இடுகைகள்

டிசம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Kailasagiri Hill

படம்
Kailasagiri Hill in Chintamani has the temple of Lord Shiva and Ambaji Durga cave temple on a rock hill top and is at a distance of almost 80km from bangalore. The google maps show the exact location and can be followed. From there at a distance of around 10km, is the Amarnarayana Swamy temple at Kaivara where Sri Tatayya worshiped both Amaranarayana and Tirupathi Thimmappa at the same time.

Pancha Nathana Nataraja sthalam | கிட்னி பழுதா? சிறுநீரக கோளாறா?

படம்
உங்களுக்கு கிட்னி பழுதா? சிறுநீரக கோளாறா? குணமடைய வேண்டி சென்று தரிசிக்க வேண்டிய கோயில். பஞ்ச நதன நடராஜர்" ஸ்தலம் ஊட்டத்தூர். திருச்சி To பெரம்பலூர் சாலையில் பாடாலூர் என்ற ஊரிலிருந்து வலதுபுறமாக திரும்பி 6 கி.மீ சென்றால் ஊட்டத்தூர் கிராமத்தில் இருக்கும் பஞ்ச நதன நடராஜரை தரிசிக்கலாம். சிறுநீரக நோயை போக்கி கொள்ளலாம். அந்தக நரிமணம் என்கிற வேர் பல கோடி கற்களில் ஒன்றை பிளக்கும். அப்படி பிளக்கக்கூடிய கற்கள்தான் பஞ்சநதன பாறை. ஆசியாவிலேயே மிகவும் அரிதான, பஞ்சநதன கல்லில், ஒரே கல்லால் செய்யப்பட்ட நடராஜர் திருமேனி. ஆதலால் இவர் பஞ்சநதன நடராஜர் என்று அழைக்கப்படுகிறார். இந்த கற்கள் சூரியனில் இருந்து வெளிவரும் ஆரோக்கிய கதிர்வீச்சினை சேமித்து வைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையன. ஆதலால் நாம் இவரை என்ன நினைத்து வணங்குகின்றோமோ அது அப்படியே நடக்கிறது. இந்த வகை தெய்வ சிலை தற்போது வேறு எங்குமே கிடையாது சிறுநீரக நோய்கள் தீர்க்கும் அரிய தலம் ... சிறுநீரகம், மற்றும் சிறுநீரக கல் தொடர்பான நோய்களுக்கு இந்த நடராஜர் மருந்தாக திகழ்கிறார். சுமார் ஒரு கிலோ வெட்டி வேரினை 48 துண்டுகளாக எடுத்துக் கொண்டு அவற்றை ஒரு மாலைய

Learn Five | தெரிந்து கொள்ளுங்கள் ஐந்து ஐந்து ஐந்து

படம்
தெரிந்து கொள்ளுங்கள் ஐந்து ஐந்து ஐந்து !!! (1) பஞ்ச கன்னியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. (2) பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். (3) பஞ்சாமிர்தம் சர்க்கரை, தயிர், தேன், நெய், பால். (4) பஞ்சபாண்டவர் தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன். (5) பஞ்சசீலம் கொல்லாமை, பொய்யாமை, கல்லாமை, காமமின்மை, இரவாமை. (6) பஞ்சதிராவிடர் தெலுங்கர், திராவிடர், கன்னடர், மகாராஷ்டிரர், கூர்ஜரர். (7) பஞ்சபட்சி வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில். (8) பஞ்சபுராணம் தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம். (9) பஞ்சரத்தினம் வைரம், முத்து, மாணிக்கம், நீலம், மரகதம். (10) பஞ்சவர்ணம் வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, பசுமை. (11) பஞ்சாங்கம் கரணம், திதி, நட்சத்திரம், யோகம், வாரம். (12) பஞ்சமூலம் செவ்வியம், சித்திரமூலம், கண்டுபாரங்கி, பேரரத்தை, சுக்கு. (13) பஞ்சபாதகம் பொய், களவு, கள்ளுண்ணல், குருநிந்தை, கொலை. (14) பஞ்சபாணம் முல்லை, அசோகு, வனசம், சூதம், நீலம். (15) பஞ்சாயுதம் சங்கு, சக்கரம், கதை, கத்தி, வில். (16) பஞ்சபரமோட்டி அருகர், சித்தர், உபாத்தியாயர், ஆசிரியர்,

History of vedhalam | வேதாளத்தின் வரலாறு தெரியுமா?

