தூபங்களும் அதன் பயன்களும் .
தூபங்களும் அதன் பயன்களும் .நான் சொல்ல வரது நல்ல தூபமாக்கும் .
சந்தனத்தில்- தூபமிட தெய்வ கடாட்சம் உண்டாம்.
சாம்பிராணியில்- தூபமிட கண் திருஷ்டி பொறாமை நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.
ஜவ்வாது - தூபமிட திடீர் அதிர்ஷ்டம் கிட்டும்.
அகிலி - தூபமிட குழந்தை பாக்கியம் உண்டாகும்.
துகிலி-தூபமிட குழந்தைகளுக்கு நற்ஆயுள் அழகு ஆரோக்கியத்தினை உண்டாகும்.
துளசி_தூபமிட -காரியத்தடை திருமணத்தடை நீங்கி விரைவில் நடந்தேறும்.
தூதுவளை - தூபமிட எந்நாளும் வீட்டில் தெய்வங்கள் அருள் புரியும்.
வலம்புரிக்காய்- தூபமிட பன்னிரண்டு வகையான பூத கணங்களும் நீங்கும்.
வெள்ளைகுங்கிலியம் தூபமிட துஷ்ட அவிகள் இருந்தவிடம் தெரியாது நீங்கிவிடும்.
வெண்கடுகு --- தூபமிட பகைமை எதிர்ப்புகள் விலகும்.
நாய்கடுகு - தூபமிட துரோகிககள் நம்மை கண்டு ஓடுவர்.
மருதாணிவிதை -- தூபமிட சூனிய கோளாறுகளை நீக்கும்.
கரிசலாங்கன்னி தூபமிட மகான்கள் அருள்கிட்டும்.
வேப்பம்பட்டை- தூபமிட ஏவலும் பீடையு நீங்கும்.
நன்னாரிவேர் - தூபமிட இராஜவசியம் உண்டாக்கும்.
வெட்டிவேர்-தூபமிட காரியங்களும் சித்தியாகும்
வேப்பஇலைதூள் -- தூபமிட சகலவித நோய் நிவாரணமாகும்.
மருதாணிஇலைதூள் --- தூபமிட இலட்சுமி கடாட்சம் உண்டாகும்.
அருகம்புல்தூள் தூபமிட சகல தோஷமும் நிவாரணமாகும்.
தினமும் வீடு, கடை, தொழிற்சாலை, பாடசாலை, அலுவலகம் போன்ற இடங்களில், இறைவனை நினைத்து தூபமிட்டாலே அவ்விடத்தில் அமைதியும் நற்சூழலும் அமைந்து அங்கு நடக்கும் நடைபெறும் செயல்கள் யாவும் சிறப்பாக அமையப்பெறும்!
கருத்துகள்