Drona received his thumb as a gift from Ekalaiva | துரோணர் ஏகலைவனிடம் கட்டைவிரலை குரு தட்சணையாக பெற்றதில்


#துரோணர் ஏகலைவனிடம் கட்டைவிரலை குரு தட்சணையாக பெற்றதில்- கிருஷ்ணரின் பங்கு பற்றிய பதிவு.


ஏகலைவன் துரோணரையும் துரோணர் ஏகலைவனையும் காப்பாற்றி கொண்டதில் , பகவான் கிருஷ்ணரின் செயல் பின்னணியில் உள்ளது. அதை பற்றி தெரிந்து கொள்வோமா!. உண்மையில் நடந்தது என்னவெனில், ஏகலைவனிடம் இருந்து குருதட்சணையாக கட்டைவிரலை துரோணர் பெற்றது. துரோணரின் நிலை பரிதாபத்திற்குரிய ஒன்றாகும்.

ஆம், துரோணர் அரச குடும்பத்து ஆசிரியர், எல்லா விதத்திலும் அரசனுக்கு கட்டுபட்டவர், அவனை மீறி அவர் ஏதும் செய்துவிட முடியாது. சுருக்கமாக சொன்னால் அரச குடும்பத்து அடிமைகளில் அவரும் ஒருவர். அந்நாளில் ராஜவம்சத்திற்கும் மற்றும் சத்திரிய வம்சத்திற்கும் மட்டுமே சில பயிற்சிகள் கற்றுகொடுக்கபடும்.

எல்லோரும் எல்லாம் பயின்றால், அரசுக்கு எதிரான சக்திகள் தலையெடுக்கும் எனும் தந்திரம் அது. அவ்வகையில் பாண்டவரும், கவுரவரும் பயில்கின்றார்கள், தேரோட்டி மகனான கர்ணனும் பரசுராமரிடம் சத்திரியர் என பொய்யுரைத்து வில்வித்தை பயில்கிறான்.

ஏகலைவனின் குலத்தொழில் வேட்டையாடுதல்.

ஏகலைவன் குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக வேட்டையாடுவதால், ஏகலைவன் இயற்கையிலேயே ,இலக்கை நோக்கி துல்லியமாக அம்பு எய்யும் திறனையும், துரோணர் தனது சீடர்களுக்கு பயிற்சி அளிக்கும்போது, ஏகலைவன் மனதால் துரோணரிடமிருந்து பெற்ற ஞானமும், ஒருங்கே ஒன்று சேர மிகச் சிறந்த வில்லாளனாக உருவெடுத்திருப்பான்.

பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் அரங்கேற்றம் முடிந்தபின்புதான், ஏகலைவன் என்றொருவன் இருப்பதும், அவன் வில்வித்தையில் அர்ஜூனனையும் மிஞ்சி நிற்பதும் அறியபடுகின்றது. அரசவாரிசுகளையும் மீறி ஒரு வேட்டுவன் வித்தையில் மிஞ்சி நிற்பது , அரசகுடும்பத்துக்கும் நல்லதல்ல .நாட்டுக்கும் நல்லதல்ல, அவன் எதிரிகையில் வீழ்ந்தால் முடிந்தது கதை.

நாட்டு மக்களை சேர்த்து கலகம் செய்தால் இன்னும் மோசம், அதற்காக வேட்டுவனை அரண்மனைக்கும் அழைக்க முடியாது .அதற்கு அரசு விதிமுறைகளில் வழியில்லை.

