Showing posts with label Trek. Show all posts
Showing posts with label Trek. Show all posts

Agathiyar Malai | Pothigai Malai | Agasthyarkoodam | அகஸ்தியர் மலைய Part 1

அகஸ்தியர் மலையில் தான் தாமிரபரணி, நெய்யாறு, கரமணை போன்ற நதிகள் உற்பத்தியாகின்றன. சுமார் 2,500 அரியவகை மூலிகைச் செடிகள், மரங்கள் நிறைந்த யுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட்ட பூகோளப் பகுதி இது. அகஸ்தியர் இந்த மலையில் தவம் இருந்ததாக புராணம் சொல்கிறது. தென்னிந்தியாவின் அபாயகரமான மிகக் கடுமையான ட்ரெக்கிங் பாதைகளில் இதுவும் ஒன்று. சுமார் 6150 உயரம் ஏறி இறங்கினால், 56 கிலோமீட்டர் தொலைவு. பாதைகள் அபாயகரமானவை, செங்குத்தானவை!

அகஸ்தியர் மலை நீங்கள் நினைத்தவுடனே அகஸ்தியர் சிகரத்துக்குச் சென்றுவிட முடியாது. ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை அகஸ்தியர் மலைக்குச் செல்ல அனுமதி அளிக்கிறது கேரள வனத்துறை. அகஸ்தியர் மலையில் ட்ரெக்கிங் செல்வதற்கு நாள் ஒன்றுக்கு 100 பேருக்கு மட்டுமே அனுமதி. தலைக்கு 1100 ரூபாய் கட்டணம். சீஸன் இல்லாத நாள்களில் ஐந்து பேர்கொண்ட குழுவுக்கு 7,500 ரூபாய் கட்டணம். மலை ஏற ஆதார் அட்டை போன்ற ஏதேனும் ஓர் அடையாள அட்டை அவசியம்.

Click here how to book agathiyar malai Trek Booing.

அகஸ்தியர் மலை திருவனந்தபுரத்திலிருந்து போனக்காடு செக்போஸ்ட், 60 கி.மீ தொலைவில் உள்ளது. உணவை பார்சல் வாங்கிக்கொள்ளுங்கள். செல்லும் பாதை எங்கும் அருவிகள் உள்ளதால், ஆனந்தக் குளியல் போட்டுக்கொள்ளலாம். மதுபாட்டில்கள், சிகரெட் பாக்கெட்டுகள் இருந்தால் பறிமுதல் செய்துவிடுவார்கள். கடுமையான மலைப்பாதை என்பதால், 14 வயது குறைந்தவர்களுக்கு அனுமதியில்லை.

Video link are available below. please see below.

அகஸ்தியர் மலை செல்வது எப்படி?
பெண்களுக்கு அனுமதியில்லை. உங்களை அறியாமலேயே பயமும் தொற்றிக்கொள்ளும். பாம்புகள், பூச்சிகள் ஏராளம். அட்டைப்பூச்சி அபாயமும் உள்ளது. அகஸ்தியர் சிகரம்தான் ஆனைமுடிக்கு அடுத்தபடியாக தென்னிந்தியாவின் உயர்ந்த சிகரம். இந்த மலையின் கிழக்குப் பகுதியில் உற்பத்தியாகித்தான், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை வளங்கொழிக்கச் செய்கிறது பொருநை நதி.