படம்
வேதாளத்தின் வரலாறு தெரியுமா? உங்களுக்கு உண்மையில் வேதாளம் என்பது தேவர்கள் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருந்த புட்பதத்தன்தான். புட்பதத்தனும் அவனது மனைவி தேவதத்தையும் தேவர்களுக்கு ஆடை தைத்து கொடுக்கும் பணியை செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் புட்பதத்தனுக்கு ஒரு விபரீத ஆசை தோன்றியது. அதுதான் ஈசனுக்கும், பார்வதி தேவிக்கும் அழகிய உடை ஒன்றை தைத்து கொடுக்க வேண்டும் என்று. இன்னைக்கு இந்த பொருட்களை தானம் பண்ணுனா.. உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறுமாம்… புட்பதத்தன் தான் நினைத்தது போலவே அழகிய ஆடைகளை தயாரித்து அதனை ஈசனுக்கு வழங்க கைலாயத்திற்கு சென்றான். அங்கு சென்று ஈசனை பார்த்த மகிழ்ச்சியில் வந்த வேலையை மறந்து விட்டு ஈசனை வணங்கியே நேரத்தை கழித்தி விட்டான். ஈசனிடம் விடை பெற்றுக்கொண்டு அவன் திரும்பிய போது இருள் சூழ்ந்துவிட்டது. பிறகுதான் அவனுக்கு ஆடையை ஈசனுக்கும், பார்வதிக்கும் தராமல் வந்துவிட்டது நியாபகம் வந்தது. இருட்டியும் விட்டதால் கைலாயத்தின் வாசலிலேயே படுக்க முடிவெடுத்தான். அன்று இரவு சிவபெருமான் பார்வதி தேவியிடம் ஒரு முக்கியமான தேவ ரகசியம் பற்றி கூறிக்கொண்டிருந்தார். அது கைலாயத்தின் வாசலில

Hariyum Sivanum Ondru Than | ஹரியும் சிவனும் ஒன்றுதான்

படம்
'ஹரியும் சிவனும் ஒன்றுதான்’ என்கின்றனர் ஆன்மிகப் பெரியோர். வேதவியாசர் எழுதிய பதினெண் புராணங்களும் இந்தத் தத்துவத்தையே வலியுறுத்துகின்றன. ஆனாலும் ஹரி வேறு, ஹரன் வேறு... இவர் பெரியவர், அவர் சிறியவர் என்றெல்லாம் பேதங்கள் பார்த்து வாழ்கிறவர்களும் உண்டு. விஷ்ணுவின் சக்தி சிவனிடமும், சிவனின் சக்தி விஷ்ணுவிடமும் இருப்பதை விளக்கும் மகா சுதர்சனச் சக்கரம் பற்றிய ஒரு புராணக் கதையை இங்கே பார்ப்போம். சுதர்சனச் சக்கரம் என்றதும் நம் நினைவுக்கு வருபவர் ஸ்ரீமந் நாராயணன்தான். தன் நான்கு கரங்களிலும் முறையே சங்கு, சக்கரம், கதை, பத்மம் ஆகியவற்றைத் தாங்கியிருப்பவர் திருமால். தனது சுதர்சனச் சக்கரத்தால் அதர்மத்தை அழித்து, தர்மத்தை ஸ்தாபனம் செய்பவர் அவர். அவரின் திருக்கரத்தில் உள்ள சுதர்சனம், பக்தர்களை தீமைகளில் இருந்து காக்கவல்லது. அந்த சுதர்சனம் தோன்றியது எங்கே? எப்போது? எவ்விதம்? சிவனாரைத் தரிசிக்க, இந்திரன் ஒருமுறை திருக்கயிலாயத்துக்குச் சென்று கொண்டிருந்தான். 'பார்க்கின்ற பொருளெல்லாம் பரம்பொருள்’ என்பதை இந்திரன் உணர்ந்திருக்கிறானா எனச் சோதிக்கத் திருவுளம் கொண்டார் ஈஸ்வரன். மகா ருத்ர சொரூபத்துடன் இ