*"இப்படி ஒரு சிக்கல் இருக்க, ஏகலைவனை அரசவையினரும் துரோணரும் சந்திக்கின்றனர் .
ஏகலைவனின் வித்தையை அர்ஜுனனும் பாராட்டுகின்றான்.."*
*"அர்ஜூனனை மீறி ஜொலித்து நிற்கின்றான் ஏகலைவன், அவனை விட்டுவைப்பது நல்லதல்ல என அரசவை முடிவெடுக்கின்றது."*
*"ஏகலைவன் குரு யார் என கேட்க, அவன் துரோணர் சிலையினை காட்டுகின்றான்."*
*"ஆம் ! துரோணரை மனதால் வணங்கி, வளர்ந்து, தானே வித்தை பயின்றவன் ஏகலைவன்*
*"எல்லோரும் ஏகலைவன் துரோணரின் சிலையை காட்டியதும் அதிர்கின்றனர்.
*"காரணம் துரோணர் அரசகுடும்பத்துக்கு மட்டுமே ஆசிரியர்.."*
*"அப்படியானால் இவனை இவ்வளவு திறமையாக அவர் உருவாக்க காரணம் என்ன எனும் சந்தேக கேள்விகள் எழுகின்றன‌"*
*"துரோணர் அரச குடும்பத்துக்கு எதிராக, ஒருவனை ரகசியமாக வளர்ப்பதாக சந்தேகம் அவர்மீதே படர்கின்றது,.."*
*"அரசகுடும்பத்துடன் உறவாடுவது, ராஜநாகத்துடன் உறவாடுவதற்கு சமம்"*
*"சிக்கலில் தவிக்கின்றார் துரோணர், ராஜதுரோக குற்றசாட்டு அவர்மேல் சுமத்தபடும் ஆபத்து நெருங்கிற்று, இதன் சூத்திரதாரி கிருஷ்ணர்"*
*"அவரை காக்கும் ஒரே நம்பிக்கையாக ஏகலைவன் நிற்கின்றான்."*
*"அவன் நிச்சயம் துரோணரின் பெருமைக்கு உரியவன். துரோணரின் மாபெரும் மகிழ்ச்சியும் சாதனையும் அவன்."*
ஆனால் விதி?
*"துரோணருக்கு அவனை விடவும் முடியவில்லை. எடுக்கவும் முடியவில்லை, தவிக்கின்றார்."*
*"ஆம் ! அரச கட்டளை மீறி அவர் என்ன செய்யமுடியும்?."*
"*அவனை கொல்லவேண்டிய இடம் அது, ஆம் அரசனின் கோபம் அவனை முதலில் கொல்லும் துரோணரை அடுத்து கொல்லும், ராஜதுரோகம் எனும் குற்றத்துக்கான தண்டனை அது."*
*"யோசித்தார் துரோணர், அந்த சீடன் அழிவதில் அவருக்கு விருப்பமில்லை. அவனை பலமிழக்க வைத்தால் போதுமென ,குருதட்சனையாக கட்டைவிரலை கேட்கின்றார்."*
*"குரு கேட்டால் தலையை கொடுக்கவும் துணியும் ஏகலைவன் ,கட்டை விரலை மகிழ்வாய் கொடுத்து பலமிழக்கின்றான்."*
*"இனி அவனால் வில்வித்தை அவ்வளவு துல்லியமாக செய்யமுடியாது."*
*"குருவுக்கு சிஷ்யன் கொடுக்கும் காணிக்கை அவரை காக்கும் என்பது சாஸ்திர நம்பிக்கை ."*
*"கண்ணீரோடு அவனின் கட்டை விரலை , தாயத்தில் வைத்து கழுத்தில் கட்டிகொள்கின்றார் துரோணர்."*
*"அந்த காட்சி உருக்கமானது, கண்ணீர் வரவழைக்கும் காட்சி அது. துரோணருக்கு அவனை போல மாணவன் இல்லை, நல்ல ஆசிரியனுக்கு சிறந்த மாணவனை விட பெருமை எது?
ஆனால் விதி?
*"அப்பக்கம் ஏகலவைனுக்கோ குருநாதருக்காக வித்தையினையே கொடுத்துவிட்ட தியாக மகிழ்ச்சி, தன் கட்டைவிரல் அவர் கழுத்தில் இருப்பதில் அளவற்ற மகிழ்ச்சி."*
*"தானே அவரின் மார்பில் சாய்ந்ததாக மகிழ்ந்தான், துரோணர் அரண்மனை திரும்பினார்."*
*'ஆம்! துரோணர் அவன் உயிரை காத்தார், அவன் துரோணர் உயிரை காத்தான்."*
*"காலங்கள் ஓடின பாண்டவருக்கும், கௌரவருக்கும் யுத்தம் நெருங்கிற்று."*
*"ஒவ்வொருவரின் பலத்தையும் அளந்த கிருஷ்ணர் ,துரோணர் பக்கமும் வருகின்றார், ஏற்கனவே கட்டை விரல் வாங்க காரணமே அந்த மாயவனே!"*
*"வில்வித்தை ஒன்றுக்காக கர்ணணையே அரசனாக்கி கைக்குள் வைத்திருக்கும் துரியன் ."*
*"ஏகலைவன் கிடைத்தால் விடுவானா? "*
*"கிருஷ்ணரின் கவலை கிருஷ்ணருக்கு"*
*"துரோணர் கழுத்தில் இருப்பது உன்னதமான சிஷ்யனின் காணிக்கை, அது துரோரணை சாகவிடாது , அது இருக்கும்வரை துரோணர் வீழமாட்டார்"*
என்ன செய்யலாம்?
*"அதே வித்தைதான், ஏழை அந்தணராக மாறிய கிருஷ்ணர் யாசகனாய் வந்தார் , தன் மகளுக்கு திருமணமென்றும் ஒரு தாலிக்கும் வழியில்லை எனவும் அழுது அந்த தாயத்தையே உற்று பார்த்தார்."*
*"குறிப்பறிந்த துரோணர் இதைவிட பெரும் தாலி இல்லை, இது ஆசிமிக்கது என அதை வழங்கினார்,"*
*"துரோணரின் கழுத்தில் இருந்த அந்த பெரும் கவசத்தை அகற்றினார் கிருஷ்ணர்"*
*"அதன்பின் எல்லாம் முடிந்தது."*
*"சாகும் வேளையில் துரோணர் முன் தன் புல்லாங்குழலை காட்டினார் கிருஷ்ணர். அதில் அந்த விரலை பதித்திருந்தார்."*
*"அதை கண்டவுடன் துரோணருக்கு எல்லாம் விளங்கிற்று."*
*"மெல்ல பேசினார் கிருஷ்ணர். அவர் குரல் அந்த ஞான தத்துவத்தை போதித்தது."*
*"துரோணாச்சாரியே.. சிஷ்யர்களில் எல்லாம் உயர்ந்தவன் ஏகலைவன், ஆசிரியரில் எல்லாம் உயந்தவன் நீங்கள்."*
*"உங்களுக்குள்ளான உணர்வும் புரிந்துணர்வும் பாசமும் எந்த குருவுக்கும் சீடனுக்கும் அமையாது."*
*"அவனை அன்றே கொன்றிருந்தால், நீங்கள் பாவியாயிருப்பீர்கள் விட்டிருந்தால் அவனை நீங்களே வளர்த்தீர்கள் என பழிசுமந்திருப்பீர்கள் ,
*"அவன் பாண்டவர் பக்கம் வந்தாலும் கௌரவர் பக்கம் வந்தாலும் பழி உமக்கே*"
*"உம் மாணவர்களின் அர்ஜூனன் பெரும் அடையாளம். ஆனால் நீ நேரடியாக பயிற்றுவித்தாய்."*
*"ஆனால் உன்னை மனதால் வணங்கி வளர்ந்த ஏகலைவனே அவனை விட உயர்ந்தவன் ."*
*"ஒரு மாணவன் எப்படி இருக்க வேண்டும் என்பதன் அடையாளம் ஏகலைவன்."*
*"அங்கு உன் உயிரை அவன் காத்து மாணவனின் கடமையினை செய்தான்,."*
*"நீங்கள் அவன் உயிரை காப்பாற்றி ஆசிரியனுக்குரிய கடமையினை காத்தீர்கள்."*
*"நீங்கள் கேட்டவுடன் கொடுத்த அந்த விரல், அவனின் தியாகத்துக்கும் குருசிஷ்ய பாவத்துக்கும் என்றும் எடுத்துகாட்டாய் இருக்கும்."*
*"உங்கள் பெயர் இருக்குமிடமெல்லாம் அவனும் இருப்பான்..."*
*"மேலும் துரோணரிடம் புத்திர பாசம் மோகத்தில் இருந்து விடுபடவும், தர்ம வழியில் நடக்கவும் உயிரை தியாகம் செய்ய பணிக்கிறார் கிருஷ்ணர் ."*
*"அந்த புல்லாங்குழலின் இருந்த விரலை நோக்கியபடியே உயிர்நீத்தார் துரோணர்"*

