அடுத்த அவதாரத்தில் ராமர் கிருஷ்ணராகவும், லஷ்மணர் பலராமனாகவும் அவதாரம் எடுத்தார்கள். ஆனால் பாலராமரின் பிறப்பு சில காரணங்களினால், தேவகி மற்றும் ரோஹிணி என்ற இரு தாயார்களின் வயிற்றில் வளர்ந்து பிறப்பு எடுக்கும் நிலையில் நிகழ்ந்தது. அதனால்தா