Ruthratcham aniyum muraiyum, matrum avatrin makimaikkum | ருத்ராட்சம் அணியும் முறையும், மற்றும் அவற்றின் மகிமைகளும்

ருத்ராட்சம் அணியும் முறையும், மற்றும் அவற்றின் மகிமைகளும்.... ருத்ராட்சம் அணிவதாயின் முதலில் உண்மையான ருட்ராட்சத்தை அறிந்து வாங்க வேண்டும். ருத்ராட்சம் ஒரு முகத்தில் இருந்து இருபத்தியொரு முகங்கள் வரை உள்ளன. ஒரு இலந்தைப் பழத்தின் அளவுள்ள ருத்ராட்சம் மத்தியமான தரம், அதன் அளவு கூட கூட அதன் தரம் உயரும், அளவு குறைய குறைய தரம் குறையும். உண்மையான ருத்ராட்சத்தை நீரில் போட்டால் மூழ்கி விடும் போலியானவை மிதக்கும். மேலும் கல்லில் உரைக்கும் போது தங்க நிற கோடுகள் கல்லில் பதியும். இரு செம்பு நாணயங்கள் நடுவில் ருத்ராட்சத்தை வைத்தால், மின் சுழற்சியின் காரணமாக அது சுழலும். இவ்வாறு உண்மையான ருத்ராட்சத்தை சில ஆய்வுகள் மூலம் கண்டறியலாம். தாவர வகைகளில் மின் காந்த சக்தி ஒரு குறிப்பிடும் அளவு உள்ளது ருத்ராட்சத்தில் மட்டும்தான். ருத்ராட்சத்தை அணிவதாயின் சிவப்பு நிற நூலில் அணியவேண்டும்.  அல்லது செம்புக் கம்பியிலோ, தங்கக் கம்பியிலோ, வெள்ளிக் கம்பியிலோ அணியலாம். ஒரு சிவனடியாரிடம் இருந்து ருத்ராட்சத்தை அணியும் வழிமுறைகளை கேட்டு தெரிந்து கொள்வது நல்லது. ஒரு நன்னாளில் நமக்குகந்த ருத்ராட்சத்தை வாங்கி சுத்தமான நீரில்

Arudra Darshan | ஆருத்ரா தரிசனம்

படம்
ஆருத்ரா தரிசனம் பிறப்பே எடுக்காத ( ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு) சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் #திருவாதிரை என்கிறார்களே எப்படி ? தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப் படுகிறது. மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில்,  எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்.  ராமனுக்கு ஜென்ம நட்சத்திரம் - புனர்பூசம்; கிருஷ்ணனுக்கு - ரோகிணி; முருகனுக்கு - விசாகம். இவையாவும் இவர்கள் பிறந்த நட்சத்திரங்கள். ஆனால் பிறப்பே எடுக்காத சிவபெரு மானுக்கு பிறந்த நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே ? பிறவா யாக்கைப் பெற்றோன் பெரியோன் என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம் சிவ பெருமானைக் குறிக்கிறது. சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனதுபற்றி புராணச் செய்திகள் உள்ளன. சேந்தனார் ஓர் விளகுவெட்டி. அவர் சிதம்பரம் அருகேயுள்ள ஓர் ஊரில் வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த சிவபக்தர். தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்துப் பின் தான் உண்டு உணவருந்துவார். ஒரு நாள் அதிகமாக மழைபெய்து விறகுகள் ஈரமாயின அதனால் அன்று அவரால் விறகு விற்க மு