அகஸ்தியர் மலை அருவிகள்
நீண்ட தொலைவு ட்ரெக்கிங் பயணம் என்பதால், குழுவைவிட்டு பிரிந்துவிடக் கூடாது. சத்தம் எழுப்பாமல் வரிசையாகக் நடந்து செல்ல வேண்டும். முதல் நாள் 12 கிலோமீட்டர் தொலைவு நடந்து அதிரி மலையில் உள்ள கேம்ப்பில் தங்கலாம். திகில் படங்களில் வரும் பங்களா போன்று பழைமையான கட்டடம் ஒன்று அங்கே உள்ளது. இடிந்து சிதிலமடைந்து கிடக்கும் அந்தக் கட்டடத்தில் தங்க முடியாது. அதன் அருகில் அமைக்கப்பட்டுள்ள குடில்களில் தங்கிக்கொள்ளலாம். உங்களுடன் வனத்துறை ஊழியர் ஒருவரும் வழிகாட்டியும் வருவார்கள். உங்களுக்குத் தேவையான உணவுகளை அவர்களே சமைத்துத் தருவார்கள். வயிற்றுக்கு பங்கம் ஏற்படுத்தாத வகையில் கஞ்சி, பயறு என கேரள உணவு கிடைக்கும். நடந்த அலுப்புக்கு உணவு அமிர்தமாக இருக்கும்.

அகஸ்தியர் மலை ட்ரெக்கிங்
வனத்துக்குள் எப்போது வேண்டுமானாலும் சீதோஷ்ண நிலை மாறலாம். அதனால், நீங்கள் நினைத்த மாதிரி ட்ரெக்கிங்கை குறிப்பிட்ட நாளுக்குள் முடித்துக்கொள்ள முடியாத சூழல் ஏற்படலாம். மழை பெய்தால் ட்ரெக்கிங்கை தள்ளிவைத்துவிடுவார்கள். மூன்று நாள்கள் திட்டமிட்டுச் சென்றால், ஒரு வாரம் கழித்தே அகஸ்தியர் மலையை அடைந்தவர்களும் உண்டு. அகஸ்தியர் மலையை நோக்கிச் செல்கையில் செங்குத்தான பாதைகளில் கயிற்றைப் பிடித்து ஏறி செல்ல வேண்டும். சிலர், `திரும்பிப் போய்விடலாம்' என்றுகூட சொல்லாம். உறுதியுள்ளவர்கள் மட்டுமே அகஸ்தியர் மலையின் உச்சியை அடைய முடியும். எங்கும் பனிமூட்டமாகவே இருக்கும். வனத்துறையினர் ஆங்காங்கே மஞ்சள் வண்ணத்தில் பாறைகளில் அம்புகுறி வரைந்துள்ளனர். அவைதான் உங்களுக்கு வழிகாட்டி.

அனுபவம் வாய்ந்தவர்தான் குழுவின் தலைவராக இருப்பார். ஓநாய் கூட்டம் எப்படி இயங்குகிறதோ, அப்படிதான் ட்ரெக்கிங் குழுவும் இயங்க வேண்டும். குழுவின் முன்னால் யார் நடக்க வேண்டும், பின்னால் யார் வர வேண்டும் போன்ற பாதுகாப்புத் தகவல்களை குழுத் தலைவர் வழங்குவார். வேகமாக நடப்பவர்கள், மெதுவாக நடப்பவர்கள் என அனைவரையும் கணித்து அதற்கேற்றார்போல் குழு இயங்க வேண்டும். உயரம் செல்லச் செல்ல காற்றின் வேகம் அதிகரிக்கும்போது, சர்வஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கயிறுகளைப் பயன்படுத்திதான் பாறைகளில் செங்குத்தாக ஏறவேண்டியது இருக்கும். அகஸ்தியர் மலை ட்ரெக்கிங்கின் மிகவும் த்ரில்லிங்கான பகுதி இது.

வழுக்குப்பாறையிலிருந்து அரை மணி நேரம் நடந்தால், உங்களை குறுமுனி வரவேற்பார். உடன் சிவபெருமானும். `தென்னிந்தியாவின் உயரமான சிகரங்களில் ஒன்றின் மீது நின்றுகொண்டிருக்கிறோம்' என்ற பெருமை உங்களுக்குள் எழும்.