ஆம் ! நல்ல மாணவன் ஆசிரியர் வரலாற்றில் நிலைப்பான் என்பதுதான் ஏகலைவன் வாழ்வின் தத்துவம். மகாபாரதத்தின் ஒவ்வொரு காட்சியும் சிலாகிப்பானவை, வெற்று பாத்திரம் என்றோ தேவையற்ற திணிப்பு என்றோ எதுவுமில்லை. ஆயிரம் அர்த்தமும் உருக்கமும் தியாகமும் நிறைந்த காட்சி ஏகலைவன் துரோணர் காட்சி, அது சொல்லும் தத்துவம் ஏராளம்.

ஏகலைவன் கதை போல கொண்டாடபட வேண்டிய ஆயிரம் கதைகள் உண்டு. பெரும் அர்த்தமும் ஞானமும் பெற அவற்றையெல்லாம் படிக்க வேண்டும். நமது நாட்டின் பெரும் அறிவார்ந்த ஞான புதையலை மற்றவர்களுக்கு நம்மால் முடிந்த அளவு விளக்க வேண்டும். நம் பாரம்பரியத்திற்கு ஏற்றவாறு நடக்கவேண்டிய பொறுப்பும் கட்டுப்பாடும் எக்காலத்திற்கும் நமக்கு உண்டு என்பதை, நாம் நினைவில் கொள்வோமாக!.

Drona-Ekalaiva


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Agathiyar Malai | Pothigai Malai | Agasthyarkoodam | அகஸ்தியர் மலைய Part 1

Parvathamalai History | பர்வதமலை வரலாறு

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,