12 Jyotirlinga Temples in Tamil | Lord Shiva Kovil | Spiritual Places in India

படம்
12 ஜோதிரா் லிங்கங்கள் ************************* 1. சோமநாதர் - பிரபாக்ஷேத்திரம், கடற்கரையில் துவாரகை அருகில் (குஜராத் மாநிலம்) அமைந்து உள்ளது. 2. ஸ்ரீ மல்லிகார்ஜுனர் - ஸ்ரீ சைலம் கர்னூல் மாவட்டம் (ஆந்திரப்பிரதேசம்). 3. மகாகாளேஸ்வர் - சிப்ரா நதிக்கரையில் உஜ்ஜயினி அருகில் அமைந்த உள்ளது (இது மத்தியப்பிரதேசத்தில் உள்ளது) 4. ஓங்காரேஸ்வரர் - மோர்டக் இரயில் நிலையம் உஜ்ஜயினி - காண்ட்வ பாதையில் அமைந்து உள்ளது (அதாவது நர்மதா நதிக்கரையில்) 5. வைத்தியநாதர் - பீகார் மாநிலத்தில் அமைந்து உள்ளது. 6. பீமாஷங்கர் - பீமா நதிக்கரையில் நாசிக்கில் இருந்து 120 கி.மீ இல் அமைந்து உள்ளது. (அதாவது மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்து உள்ளது) 7. ராமேஸ்வர் - ராமேஸ்வரம் தமிழ்நாட்டில் அமைந்து உள்ளது. 8. நாகேஸ்வர் - தாருகாவனம் - கோமதி துவாரகையில் இருந்து 15 கி.மீ இல் அமைந்து உள்ளது (அதாவது குஜராத் மாநிலத்தில் ). 9. விஸ்வநாதர் - உத்திரப்பிரதேச மாநிலம் காசியில் அமைந்து உள்ளது. 10. த்ரயம்பகேஸ்வரர் - பிரம்மகிரி அருகில் கோதாவரி உற்பத்தி (அதாவது நாசிக் பஞ்சவடியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது) ஆகும் இடத்தில் அமைந்து உள்ளது. 1

Chidambaram Nataraja Kovil Arthajama Puja | சிதம்பரம் நடராஜர் கோவில் அர்த்தஜாம பூஜை

படம்
சிதம்பரம் நடராஜர் கோவில் அர்த்தஜாம பூஜை (இரவு பூஜை) மிக விசேஷமானது. அனைவரும் பார்க்க வேண்டிய நிகழ்வு. சைவத்தின் தலைநகராக கொண்டாப்படும் சிதம்பரத்தில் அர்த்தஜாமம் மிக தாமதாக அனைத்து சிவாலயங்களிலும் அர்த்தஜாமம் முடிந்த பிறகு இரவு 9 மணிக்கு மேல் நடைப்பெறும். இதனைக் கண்டால் அனைத்து சிவாலயங்களிலும் அர்த்தஜாமம் கண்ட பலனை தரும். அனைத்து கோயில்களிலும் அர்த்தஜாம பூஜை முடிந்ததும் பைரவ மூர்த்திக்கு வழிபாடு நடத்தப்படும். அவருடைய வழிபாட்டுடன் அன்றைய பூஜை முடிந்ததாகக் கருதப்படும். சிதம்பரத்தில் நடராஜர் பள்ளியறை சேர்ந்த பின் பிரம்மசண்டிகேஸ்வரர், பைரவ வழிபாட்டுக்குப் பிறகு, அர்த்தஜாம அழகர் எனப்படும் க்ஷேத்திர பாலகன் பூஜிக்கப்படுகிறார். ஜோதிடன் ஒருவன் பலரது சாபத்தால் மறுபிறவியில் பல்லியாகப் பிறந்தான். அப்படி அவன் பிறந்த இடம் சிதம்பரம். சித்சபையின் கொடுங்கைகளில் வசித்த பல்லிக்கு புண்ணியவசத்தால் சிவ பக்தி உண்டானது, நடராஜப் பெருமானின் திருவருள் கைகூடியது, அழகிய சிவகணமாகும் பேறு கிடைத்தது, கோயிலை இரவில் காக்கும் வேலையும் கிடைக்கப்பெற்றது. அவரே அர்த்தஜாம அழகர். சித்சபையின் ஈசான பாகத்தில் தேவ சபையின் மேற்குச்