Nilgiri Biosphere, சுந்தரவனக் காடுகள்போல யுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது அவசியம். சென்னையிலிருந்து செல்பவர்கள் திருவனந்தபுரத்துக்கு ரயிலில் சென்று அங்கிருந்து போனகாடு செக்போஸ்டுக்கு வாகனம் எடுத்துக்கொள்ளலாம். வாகனத்தில் செல்பவர்கள் தென்காசி வழியாக நெடுமங்காடு சென்று அங்கிருந்து போனகாடு செல்ல முடியும். 10 பேர் அடங்கிய குழுவாக மலையேற்றம் செய்வது உகந்தது. மருந்துகள், மாத்திரைகள் கொண்டுசெல்ல மறந்துவிட வேண்டாம்.

மிகவும் ரிஸ்க் நிறைந்த வனத்துக்குள் செல்கிறீர்கள்... பாதுகாப்பு முக்கியம்.




How to go Agathyar Malai | Pothigai Malai | Agasthyarkoodam | அகஸ்தியர் மலை Part 2

நெல்லை மாவட்டம் பாபநாசம் மலைக்கு மேலே முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் பொதிகை மலையின் உச்சியில் 6150 அடி உயரத்தில் தவமிருக்கும் அகத்தியரை வழிபட முண்டந்துறை, பாபநாசம், பாணதீர்த்தம் அருவியின் மேற்பகுதி வழியாக இஞ்சிக்குழி, கண்ணிகட்டி, பூங்குளம் வழியாக பக்தர்கள் சென்று வந்தனர். 

இந்த வழித்தடத்தில் பக்தர்கள் சென்று வர கடந்த 1998ம் ஆண்டு தமிழக வனத்துறை அனுமதி மறுத்து விட்டது. சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் 1999ல் பொதிகை மலை செல்ல அனுமதி வழங்கியது. இந்நிலையில், 2009ல் தமிழக வனத் துறை தமிழகம் வழியாக பொதிகை மலைக்குச் செல்ல நிரந்தரமாக அனுமதி மறுத்ததுடன், கேரளா வழியாக அகத்திய மலைக்கு செல்ல அறிவுறுத்தியது. 

Click Here  How to book trekking to go agathiyar malai

இதையடுத்து கேரள வனத்துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள வனப்பகுதி வழியாக சூழலியல் சுற்றுலாவாக ஜனவரி முதல் ஏப்ரல் வரை அகத்தியர் மலைக்கு பக்தர்கள் சென்று வர அனுமதி வழங்குகின்றனர். இதற்காக கேரள மாநிலம் திருவனந்தபுரம் வட்டியூர் காவு பிடிபி நகரிலுள்ள வனத்துறை அலுவலகத்தில் அகஸ்தியர் கூடம் செல்வதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.

திருவனந்தபுரத்தில் இருந்து நெடுமங்காடு - விதுரா - போனகாடு பஸ்சில் பயணிக்கலாம். காலை 6 மணி முதல் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு பஸ் இயக்கப்படுகிறது. இல்லாவிடில் நெடுமங்காடு சென்று அங்கிருந்தும் போனக்காடு செல்லலாம். பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூர பயணத்தில் வன இலாகா அலுவலகத்தை அடையலாம். 

போனக்காட்டிலுள்ள வனத்துறை சோதனை மையத்தில் அனுமதிச் சீட்டு பெற்று, அங்கிருந்து வாகனம் மூலம் சுமார் 10 கி.மீ. தொலைவு சென்றால் போனக்காடு பிக்கெட் ஸ்டேசன் என்ற இடம் வரும். தனியாக யாரையும் இங்கு மலையேற அனுமதிப்பதில்லை. ஒவ்வொரு குழுவாகவே அனுமதி வழங்கப்படுகிறது. இதற்காக வனத்துறையினர் ஏற்பாடு செய்துள்ள வழிகாட்டியுடன் மூன்று நாள் பொதிகை மலை நடைப்பயணம் தொடங்கும்.

முதல் அரைமணி நேரப்பயணத்தில் முதலில் விநாயகர் கோயிலை அடையலாம். அங்கிருந்து சுமார் ஒரு மணி நேர பயணத்தில் கரமனையாறு என்ற இடத்தை அடையலாம். பகலையே இரவு போல் காட்டும் அடர்ந்த வனப்பகுதி இங்கிருந்துதான் தொடங்குகிறது. இந்த வழித்தடத்தில் சுமார் 6 மணி நேரம் நடந்து சென்றால் அதிருமலை எஸ்டேட் என்ற இடம் நம்மை வரவேற்கும்.


