இராமேஸ்வரம் தீர்த்தங்கள் | Rameswaram Theertham

ஸ்ரீ இராமநாதசுவாமி கோவிலுக்கு வெளியில் உள்ள முதல் தீர்த்தம் அக்னி தீர்த்தம் சமுத்திரமாகும்

கோவிலுக்குள் 22 தீர்த்தங்கள் உள்ளன.
1. மகாலட்சுமி தீர்த்தம் : இத்தீர்த்தத்தில் நீராடுவதால் சகல ஐஸ்வர்யமும் பெறலாம்,
2. சாவித்திரி தீர்த்தம், 3. காயத்ரி தீர்த்தம், 4. சரஸ்வதி தீர்த்தம் : இம்மூன்று தீர்த்தங்களில் நீராடுவதால் மத சடங்குகளை விட்டவர், சந்ததியில்லாதவர் இஷ்ட சித்தி அடையலாம்,
5. சங்கு தீர்த்தம் : இத்தீர்த்தத்தில் நீராடுவதால் செய்நன்றி மறந்த சாபம் நீங்கப் பெறும்,
6. சக்கர தீர்த்தம் : இத்தீர்த்தத்தில் நீராடுவதால் ஊனம், குருடு, செவிடு ஆகியவை நீங்கி சௌக்கியம் கிட்டும்,
7. சேது மாதவ தீர்த்தம் : இத்தீர்த்தத்தில் ஸ்ரீராமபிரானால் சகலலெட்சுமி கடாட்சமும், சித்த சக்தியும் பெறலாம்,
8. நள தீர்த்தம் : இத்தீர்த்தத்தில் நீராடுவதால் எத்துறையிலும் வல்லுனர் ஆகலாம்,
9. நீல தீர்த்தம் : இத்தீர்த்தத்தில் நீராடுவதால் சமஸ்தயாக பலனையும் அடைந்து சொர்க்கலோக பதவி அடையலாம்,
10. கவாய தீர்த்தம் : இத்தீர்த்தத்தில் நீராடுவதால் மனவலிமை , தேக ஆரோக்கியம் கிடைக்கும்,
11. கவாட்ச தீர்த்தம் : இத்தீர்த்தத்தில் நீராடுவதால் நரகத்திற்கு செல்ல மாட்டார்கள்.
12. கந்தமாதன தீர்த்தம் : இத்தீர்த்தத்தில் நீராடுவதால் மகாதரித்திரம் நீங்கி ஐஸ்வர்ய சித்தி பெறுவர்,
13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம் : இத்தீர்த்தத்தில் நீராடுவதால் பிரம்மஹத்தி தோஷங்களும், பாவங்களும் நிவர்த்தியாவதடன், பில்லி சூனியமும் நீங்கும்,
14. கங்கா தீர்த்தம், 15. யமுனை தீர்த்தம், 16. கயாத்ரி தீர்த்தம் : இம்மூன்று தீர்த்தங்களில் நீராடுவதால் எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்கும்,
17. சர்வ தீர்த்தம் : இத்தீர்த்தத்தில் நீராடுவதால் பிறவிக்குருடு, நோயும் நரை திரையும் நீங்கி வளமடையலாம்,
18. சிவ தீர்த்தம் : இத்திர்த்தத்தில் நீராடுவதால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்,
19. சாத்யாம்ருத தீர்த்தம் : இத்திர்த்தத்தில் நீராடுவதால் ஆயுள் விருத்தி ஆகும், பிராமண சாபம் நிவர்த்தியாகும்,
20. சந்திர தீர்த்தம் : இத்திர்த்தத்தில் நீராடுவதால் கலையார்வம் பெருகும்,
21. சூரிய தீர்த்தம் : இத்திர்த்தத்தில் நீராடுவதால் முதன்மை ஸ்தானம் கிடைப்பதுடன் ரோகங்கள் நிவர்த்தியாகும்,
22. கோடி தீர்த்தம் : இத்திர்த்தத்தில் நீராடுவதால் முக்தி (மறுபிறவி இல்லாத நிலை) கிடைக்கும். இந்நீரானது இராமநாதசுவாமி மற்றும் எல்லா சுவாமி அம்பாள் ஆகியவர்கள் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுக்கிறது. கோடி திர்த்தத்தில் நிராடியபின் இவ்வூரில் இரவு தங்கலாகாது என்பது சம்பிரதாயம்.

                                                 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Agathiyar Malai | Pothigai Malai | Agasthyarkoodam | அகஸ்தியர் மலைய Part 1

Parvathamalai History | பர்வதமலை வரலாறு

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,