History of Lord Kirshna | பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிய சிறந்த தகவல்

படம்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிய சிறந்த தகவல் 1) கிருஷ்ணர் பிறந்தார் *5252 ஆண்டுகளுக்கு முன்பு * 2) *பிறந்த தேதி *: *18 ஜூலை, 3228 பிசி * 3) மாதம்: *ஷ்ரவன் * 4) நாள்: *அஷ்டமி * 5) நட்சத்திரம்: *ரோகிணி * 6) நாள்: *புதன் * 7) நேரம்: *00: 00 ஏஎம் * ஸ்ரீ கிருஷ்ணர் *125 ஆண்டுகள், 08 மாதங்கள் & 07 நாட்கள் வாழ்ந்தார். * 9) *இறந்த தேதி *: *18 பிப்ரவரி 3102BC. * 10) கிருஷ்ணனுக்கு * 89 வயதாக இருந்தபோது *; மெகா போர் * (குருக்ஷேத்திர போர்) * நடந்தது. 11) குருக்ஷேத்ரா * போருக்கு 36 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இறந்தார். 12) குருக்ஷேத்ரா போர் *மிருகசிர சுக்ல ஏகாதசி, கிமு 3139 அன்று தொடங்கியது. அதாவது "டிசம்பர் 8, 3139 பிசி" மற்றும் "டிசம்பர் 25, 3139 பிசி" அன்று முடிந்தது. * 12) டிசம்பர் 21, 3139 பிசி அன்று "மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை" சூரிய கிரகணம் ஏற்பட்டது; ஜெயத்ரத்தின் மரணத்திற்கு காரணம்.* 13) பீஷ்மர் *பிப்ரவரி 2, (உத்தராயணத்தின் முதல் ஏகாதசி), பிசி 3138 இல் இறந்தார். 14) கிருஷ்ணர் இவ்வாறு வழிபடப்படுகிறார்: (அ) ​​கிருஷ்ணா *கன்ஹையா *: *மதுரா * (ஆ) *ஜெகநாத் *:- *ஒ