அங்கு கேரள வனத்துறையினர் பக்தர்கள் தங்குவதற்காகக் கட்டியுள்ள அதிருமலை கேம்ப் ஷெட்டில் முதல் நாள் இரவு தங்க வைக்கப்படுவர். மறுநாள் காலை குறு முனிவரின் வழிபாட்டுக்கு கொண்டு செல்லும் பூஜைப் பொருள்களை எடுத்துக் கொண்டு, அதிருமலையின் காவல் தெய்வத்தை வணங்கி விட்டு மீண்டும் நடைபயணம் தொடங்குகிறது. சுமார் 1 மணி நேர நடைப்பயணத்தில் பொதிகை மலையின் அடிவாரத்தை அடையலாம். அங்கு சிறிது நேரம் ஓய்வு, அங்குள்ள தென் பொதிகை மானசரோவரில் சிறு குளியலை முடித்துவிட்டு மீண்டும் நடைபயணம் தொடர்ந்தால் 15 நிமிடத்தில் தமிழக வனப்பகுதி எல்லையான சங்கு முத்திரை என்ற இடம் வரவேற்கும். 

இது கடல்மட்டத்தில் இருந்து சுமார் 4,000 அடி உயரம் கொண்டது. சங்கு போன்ற அமைப்பை உடையதால் இப்பெயர். கேரளத்தினர் இப் பகுதியை பொங்காலைப்பாறை என்று கூறுகின்றனர். (கேரளத்தவர்கள் இங்கு வந்து பொங்கலிட்டு, அகத்தியரை வழிபடுவதால் இந்த இடம் பொங்காலைப்பாறை என்றழைக்கப்படுகிறது.

இச்சங்கு முத்திரை வனப்பகுதியின் மற்றொரு புறம் உள்ள கிடுகிடு பள்ளத்தாக்கில் வற்றாத ஜீவநதியான பொருநை என்று அழைக்கப்படும் தாமிரபரணி உற்பத்தியாகும் ‘பூங்குளம்’ என்ற சுனை தெரியும். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் என 4 மாவட்ட மக்களின் குடிநீர், விவசாயத்திற்கு ஜீவநாடியாக விளங்கும் அகத்தியர் தந்த தாமிரபரணியின் பிறப்பிடத்தை கண் குளிர தரிசித்து வணங்கி விட்டு பொதிகை மலை பயணத்தை தொடர வேண்டும். 

செங்குத்தான பகுதியில் மலையில் கட்டப்பட்டுள்ள கயிறு மற்றும் இரும்புக் கயிறுகளை (ரோப்) பிடித்துக் கொண்டு (ஒருபுறம் கால் இடறினால் கிடுகிடு பள்ளத்தில் விழ நேரிடும்) கவனத்துடன் ஏறிச் சென்றால் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 6350 அடி உயரமுடைய பொதிகை மலை சிகரத்தை அடையலாம்.



அங்கு அகத்தியரைப் போலவே குட்டையான மரங்களைக் கொண்ட சிறு சோலையில் குறுமுனிவர் அகத்தியரின் ஏகாந்த சிலையை தரிசிக்கும்போது, சிரமப்பட்டு மலை ஏறிவந்த எண்ணங்கள் எல்லாம் மறந்து, இந்த தரிசனத்துக்குத்தானா இப்பிறவி எடுத்தோம் என்ற பரவச நிலை பக்தர்களுக்கு ஏற்படும்.

