புதாஷ்டமி ஸ்பெஷல்
எந்த மாதத்திலாவது பெளர்ணமிக்கு பிறகு அல்லது அமாவாசைக்கு பிறகு வரும் புதன் கிழமை அன்று அஷ்டமி திதியும் வருமானால் அது புதாஷ்டமி விரதம், அல்லது சற்கதி விரதம் என பெயர்படும். அன்றைய தினம் விரதம் தொடங்க வேண்டும். வெல்ல பாகு மட்டுமே சிறிதளவு உட்கொள்ள வேண்டும். உள்ளங்கையிலே கடைசி மூன்று விரல்கள் கவரும் அளவை போல எட்டு பங்கு சாதம் தான் அவன் உட்கொள்ள வேண்டும். மாவிலையை தைத்து அதன் மேல் சாதத்தை கொட்டி , தர்பையால் கிளறி ஆற விட வேண்டும். அம்பிகையை பரிவாரங்களோடு பூஜிக்க வேண்டும். கற்கண்டினால் கலந்து தயாரிக்க பட்ட அன்னத்தை தானம் அளிக்க வேண்டும். விரத கதையை பக்தியுடன் கேட்க வேண்டும். புதாஷ்டமி - அக்னி புராணம் 218 ம் பக்கம் உள்ள கதை. ஒரு சமயம் தீரன் என்னும் அந்தணன் வசித்து வந்தான். அவனது மனைவி ரம்பை . மகன் கெளசிகன், மகள் விஜயை. அவனிடம் ஒரு எருது இருந்தது. அதன் பெயர் தனதன். ஒவ்வொரு நாளும் மகன் கெளசிகன் மற்ற பசுக்களுடன் தனது எருதையும் மேய்த்து வர ஓட்டி செல்வான். ஒரு நாள் அவன் கங்கையில் நீராடிக்கொண்டிருக்கும் போது திருடர்கள் அங்கு வந்து எருதை கவர்ந்து சென்று விட்டனர். அவன் சகோதரி விஜையையும் அவனும் எருதை தே