History of Ashta Kali |அஷ்ட காளிகளின் வரலாறு

படம்
அஷ்ட காளிகளின் வரலாறு (அட்டகாளின் வரலாறு) முதலில் அட்டகாளிகளின் பெயர்களை தெரிந்து கொள்வோம். 1.மாரிமுத்தாரம்மன் என்ற (முத்தாரம்மன்,வேம்புலியம்மன்) 2.உஜ்ஜைனி மாகாளி என்ற (மாகாளி) 3.முப்பிடாதி 4.உலகளந்தாள் என்ற (உலகம்மன்) 5.அரியநாச்சி என்ற (அங்கயற்கன்னி) 6.வடக்குவாச்செல்வி என்ற (செண்பகவல்லி,செல்லியம்மன்) 7.சந்தனமாரி என்ற(சடைமாரி,ஆகாசமாரி) 8.காந்தாரி என்ற (படைவீட்டம்மன்) வரலாறு: அசுரர் குலத்துபெண் தானாவதி தனக்கொரு ஆண்வாரிசு வேண்டும் என்று பிரம்மனை நோக்கித்தவம் இருந்தாள். தானாவதியின் கடும் தவத்தினை கண்ட பிரம்மன் அவள் முன்தோன்றி, தானாவதி கேட்ட வரத்தைக் கொடுத்தார். வரத்தின் பயனாக தானாவதிக்கு மகனாக தானாசுரன் பிறந்தான். அவன் எருமைத் தலையுடன் இருந்ததால் மகிஷாசுரன் என அழைக்கப்பட்டான். வேதங்களையும், அனைத்து கலைகளையும் கற்றுணர்ந்த மகிஷாசுரன், சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தான். மகிஷாசுரனின் தவத்தைக்கண்ட சிவபெருமான் அவன் கேட்ட வரங்களையெல்லாம் கொடுத்தார். வரங்களைப்பெற்ற மகிஷாசுரன் ஊர்வன, பறப்பன உள்ளிட்ட எந்த இனத்தாலும் எனக்கு மரணம் வரக்கூடாது. பெண் வயிற்றில் பிறக்காத பெண்ணால் மட்டுமே எனக்கு மரணம் நேர

sivan perumal 64 vadivangal | சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்கள்

படம்
சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்கள்: *1. இலிங்க மூர்த்தி.* *2. இலிங்கோத்பவர் மூர்த்தி.* *3. முகலிங்கம் மூர்த்தி.* *4. சதாசிவமூர்த்தி.* *5. மகாசதாசிவர் மூர்த்தி.* *6. உமா மகேஸ்வரர் மூர்த்தி.* *7. சுகாசனர் மூர்த்தி.* *8. உமேச மூர்த்தி.* *9. சோமாஸ்கந்தர் மூர்த்தி.* *10. சந்திரசேகரர் மூர்த்தி.* *11. இடபாரூடர் மூர்த்தி.* *12. இடபாந்திகர் மூர்த்தி.* *13. புஜங்கலளித மூர்த்தி.* *14. புஜங்கத்திராச மூர்த்தி.* *15. சந்தியா தாண்டவ மூர்த்தி.* *16. சதா நிருத்த மூர்த்தி.* *17. சண்ட தாண்டவ மூர்த்தி.* *18. கங்காதர மூர்த்தி.* *19. கங்கா விசர்ச்சன மூர்த்தி.* *20. திரிபுராந்தக மூர்த்தி.* *21. கல்யாண சுந்தர மூர்த்தி.* *22. அர்த்த நாரீஸ்வரர் மூர்த்தி.* *23. கஜயுக்த மூர்த்தி.* *24. சுவரா பக்ன மூர்த்தி.* *25. சார்த்துலஹர மூர்த்தி .* *26. கிராத மூர்த்தி.* *27. கங்காள மூர்த்தி .* *28. கேசவமூர்த்தி.* *29. பிட்சாடன மூர்த்தி.* *30. சிம்மக்ன மூர்த்தி.* *31. சண்டேச அனுக்ர மூர்த்தி.* *32. தெட்சணா மூர்த்தி.* *33. யோக தெட்சிணாமூர்த்தி.* *34. வீணாதர தெட்சிணாமூர்த்தி.* *35. காலாந்தக மூர்த்தி.* *36. காமதகன மூர்த்தி.*

Tamilnadu sivanukkuriya perumai mikka sthalam | தமிழ்நாட்டில் சிவனுக்குரிய பெருமை மிக்க ஸ்தலம்