ஆனைமலைத் தொடரின் ஒரு பகுதியாகவும், மகேந்திரகிரி மலை, முண்டந்துறை வனப்பகுதியின் தலையைப் போலவும் விளங்கும் பொதிகை மலை உச்சியில் திடீர், திடீரென வெயிலும் சில நேரங்களில் உடலை நடுங்கச் செய்யும் பலத்த குளிர்காற்றும், சில நேரம் மழையும், சாரலும் பெய்யும். மனம் நிறைந்த ஆனந்த அனுபவத்துடன் அகத்தியருக்கு அபிஷேக, ஆராதனை செய்து வழிபாடு செய்த பின் மீண்டும் பயணம் தொடங்குகிறது. 

மலை ஏற்றத்தைப் போலவே மிகவும் கவனமாக கீழே இறங்கத் தொடங்கி, மூன்று மணி நேரம் நடந்தால் மீண்டும் அதிருமலை கேம்ப் ஷெட்டை அடையலாம். அங்கு உணவருந்தி விட்டு, சிறிது நேர ஓய்வுக்குப் பின் இரவு 7 மணிக்கு கூட்டுப் பிரார்த்தனை நடைபெறும். அன்று இரவும் அங்கேயே தங்கி விட்டு, மூன்றாம் நாள் காலையில் அதிருமலை காவல் தெய்வத்தையும், பொதிகை சிகரத்தையும் வணங்கிவிட்டு சுமார் 5 மணி நேரம் நடந்தால் போனக்காடு பிக்கெட் ஸ்டேஷனில் பொதிகை மலை பயணம் நிறைவு பெறும்.

இந்த மூன்று நாள் பயணத்தின்போதும் சுத்தமான காற்று, மூலிகை கலந்த நீர், இவையெல்லாம் விட செல்போன் தொந்தரவே இல்லாமல் பார்க்கும் இடங்கள் எல்லாம் பசுமை நிறைந்து மனதைக் கவரும். உடலும், உள்ளமும் புத்துணர்வு பெறும். ஒவ்வொரு ஆண்டும் தமிழ் முனியை தரிசிக்க ஜனவரி முதல் ஏப்ரல் வரை அனுமதி வழங்கப்படுகிறது. ஆன்லைனிலும் இதற்கான அனுமதியைபெறலாம். இந்த ஆண்டிற்கான டூரில் பொதிகை மலைசெல்ல விரும்புகிறவர்கள் 1100 செலுத்தி கேரள வனத்துறையில் பதிவு செய்யலாம் என கேரள வனத்துறை அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான முன்பதிவு வரும் 8ம் தேதிகாலை 11 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக உள்ள இணைய தளத்திலோ அல்லது வட்டியூர் காவுவனத்துறை அலுவலகத்திலோ பதிவு செய்து சென்று வரலாம். 10 நபர்கள் அடங்கிய குழுவாகவும் சென்றுவர அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. பதிவு செய்பவர்கள் கண்டிப்பாக போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். இதே அடையாள அட்டையைத்தான் பயணத்தின்போதும் வைத்திருக்க வேண்டும். அற்புதங்கள் நிறைந்த, அரிய பொக்கிஷங்களை காணக்கிடைக்கும் ஒரு புதிய பயண அனுபவத்தை பெற விரும்புகிறீர்கள் என்றால் நீங்கள் பொதிகைக்கு கிளம்பி விடலாம்.

உயிரினங்களின் வகைகள்

6 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்டது, பொதிகை மலை. இதில் அகத்திய மலையின் உயரம் 1868 மீட்டர் (சுமார் 6150 அடி). நீரிலும், நிலத்திலும் வாழும் உயிரினங்கள் தமிழ்நாட்டில் 76 உள்ளன. ஆனால் பொதிகை மலையில் 121 உள்ளன. 27 வகை மீன், 9 வகை தவளைகள் பொதிகையில் மட்டுமே காணப்படுகின்றன. 177 வகை ஊர்வனவற்றில் 157 வகைகள் பொதிகை மலையில் மட்டும் உள்ளன. அதிலும் 39 வகை இங்கு மட்டுமே வாழ்கின்றன. கரும்பு, சோளம், கம்பு, ராகி போன்ற உணவு தானியங்கள் 260ல் 60க்கு மூலவித்து இங்குள்ளது. நாமறிந்த மீன் வகை 165. ஆனால் பொதிகையில் வசிப்பதோ 218.

