நவபாஷாணம் என்றால் என்ன?

இரகசியங்களும், உண்மை தகவல்களும் !!
🌻 நவம் என்றால் ஒன்பது, பாஷாணம் என்றால் விஷம். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்கள். சித்தர்கள் முறைப்படி ஒன்பது விஷங்களை சேர்த்துக் கட்டுவது தான் நவபாஷாணம் ஆகும். பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளனவாம்.

🌻 இதில் நீலி எனும் ஓர் பாஷாணமும் உண்டு. இந்த நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க வைக்கக் கூடிய தன்மையுடையது ‼..... நவபாஷாணம் என்று கூறப்படும் இந்த ஒன்பது வகையான பாஷாணக்களுக்கும் தனித்தனியாக வேதியல், இயற்பியல் பண்புண்டு.
| நவபாஷாணம் |

🌻 சித்தரியல் முறைப்படி அணுக்களைப் பிரித்து, மீண்டும் சேர்ப்பதை நவபாஷாணம் கட்டுதல் என்கிறார்கள். இதில் அடங்கியிருக்கும் ஒன்பது பஷாணங்கள்:

#1 .... சாதிலிங்கம்
#2 .... மனோசிலை
#3 .... காந்தம்
#4 .... காரம்
#5 .... கந்தகம்
#6 .... பூரம்
#7 .... வெள்ளை பாஷாணம்
#8 .... கௌரி பாஷாணம்
#9 .... தொட்டி பாஷாணம்

| நவக்கிரக தன்மை |
🌻 இந்த நவ பாஷாணத்தின் தன்மையில் நவகிரகங்களின் குணங்கள் ஒத்துள்ளன என்று கூறப்படுகிறது. .நவபாஷாண கட்டு என்பது சித்தர்களால் மட்டுமே சாத்தியமான விஷயமாகும்
| நவக்கிரக சக்தி |
🌻 நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வசிலைகள், நவக்கிரகங்களின் சக்தியை பெற்றுவிடுகிறது என்பது நம்பிக்கையாகும் !!
| தமிழ்நாட்டில் நவபாஷாண சிலைகள் |

🌻 தமிழ் நாட்டில் மூன்று இடங்களில் நவபாஷாண சிலைகள் உள்ளன.
💎 பழனி மலைக்கோவில்,
💎 கொடைகானல் அருகே உள்ள பூம்பாறை,
💎 குழந்தை வேலப்பர் கோயில் அமைந்துள்ளது.

| நவபாஷாண சிலைகள் உருவாக்கியாவர்கள் |
🌻 மூன்றில் இரண்டு சிலைகள் போகர் உருவாக்கியவை
|நவக்கிரக தோஷம் கழியும் |
நவபாஷாணங்களால் உருவான சுவாமி சிலையை வழிப் படுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் தீங்கு நீங்கும். பழனிமலை தண்டாயுதபாணியை வழிப்படுபவர்கள் நவக்கிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம் என்று கருதப்படுகிறது.
| நோய் தீர்க்கும் மருந்து |

🌻 பழனி முருக திருவுருவத்திற்கு அபிஷேகம் செய்த நீரை / தீர்த்தம் பருகுவதால் (அ) சாப்பிட்டால் தீராத நோய்களும் கூட தீர்ந்துவிடும் என்று கூறப்படுகிறது .





கருத்துகள் இல்லை:

Featured Post

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,

276 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளேன். காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது. எண் - கோயில் - இருப்பிடம்...