படம்
தமிழ்நாட்டில் சிவனுக்குரிய பெருமை மிக்க ஸ்தலங்களின் பெருமைகள்...! ராஜ கோபுரத்தை விட மூலவருக்கு உயர்ந்த விமானம் உள்ள இடங்கள். 1,தஞ்சை – பிரகதீஸ்வரர் 2,கங்கைகொண்டசோழபுரம் – பிரகதீஸ்வரர் 3,தாராசுரம் – ஐராவதேஸ்வரர் 4,திருபுவனம் – கம்பேஸ்வரர் சிவனுக்குரிய விஷேச ஸ்தலங்கள். 1, திருவேள்விக்குடி – கௌதுகாபந்தன க்ஷேத்ரம் 2, திருமங்கலகுடி – பஞ்சமங்கள க்ஷேத்ரம் 3, திருவையாறு – பஞ்ச நந்தி க்ஷேத்ரம் 4, திருவிடைமருதூர் – பஞ்சலிங்க க்ஷேத்ரம் 5, திருநீலக்குடி – பஞ்சவில்வாரண்ய க்ஷேத்ரம் 6, திருவிற்கோலம் – நைமிசாரண்ய க்ஷேத்ரம் 7, திருநெல்லிக்கா – பஞ்சாட்சரபுரம் 8, காஞ்சி – சத்தியவிரத க்ஷேத்ரம் 9, திருவல்லம் – வில்வாரண்யம் 10, திருகண்டியூர் – ஆதிவில்வாரண்யம் சிவ பூஜைக்கு சிறந்த ஸ்தலங்கள். 1, திருக்குற்றாலம் – திருவனந்தல் பூஜை 2, இராமேஸ்வரம் – காலை சந்தி பூஜை 3, திருவானைக்கா – உச்சிகால பூஜை 4, திருவாரூர் – சாயரக்ஷை பூஜை 5, மதுரை – இராக்கால பூஜை 6, சிதம்பரம் – அர்த்தஜாம பூஜை காசிக்கு சமமான ஸ்தலங்கள். 1, திருவெண்காடு. 2, திருவையாறு. 3, மயிலாடுதறை. 4, திருவிடைமருதூர். 5, திருச்சாய்காடு. 6, ஸ்ரீவாஞ்சியம். 7, வி

Secrets of life told by the Siddhas | சித்தர்கள் கூறும் வாழ்வியல் இரகசியங்கள்

படம்
சித்தர்கள் கூறும் வாழ்வியல் இரகசியங்கள்..! 1) படுக்கையில் இருந்து எழும் பொழுது (ஆண்கள் )வலது கால் பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும் 2) பெண்கள் இடது கால் பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும் 3) விருப்பம் இருந்தால் பூமா தேவியை வணங்கலாம் 4) காலையில் எழுந்தவுடன் நம்முடைய இரு கைகளையும் உரசி கண்களில் ஒற்றி கொள்ளவேண்டும் . 5)கண்களை பற்றி நீங்கள் அறிய படவேண்டிய ரகசியம் . 6) கண்கள் மனதின் வாசல் ,நம்முடைய எண்ணம் கண்கள் வழியாக வெளிப்படும் ,கண்கள் நெருப்பை தரும் சக்தியுடையவை இதை தான் எரிச்சல் என்பார்கள் . கண் திருஷ்டி என்பதும் இதுவே ,திருஷ்டி என்றால் தமிழில் பார்வை என்று பொருள் . 7) நாம் உறங்கும் பொழுது மனம் ,எண்ணம் அமைதியடையும் இது தான் இயற்கை அப்படி இருக்கும் பொழுது நம்முடைய நெருப்பு சக்தி கண்கள் வழியாக வெளிய செல்லாது . 8) உறங்கி எழுந்தவுடன் கைகளை உரசும் பொழுது சுடு உண்டாகி கண்களை தொடும்பொழுது அவை கண்களின் நெருப்பை கிரகித்து நமக்குளே வைக்கும் இந்த கண் நெருப்பு நமக்கு மிகவும் முக்கியம் . 9) இந்த நெருப்பு செரிமான சக்தியை நமக்கு தரும் . உணவுகளை பார்த்து கொண்டே சாப்பிடும் பொழுது கண்கள் செரிமா