நுண்ணுயிர் முதல் மந்தி வரை

புவிப்பரப்பில் முதலில் தோன்றிய நுண்ணுயிர் முதல் மனிதனுக்கு முந்தைய மந்தி வரை பொதிகையில் உள்ளன. இந்த பிரபஞ்சத்தில் 1300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த பெருவெடிப்பில் விழுந்த சிறு துண்டாகிய பூமி 500 கோடி வருடங்களுக்கு முன் குளிர்ச்சியடைந்து பூமியானது. அதில் 300 கோடி வருடங்களுக்கு முன்பு உயிர்த்தோற்றம் உண்டானது என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். பூமி குளிர்ந்து ஒருவித வடிவத்துக்கு வந்து உயிர்கள் உருவான காலத்திலேயே பொதிகை மலையும் தோன்றியிருக்கலாம்.

ரகசிய மூலிகைகள்

பசிக்கவே செய்யாத மூலிகை, நீண்ட ஆயுள் தரும் மூலிகைகள் என பல ரகசிய மூலிகைகள் இங்கு ஏராளமாக வளர்ந்து கிடக்கின்றன. இந்த மூலிகைகளைக் கொண்டுதான் அகஸ்தியர் கடுமையான நோய்களுக்கும் மருந்து கண்டுபிடித்தார் என்று கூறப்படுகிறது.

மூலிகைகளின் மூல ஸ்தானம்

பொதிகை மலைதான், மூலிகைகளின் மூல ஸ்தானம். மூட்டு வலியை போக்கும் பளிங்கு காய், தாமிரத்தை பஸ்பமாக்கும் கல் தாமரை, விஷம் முறிக்கும் கீரிக்கிழங்கு, சர்க்கரை நோயை போக்கும் பொன்கொரண்டி என பல்வேறு மூலிகைகள் பொதிகையில் உள்ளன. 7 வகை பனைகள், 10 ஆண்டுகளில் காய்த்து, காயில் உள்ள விதையால் கர்ப்பப்பை புற்றை அகற்றும் கல்வாழை, பட்டையால் பாம்பின் நஞ்சை இறக்கும் ஞாறவாழை உள்ளிட்ட 7 வகை வாழைகள் இங்கு வளர்கின்றன.

கொழித்துக் கிடக்கும் குலவு, புலவு

உலகில் உள்ள பூக்கும் தாவரங்கள் 5640ல் 2654 வகை இங்கு உள்ளன. 600க்கு மேற்பட்ட மூலிகைகள் இங்கு மட்டுமே வளர்கின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள். வார்னிஷ் தயாரிக்க உதவும் குலவு, விஷக்கடி வீரியத்தை போக்கும் புலவு, சிறுநீர்ப்பை கல்லடைப்பை நீக்கும் சர்க்கரை வேம்பு மற்றும் செருப்படை போன்ற மூலிகைகள் இங்கு கொழித்துக் கிடப்பதாக தகவல்கள் கூறுகின்றன.




பொதிகைமலை...
இந்தப் பெயரைக் கேட்டவுடனே நம் நினைவில் வருவது தாமிரபரணியும், தமிழும், அதைத் தோற்றுவித்த அகத்தியரும் தான்.

How to go Sathuragiri Trek

Hi Followers,


How to go Sathuragiri Hills from Bangalore.


From Bangalore go directly to Madurai. 436 KM approximately 8 to 9 Hrs


Check-in at Madurai Bus Station, the direct bus is available for Sathuragiri Hills. for pournami and amavasai bus will be available frequently.


If there is no direct bus from madurai, then follow below bus stop/route.


From Madurai go to Srivilliputhur/Krishnan Kovil bus stop. 82 KM approximately 2 hrs.


From srivilliputhur to vathirairuppu (Watrap, Tamil Nadu) 20 KM - 26 Min


From Vathirairuppu to Thaniparai 8 KM - 16 Min


From Thaniparai to Sathuragiri Hill starting Point to walk.


Map Location:


Please share your comments, if you have any query or doubt.

How to go Parvathamalai Temple | Reach Parvathamalai from Thiruvanamalai


Today, I'm going to share my experience. How to reach Parvathamalai Temple from Bangalore Location.


First, We got the Thiruvanamalai bus from Bangalore. We reach Thiruvanamalai early morning. So no Direct bus @ that time.


Rarely Government/Private bus are available for parvathamalai. Mostly on Pournami/Amavasai day buses are available.


After 6 Am onwards Parvathamalai Bus may be available.


Went to the Bus stand inquiry room for the direct Parvathamalai bus. He told now no direct buses were available. Get into the Vellore bus and get off polur bus stand. From Polur bus stand you will get the Parvathamalai bus.


So Went Polur Bus Stand, there also no bus @ that time. Waiting nearly 10 to 15 min. Finally one Private bus came from Chengam via Parvathamalai Hills (thenmathimangalam bus stop).


Started Parvathamalai journey, Only by walk need to reach hills no others way like by bike,car etc.


Fully Reserved Forest area. No Proper Light. Mobile torch or use Torch light.

For More Information. Please ping me in the comments.:)





Parvathamalai Hills Temple


How to reach Tirukalukundram Temple

Hi All,

Today I'm going to share my experience, and how I reach Tirukalukundaram temple from Bangalore.

Tirukalukundaram Temple near to Chengalpattu.

Early morning started from Bangalore (St.John Bus Stop). Direct Bus from Bangalore to Vellore nearly it take more than 4 hrs. From Vellore, got direct bus to reach Tirukalukundaram Temple via Kanchipuram, but it will take more than 3 hrs.

Temple Open after 4 :15 PM only.

In mountain temple open after 5 PM only.

No Direct Train to reach Chengalpattu from bangalore. So I choose to travel from bus.

Bus Travel Bus Fare
Bangalore to Vellore 200
Vellore to Thirukalukundaram 100
Thirukalukundaram to Chengalpattu 13
Chengalpattu to Kanchipuram 25
Kanchipuram to Bangalore 265

Tirukalukundarm Temple Maps Direction from Bangalore

Temple is famous for Eagel, Sangu and Girivalam.

Every day 2 eagle will come to mountain and eat food.

Sangu will birth 12 yrs once in sangu theertham

kanni rasi pariharam sthalam.

Nearest people like (chennai, chengalpattu, kanchipuram) can go Girivalam every pournami (Full Moon Day). No Need to go Thiruvanamalai for girivalam on Full moon day. It will take more than 4 to 5 hrs to travel from chennai.

For more information about Temple, ping me in comment here




Tirukalukundram Mountain Temple





Tirukalukundram Gopuram Top View





Please type comment you feedback and for more information.

How to reach Chennimalai Murugan Temple - Erode

Hi All,

     Today i'm going to share my experience, how to reach Erode Chennimalai Murugan Temple.

I started from Bangalore (St.John Bus Stop) to Salem.  From Salem to Erode, Erode to Sathyamangalam. then Sathyamangalam to Bannari Amman Temple.

After Bannari Amman Temple went Chennimalai Murugan Temple.

To see chennimalai murugan, need to go through by step more than 1220 or by vehicle.

Bus TravelBus Fare
Bangalore To Salem196
Salem New bus stand to Old bus stand6
Salem to Erode43
Erode to Sathyamangalam37
Sathyamangalam to Bannari Amman10
Bannari Amman to Sathyamangalam10
Sathyamangalam to Chithode32
Chithode to Perundurai13
Perundurai to Chennimalai11
Chennaimalai to Erode17
Erode to Salem43
Salem To Bangalore225


If any query, Pls type in comments box. 

Featured Post

Agasthiyar Malai Trek | Pothigai Malai Trek | Agathiyarkoodam Off Season Package | Trek Booking

Hi All, Today I'm going to share about AgasthyaMalai Trek Booking. Read all the instructions carefully before going to book. Agasthyarko...